News April 21, 2025

முன்னாள் DGP-ஐ கொன்ற மனைவி.. பரபரப்பு வாக்குமூலம்

image

கணவரை கொன்றுவிட்டு, தனது தோழியிடம் வீடியோ காலில் பேசியதாக <<16162893>>கர்நாடகா<<>> முன்னாள் DGP ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அரக்கனை கொன்றுவிட்டதாக தோழியிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். நிலங்களை கணவர் தன் குடும்பத்தாருக்கு எழுதி வைத்ததால் இருவருக்கும் பிரச்னை தொடங்கியது. நேற்று வாக்குவாதம் முற்றிய நிலையில், மிளகாய் பொடி தூவி பல்லவி குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

News April 21, 2025

ரெய்னாதான் CSK கேப்டனாக இருத்திருக்கனும்: ஹர்பஜன்

image

CSK-வுக்கு முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாதான் கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ரெய்னா இன்னும் 3 ஆண்டுகள் CSK-வுக்காக விளையாடி இருக்க வேண்டும் எனவும் சென்னை நிர்வாகம் அவருக்கு உறுதுணையாக இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். நடப்பு சீசனில் மோசமாக விளையாடி வரும் சென்னை அணி பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது.

News April 21, 2025

நடிகர்களை மிஞ்சிய இயக்குநர்.. 200 கோடி சம்பளமா?

image

திரையுலகில் எப்போதுமே படத்தின் கேப்டனான இயக்குநர்களை விட நடிகர்கள்தான் அதிகமாக சம்பளம் வாங்குவார்கள். ஆனால் ஷாருக்கான் போன்ற சூப்பர் ஸ்டார்களை விட இயக்குநர் ராஜமௌலி அதிக சம்பளம் பெறுகிறாராம். IMDB தகவலின்படி சம்பளம், லாபத்தில் பங்கு உள்ளிட்டவை சேர்த்து ₹200 கோடிக்கு மேல் ராஜமௌலிக்கு ஒரு படத்தில் கிடைக்கிறதாம்.

News April 21, 2025

BREAKING: காங். MLA-வுக்கு 3 மாதம் சிறை

image

காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவரும், கிள்ளியூர் காங். MLAவுமான ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு புறம்போக்கு நிலங்களை மீட்கச் சென்ற அரசு அதிகாரிகளை தாக்கியதாக அவர் உள்பட 3 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தற்போது மூவருக்கும் சிறை தண்டனையுடன் ₹100 அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

News April 21, 2025

யாருடன் கூட்டணி? டிசம்பரில் முடிவு..

image

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பருக்குப் பிறகே தவெக முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டில் அக்கட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைக்கு தேர்தல் களப்பணிகளில் நிர்வாகிகளை ஈடுபட வைப்பதில் விஜய் கவனம் செலுத்தி வருவதாகவும், அதன் பின் மக்களை சந்தித்துவிட்டு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பேசப்படுகிறது.

News April 21, 2025

மகன் உடல்நலம் குறித்து அவதூறு.. நெப்போலியன் புகார்

image

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் புகார் அளித்துள்ளார். தனது மகன் தனுஷ், மருமகள் அக்‌ஷயா ஆகியோர் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்கிறார்கள். அப்படி இருக்கையில் அவர்கள் உடல்நலம் குறித்து சிலர் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

News April 21, 2025

பாஜக MP மீது கிரிமினல் வழக்கு?

image

SC மற்றும் தலைமை நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய <<16159926>>பாஜக<<>> எம்பி நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடரலாமா என வழக்கறிஞர் ஒருவர் SC-யிடம் அனுமதி கேட்டார். அதற்கு கோர்ட்டின் அனுமதி தேவைப்படாது, ஆனால் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலின் ஒப்புதலை பெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆளுநர் மற்றும் வக்ஃப் விவகாரத்தில் SC-யின் தீர்ப்பை துபே கடுமையாக சாடியிருந்தார்.

News April 21, 2025

பேக்கரி டீலிங் திமுகவுக்குதான் பொருந்தும்.. இபிஎஸ் பதிலடி

image

பேக்கரி டீலிங் திமுகவுக்குதான் பொருந்தும் என்று இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். வடிவேலு காமெடியில் வருவது போல அதிமுக பேக்கரி டீலிங் செய்து 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்ததாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்திருந்தார். இந்த டீலிங் திமுகவுக்கு கைவந்த கலை என்றும், அறிவாலய மேல்தளத்தில் சிபிஐ சோதனை நடத்தியபோது, கீழ்தளத்தில் திமுக கூட்டணி பேச்சு நடத்தி கொண்டிருந்ததாக இபிஎஸ் பதிலடி கொடுத்தார்.

News April 21, 2025

போப் ஆண்டவர் மறைவால் வேதனையடைந்தேன்: ஸ்டாலின்

image

கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இரக்கமுள்ள, முற்போக்கான குரலாக ஒலித்தவர் போப் பிரான்சிஸ், ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் & ஆறுதல் என தெரிவித்துள்ளார்.

News April 21, 2025

வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுக்கு தடையா?

image

கொல்கத்தா மைதானத்தில் பிட்ச் குறித்து வர்ணனையாளர்கள் ஹர்ஷா போக்லேயும், சைமன் டவுலும் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. KKR அணிக்கு சாதகமாக இல்லாத கொல்கத்தா மைதானத்தில் இருந்து வேறு இடத்துக்கு அவர்கள் மாற வேண்டும் என இருவரும் தெரிவித்திருந்தனர். இதனால் இருவரும் இனி கொல்கத்தாவில் நடக்கும் போட்டிகளில் வர்ணனை செய்ய தடை கோரி பெங்கால் கிரிக்கெட் சங்கம் BCCI-க்கு கடிதம் எழுதியுள்ளது.

error: Content is protected !!