India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதற்காக ₹30,000 முதல் ₹78,000 வரை மானியம் வழங்குகிறது PM சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டம். இதன்படி, உங்க வீட்டில் 4 கிலோவாட் சோலார் பேனல்களை அமைத்தால், ₹2,00,000 வரை செலவாகும். இதில் ₹78,000 வரை அரசு மானியமாக தருகிறது. ஆன் கிரிட் சோலார் பேனல் வகைக்கு மட்டுமே இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் SHARE THIS.

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. இவற்றில் A, B, C ஆகியவற்றின் மதிப்பை சொல்லுங்க. HINT: 3A= 39 என்றால், ஒரு A எவ்வளவு என யோசிங்க. B & C எவ்வளவு என ஈசியாக கண்டுபிடிச்சிடலாம். சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க?

நெல் கொள்முதல் விவகாரத்தில் EPS கூறியவை அனைத்தும் புளுகு மூட்டைகள் என CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். ஆக்கப்பூர்வமாக, மக்களுக்கு உறுதுணையாக எதையும் செய்ய எண்ணமில்லை என சாடிய அவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் அறுவடை செய்ய முடியுமா என EPS செயல்படுகிறார் என விமர்சித்தார். மேலும், பொய்களையும், அவதூறுகளையும் புறந்தள்ளி மக்களுக்காக நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உணவு ஆர்டர் செய்யும்போது, அவை கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் டெலிவரி ஆகும். இந்த டப்பாவை கழுவி, மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் பலருக்கும் உள்ளது. இது மிக ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இந்த பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள BPA, phthalates உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் இதய- ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளதாம்.

டெல்டா மாவட்டங்களில் கனமழை & லாரிகள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் தேங்கி இருந்தது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள 121 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாகியுள்ளது. நாகையில் மட்டும் இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ₹183.19 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சையிலும் கொள்முதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு, தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராகிவிட்ட நெல்சன், ஜெயிலர் 2-வில் பிஸியாக உள்ளார். இப்படத்தை தொடர்ந்து அவர், ரஜினி- கமல் படத்தை இயக்குவார் எனக் கூறப்படும் நிலையில், மற்றொரு செய்தியும் கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. நடிகர் ராம் சரணுடன் நெல்சன் இணையவுள்ளார் என்றும், இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது.

150 டிகிரிகளை முடித்துள்ள சென்னையை சேர்ந்த பேராசிரியர் VN பார்த்திபன் ‘பட்டங்களின் களஞ்சியம்’ என போற்றப்படுகிறார். தனது முதல் பட்டப்படிப்பில் ஜஸ்ட் பாஸானதை அடுத்து, தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில் 1981-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அயராமல் படித்து வருகிறார். MA, MCom, MSc, ML, MPhil, MBA உள்ளிட்ட பல பட்டங்களை வாங்கியுள்ளவர், 200 பட்டங்களை பெறுவதே தனது இலக்கு என்கிறார்.

நெல் மணிகளை பிடித்திருக்க வேண்டிய முதல்வரின் கைகள், படக்குழுவினரின் கைகளை பற்றியுள்ளதாக EPS விமர்சித்துள்ளார். பைசன் படக்குழுவை CM பாராட்டியதை சுட்டிக்காட்டிய அவர், படம் பார்த்து பாராட்ட நேரம் இருக்கும் முதல்வருக்கு விவசாயிகளின் வேதனையை கேட்க நேரம் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மழையில் நனைந்து முளைத்த நெல்லை பிடித்த போது, விவசாயிகளின் வேதனையை உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

<<18108169>>’மொன்தா’ புயல்<<>> முன்கூட்டியே உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை மீட்பு ஆணையத்தில் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நாளை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து முன்கூட்டியே முடிவெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளித்துள்ள TN அரசு, ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் தினமும் 1,000 மூட்டை, நெல் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ள அரசு, ஞாயிற்றுக்கிழமையும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.