News October 26, 2025

SIR தமிழகத்தில் நடக்க கூடாது என்பதில் உறுதி: கனிமொழி

image

பிஹார் போன்ற பல மாநிலங்களில் SIR-ஐ பயன்படுத்தி லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக MP கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். இதுபோல தமிழ்நாட்டில் நடக்க கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிஹார் தேர்தலில் நீதியும், ஜனநாயகமும் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

News October 26, 2025

BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி

image

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் நாளை ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இது கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணையில் தவெக தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அக்கட்சியின் வழக்கறிஞர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பிற நிர்வாகிகளும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News October 26, 2025

வெளிநாட்டு கல்வி மோகம் குறைந்துவிட்டதா?

image

வெளிநாட்டுக் கல்விக்காக இந்திய மாணவர்கள் செலவிடும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவை கண்டுள்ளது. 2024 ஆகஸ்டில் ₹3,688 கோடியாக இருந்த தொகை 24% சரிந்து, 2025 ஆகஸ்டில் ₹2,800 கோடியாக குறைந்ததுள்ளது. இதனால், இந்தியர்கள் மத்தியில் வெளிநாட்டு படிப்பின் மீதான மோகம் குறைந்து வருவதாகவும், உள்நாட்டில் கல்வியின் தரம் அதிகரித்திருப்பதை இதை காட்டுகிறது எனவும் RBI தெரிவித்துள்ளது.

News October 26, 2025

ரஜினி கதையில் விஜய் சேதுபதி!

image

‘ரெட்ரோ’ படத்திற்கு பிறகு, புது முகங்களை வைத்து சின்ன பட்ஜெட் படம் ஒன்றை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். அதே நேரத்தில் அவர் ரஜினிக்காக கதை ஒன்றை ரெடி செய்து விட்டு, நீண்ட காலமாக வெயிட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ரஜினி மற்ற படங்களில் தொடர்ந்து பிஸியாக இருப்பதால், தற்போது அதே கதையில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

News October 26, 2025

கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

image

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 101, பாஜகவுக்கு 101 என சமமாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாஜகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியதால், ஐக்கிய ஜனதா தளத்திற்குள் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், அதிருப்தியை வெளிப்படுத்திய அக்கட்சியை சேர்ந்த MLA சுதர்சன் குமார், 4 EX MLA-க்கள் உள்ளிட்ட 11 பேரை நிதிஷ் அதிரடியாக நீக்கியுள்ளார்.

News October 26, 2025

பேரிடர் காலத்தில் உங்கள் உயிரை காக்கும் APP

image

பேரிடர் காலத்தில் உங்கள் உயிரை காக்க TN ALERT செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது TN அரசு. இதில், வெள்ளம், புயல், சுனாமி போன்ற பேரிடர்களுக்கான எச்சரிக்கையை முன்கூடியே வழங்கப்படும். பேராபத்துகளின் போது அதிக ஒலி எச்சரிக்கைகளை எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மழை குறித்த அப்டேட்களும் இதில் கிடைக்கும் என்பதால் Playstore-ல் டவுன்லோட் பண்ணிக்கோங்க. பலரது உயிர்காக்கும் இத்தகவலை SHARE பண்ணலாமே.

News October 26, 2025

BJP-ன் SIR கணக்கு TN-ல் தப்பாகும்: CM ஸ்டாலின்

image

SIR-ஐ வைத்து வாக்காளர் பட்டியலில் உழைக்கும் மக்களின் பெயர்களை நீக்கி வெற்றிபெறலாம் என்ற BJP-யின் கணக்கு, TN-ஐ பொறுத்தவரை தப்பாகத்தான் ஆகும் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த அதிமுகவுக்கு மக்களின் உரிமைகள் பற்றி கவலைப்பட நேரமில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். SIR செயல்பாட்டில் திமுகவினர் கண்காணிப்பாக இருந்து செயல்பட வேண்டும் என்று CM அறிவுறுத்தியுள்ளார்.

News October 26, 2025

புயல் அலர்ட்: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

image

மொன்தா புயல் முன்கூட்டியே இன்று மாலை உருவாகிறது. கனமழை பெய்யும் என்பதால் முதல் மாவட்டமாக புதுவையின் ஏனாமில் அக்.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு மிக கனமழை, விழுப்புரம், செங்கல்பட்டுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

News October 26, 2025

BREAKING: வேகமெடுக்கும் புயல்.. 11 மாவட்டங்களில் கனமழை!

image

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(அக்.27) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. <<18108169>>மொன்தா புயல் இன்று<<>> மாலையே உருவாகும் என ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

News October 26, 2025

பெண்கள் வளர்ச்சியில் தமிழகம் டாப்: தங்கம் தென்னரசு

image

நேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ₹11 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை தங்கம் தென்னரசு வழங்கினார். அதன்பின் பேசிய அவர், மகளிர் சுய உதவிக்குழுக்களால் பெண்களின் பொருளாதாரம் உயர்வதோடு, சமூக மாற்றமும் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணியாற்றும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சமூக முன்னேற்றத்திலும் மிக உயர்ந்த நிலையில், தமிழகம் இருப்பதற்கும் பெண்கள்தான் காரணம் என்றார்.

error: Content is protected !!