India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘ரெட்ரோ’ படத்திற்கு பிறகு, புது முகங்களை வைத்து சின்ன பட்ஜெட் படம் ஒன்றை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். அதே நேரத்தில் அவர் ரஜினிக்காக கதை ஒன்றை ரெடி செய்து விட்டு, நீண்ட காலமாக வெயிட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ரஜினி மற்ற படங்களில் தொடர்ந்து பிஸியாக இருப்பதால், தற்போது அதே கதையில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 101, பாஜகவுக்கு 101 என சமமாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாஜகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியதால், ஐக்கிய ஜனதா தளத்திற்குள் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், அதிருப்தியை வெளிப்படுத்திய அக்கட்சியை சேர்ந்த MLA சுதர்சன் குமார், 4 EX MLA-க்கள் உள்ளிட்ட 11 பேரை நிதிஷ் அதிரடியாக நீக்கியுள்ளார்.

பேரிடர் காலத்தில் உங்கள் உயிரை காக்க TN ALERT செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது TN அரசு. இதில், வெள்ளம், புயல், சுனாமி போன்ற பேரிடர்களுக்கான எச்சரிக்கையை முன்கூடியே வழங்கப்படும். பேராபத்துகளின் போது அதிக ஒலி எச்சரிக்கைகளை எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மழை குறித்த அப்டேட்களும் இதில் கிடைக்கும் என்பதால் Playstore-ல் டவுன்லோட் பண்ணிக்கோங்க. பலரது உயிர்காக்கும் இத்தகவலை SHARE பண்ணலாமே.

SIR-ஐ வைத்து வாக்காளர் பட்டியலில் உழைக்கும் மக்களின் பெயர்களை நீக்கி வெற்றிபெறலாம் என்ற BJP-யின் கணக்கு, TN-ஐ பொறுத்தவரை தப்பாகத்தான் ஆகும் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த அதிமுகவுக்கு மக்களின் உரிமைகள் பற்றி கவலைப்பட நேரமில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். SIR செயல்பாட்டில் திமுகவினர் கண்காணிப்பாக இருந்து செயல்பட வேண்டும் என்று CM அறிவுறுத்தியுள்ளார்.

மொன்தா புயல் முன்கூட்டியே இன்று மாலை உருவாகிறது. கனமழை பெய்யும் என்பதால் முதல் மாவட்டமாக புதுவையின் ஏனாமில் அக்.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு மிக கனமழை, விழுப்புரம், செங்கல்பட்டுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(அக்.27) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. <<18108169>>மொன்தா புயல் இன்று<<>> மாலையே உருவாகும் என ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

நேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ₹11 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை தங்கம் தென்னரசு வழங்கினார். அதன்பின் பேசிய அவர், மகளிர் சுய உதவிக்குழுக்களால் பெண்களின் பொருளாதாரம் உயர்வதோடு, சமூக மாற்றமும் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணியாற்றும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சமூக முன்னேற்றத்திலும் மிக உயர்ந்த நிலையில், தமிழகம் இருப்பதற்கும் பெண்கள்தான் காரணம் என்றார்.

வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதற்காக ₹30,000 முதல் ₹78,000 வரை மானியம் வழங்குகிறது PM சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டம். இதன்படி, உங்க வீட்டில் 4 கிலோவாட் சோலார் பேனல்களை அமைத்தால், ₹2,00,000 வரை செலவாகும். இதில் ₹78,000 வரை அரசு மானியமாக தருகிறது. ஆன் கிரிட் சோலார் பேனல் வகைக்கு மட்டுமே இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் SHARE THIS.

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. இவற்றில் A, B, C ஆகியவற்றின் மதிப்பை சொல்லுங்க. HINT: 3A= 39 என்றால், ஒரு A எவ்வளவு என யோசிங்க. B & C எவ்வளவு என ஈசியாக கண்டுபிடிச்சிடலாம். சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க?

நெல் கொள்முதல் விவகாரத்தில் EPS கூறியவை அனைத்தும் புளுகு மூட்டைகள் என CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். ஆக்கப்பூர்வமாக, மக்களுக்கு உறுதுணையாக எதையும் செய்ய எண்ணமில்லை என சாடிய அவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் அறுவடை செய்ய முடியுமா என EPS செயல்படுகிறார் என விமர்சித்தார். மேலும், பொய்களையும், அவதூறுகளையும் புறந்தள்ளி மக்களுக்காக நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.