India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இரு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ‘C’ பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ₹1 கோடி சம்பளமாக வழங்கப்படும். வேறு எந்த தமிழக வீரரை ஒப்பந்தத்தில் சேர்ந்திருக்கலாம்னு நீங்க சொல்லுங்க…
திருச்சி உறையூர் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு தவறான தகவலை அளித்ததாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். வெக்காளியம்மன் கோயில் திருவிழாவில் கொடுத்த குளிர்பானத்தை அருந்தியதால் தான் மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார். திருவிழாவில் உறையூர் மக்கள் மட்டுமே பங்கேற்றார்களா? அப்படியெனில் மற்ற பகுதி மக்களுக்கு ஏன் பாதிப்பு ஏற்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
டாஸ்மாக் வழக்கில் நாளை மறுநாள் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. டாஸ்மாக்கில் ₹1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக கூறி, அதன் தலைமை அலுவலகத்தில் ED சோதனை நடத்தியது. இச்சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகமும், TN அரசும் வழக்குத் தொடர்ந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை 23-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.
நீட்டை யார் கொண்டு வந்தது என தொடர்ந்து கேள்வி எழுப்பும் இபிஎஸ், அந்த சிக்கலை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எங்கள் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால் நீட் விலக்கு பெற்றிருப்போம். ஆனால், அது நடக்கவில்லை. தற்போது பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், நீங்கள் (இபிஎஸ்) நீட் விலக்கை பெற்று தரலாம் என்று தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நீட் விவகாரத்தில் இபிஎஸ்-க்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. அப்போது, நாங்கள் யாரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை எனக் கூறிய ஸ்டாலின், நீட் விலக்கு தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிக்க அதிமுக தயாரா? என கேள்வி எழுப்பினார். மேலும், நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக உடன் கூட்டணி வைப்போம் என்று கூறுவீர்களா? என்று இபிஎஸ்-க்கு சவால் விடுத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் போபால் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், காரில் பயணம் செய்த 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள் பாட்னாவில் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு இந்தூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது தெரியவந்துள்ளது.
TN சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் தவெக தலைவர் விஜய் வேகம் காட்டி வருகிறார். கடந்த வாரம் கட்சியின் ஐடி பிரிவு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய நிலையில், தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு வரும் 26, 27–ம் தேதிகளில் கோவையில் நடக்கிறது. இதில், தேர்தல் களப்பணிகள் குறித்து விஜய் ஆலோசிப்பார் என தெரிகிறது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டல கமிட்டி நிர்வாகிகள் இதில் பங்கேற்கின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் பொகாராவில் உள்ள லுகு மலைப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சமீப காலமாக சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் நக்சல் தேடுதல் வேட்டையை மத்திய பாதுகாப்பு படை தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் நக்சல்களை ஒழித்துவிடுவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்துள்ளது கவனிக்கத்தக்கது.
சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளை கிரி படத்தில் வரும் வடிவேலு வசனத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் பேசியுள்ளார். இதனால், ஆவேசமடைந்த அதிமுகவினர் அமைச்சருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
நடப்பு ஆண்டுக்கான BCCI-யின் ஒப்பந்தத்தில் ‘A+’ பிரிவில் ரோஹித், விராட், பும்ரா, ஜடேஜா தொடர்கின்றனர். ‘A’ பிரிவில் சிராஜ், ராகுல், கில், பாண்டியா, ஷமி, பண்ட் உள்ளனர். ‘B’ பிரிவில் விடுவிக்கப்பட்டிருந்த ஷ்ரேயஸ், சூர்யா, குல்தீப், அக்ஷர், ஜெய்ஸ்வால் உள்ளனர். ‘C’ பிரிவில் இஷான் கிஷன் உட்பட 19 வீரர்கள் உள்ளனர். A+ – க்கு ₹7கோடி, A-க்கு ₹5 கோடி, B-க்கு ₹3 கோடி, C-க்கு ₹1 கோடி சம்பளமாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.