India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகாராஷ்டிரா <<18092365>>பெண் டாக்டர் தற்கொலை <<>>வழக்கில், போலீஸ் SI கோபால், மென்பொறியாளர் பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், குற்றவாளிகளை ஆளும் BJP அரசு காப்பாற்ற முயல்வதாகவும், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் அந்த டாக்டரை பொய்யான உடற்கூராய்வு அறிக்கையை கொடுக்க கூறி வற்புறுத்தியதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானத கூறி அந்த டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

பதற்றம் நமது அன்றாட வாழ்க்கையில் அமைதியை குலைத்து, வேலை, உறக்கம், உறவுகள் போன்றவற்றை பாதிக்கக்கூடும். மேலும், தலைவலி, உயர் ரத்த அழுத்தம், சோர்வு, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். எனவே, பதற்றத்தை குறைப்பது மிக அவசியம். இதற்கு என்ன செய்யலாம் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.

வங்கக் கடலில் இன்று மாலை 5.30 மணியளவில் ‘மொன்தா’ புயல் உருவாகவுள்ளதாக IMD கணித்துள்ளது. இதன் எதிரொலியாக, பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இரவு 7 மணி வரை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சி, செங்கை, விழுப்புரம், திருப்பத்தூர், தி.மலை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

. செப்டம்பர் 2025 கணக்கின் படி, நாட்டில் 5.60 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். பொது சேவையில் உள்ள போலீஸ், ராணுவ வீரர்கள், டாக்டர்கள், ஊடகத்துறையினர் போன்றவர்கள் 365 நாளும் பணி செய்யும் நிலையில், நீதிமன்றங்கள் மட்டும் ஏன் 196 நாள்கள் மட்டுமே வேலை செய்கின்றன என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் அல்லவா.. நீங்க என்ன சொல்றீங்க?

ஒருபக்கம் ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்த, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க பொருளாதார தடைகளை விதித்து, பேச்சுவார்த்தைக்கும் முயற்சி செய்து வருகிறார் டிரம்ப். மறுபக்கம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ் நகரில் நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், குழந்தைகள் உட்பட 31 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

படங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது, புக்கிங் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு ஷேர், தயாரிப்பாளர்களுக்கும் தரப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், புக்கிங் நிறுவனம் என மூவருக்கும் பங்கை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் தனியார் பல்கலை., திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இதை திரும்ப பெற வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு, திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டம் மூலம் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகள் கூட, தங்களை பல்கலை.,களாக மாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது உயர்கல்வி வணிகத்தை அதிகரிக்க செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுமை, தன்னம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகிய மூன்றும் இணைந்து உருவாகும்போது பல அற்புதங்கள் நிகழ்கின்றன. இன்று, இந்தியாவில் பல இளம் தொழில் முனைவோர்கள், தங்கள் நிறுவனங்களை பில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்த்தி, “இளம் கோடீஸ்வரர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். அவர்கள் யார் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

ரிஷப் ஷெட்டியின் ’காந்தாரா சாப்டர் 1’ நடப்பு ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அக்.2-ல் வெளியான இப்படம் உலகளவில் ₹809 கோடி வசூலித்துள்ளது. 2வது இடத்தில், விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ‘சாவா’ திரைப்படம் உள்ளது. இப்படம், உலகளவில் ₹807 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக வசூலை ஈட்டிய Top 10 படங்களை தெரிந்துகொள்ள <<18110281>>Click Here<<>>.

விஜய்யின் மாஸ் ஓட்டாக மாறவேண்டும் என்றால், அவருக்கு பயிற்சியுள்ள பயிற்சியாளர்கள் தேவை என்று KTR தெரிவித்துள்ளார். விஜய் கூட்டணிக்கு வந்தால், அதிமுகவினர் அந்த பயிற்சியாளர்களாக இருப்பர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவுடன் இணைந்தால் விஜய்க்கு தான் நல்லது என்று கூறியுள்ள KTR, விஜய் வந்தால், அதிமுக 220 சீட்டில் வெல்லும், வரவில்லை என்றால் 150 சீட்டில் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.