India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெலுங்கானாவில் கிரிக்கெட் விளையாடுகையில் மாரடைப்பு வந்து இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். மேட்சல் ராம்பள்ளியில் உள்ள மைதானத்தில் பிரனீத் (32) என்பவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சரிந்து விழுந்தார். அங்கிருந்தோர் ஹாஸ்பிடலுக்கு அவரை அழைத்து சென்றனர். எனினும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பதால், நிரந்தர பார்வை இழப்பு அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளனர். பார்வை குறைபாடு அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக 0-16 வயது உடையவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2050-க்குள் உலகம் முழுவதும் 50% பேருக்கு MYOPIA குறைபாடு ஏற்படும் எனவும், இது நிரந்தர பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உ.பி.யில் நிகழ்ந்தது ஆன்மிக கும்பமேளா அல்ல, அரசியல் கும்பமேளா என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத்தான் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே கும்பமேளா நடத்தப்பட்டதாகவும், சமூகத்தை மதம், சாதி ரீதியில் பிளவுபடுத்துவதே பாஜகவின் திட்டம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சமூகத்தை பிளவுபடுத்த அதிக நிதியை செலவழிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது மாம்பழ சீசன் களைகட்டியுள்ளது. இதனால் மாம்பழ பிரியர்கள், மாம்பழத்தை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். அவர்களை மேலும் சந்தோஷப்படுத்துவது போல, சென்னை கோயம்பேடு சந்தையில் மாம்பழம் விலை சரிந்துள்ளது. தினமும் 100 டன் மாம்பழம் வருவதே இதற்கு காரணமாகும். இதனால் தேன் மாம்பழம் 1 கிலோ ₹60-₹80க்கும், பங்கனபள்ளி ₹70-₹100க்கும், அல்போன்சா ₹80-₹110க்கும் விற்கப்படுகிறது.
CSK அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல் திரிபாதி அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். அவருக்கு பதில் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அணியில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே ஷேக் ரசீத்துக்கு சென்னை அணி கடந்த போட்டியில் வாய்ப்பளித்த நிலையில் தற்போது மற்றொரு இளம் கன்றுக்கு CSK வாய்ப்பு கொடுத்துள்ளது. என்ன செய்ய காத்திருக்கிறார் ஆயுஷ் என பொறுத்திருந்து பார்க்கலாம்…. இந்த முடிவு சரியா? நீங்க சொல்லுங்க..
சிஎஸ்கே இன்று விளையாடுவது 8-வது போட்டியாகும். இதில் மும்பை இந்தியன்ஸை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் சிஎஸ்கே 2-ல் மட்டும் வென்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆதலால், அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. ஆதலால் இந்த போட்டி, சிஎஸ்கே-வுக்கு வாழ்வா, சாவா போட்டியாகும். இன்று வெற்றி பெறுமா?
சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நடப்பு சீசனின் முதல் பாதியில் மும்பை – சென்னை அணிகளுக்கு சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் மும்பை 3 வெற்றிகளையும், சென்னை 2 வெற்றிகளையும் மட்டுமே பெற்றுள்ளன. இதனால் இரு அணிகளுக்குமே இது வாழ்வா? சாவா? ஆட்டம். யார் ஜெயிக்க போறா? உங்க கணிப்பு என்ன?
உள்ளாட்சி அமைப்புகள் இதுவரை ரூ.1,618 கோடி மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. இதில் தாமதக் கட்டணம் ரூ.137 கோடி ஆகும். இந்த தாமதக் கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கோரி மின் வாரியம் மனுத் தாக்கல் செய்திருந்தது. அதை விசாரித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன், அரசு அலுவலகங்களில் உடனடியாக ப்ரீபெய்டு மீட்டர்களைப் பொருத்தவும் உத்தரவிட்டுள்ளது.
எளிய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் – படிக்கல் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க, அணி எளிதாக வெற்றி பெற்றது. விராட் கோலி 73 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
RCB-க்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும் பின் பஞ்சாப் வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் கடைசி 4 ஓவரில் வெறும் 22 ரன்களை மட்டுமே புவனேஷ்வர் குமாரும், ஹேஷல்வுட்டும் விட்டுக்கொடுத்தனர். இதில் ஒரு சிக்ஸர் மட்டுமே பஞ்சாப் அணியால் அடுக்க முடிந்தது. துல்லியமாக இருவரும் 17 யார்க்கர்களை வீசியதால் பஞ்சாப் ரன்களை சேர்க்க முடியவில்லை.
Sorry, no posts matched your criteria.