India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனம் வருவதால், வசூல் கடுமையாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட இப்படம் ₹100 கோடியை தாண்டுமா என்பதே சந்தேகம். அதேநேரம், தீபாவளிக்கு வெளியான SKவின் அமரன் ₹300, DQ-வின் லக்கி பாஸ்கர் ₹100 கோடி clubஇல் இணைந்துள்ளன. இதன் மூலம் விஜய், ரஜினி, கமலை தொடர்ந்து SKவும் வசூல் மன்னனாக ஜொலிக்கிறார்.
மழை & பனிக்காலத்தில் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, மூச்சிரைப்பு, உடல்சோர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் கண்டங்கத்திரி டீயைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, ஏலக்காய் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான கண்டங்கத்திரி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயக்கின் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி 70%க்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில் 196 பேர் தேர்தலிலும், 29 பேர் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளும் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
பணவீக்கம் அதிகரிக்க 5 பொருட்களே காரணம் என மத்திய நிதித்துறை செயலாளர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அரசு எவ்வளவு முயற்சித்தாலும் பணவீக்கம் அதிகரிக்கிறது என்றார். குறிப்பாக, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம், வெள்ளி ஆகியவை பணவீக்கத்திற்கு காரணம் எனக் கூறினார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான காற்றை சமாளித்து, இந்தியா வளர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சக்திவாய்ந்த அரசியல்வாதி தலைவர்கள் 2024 பட்டியலில் உ.பி., CM யோகியை விட ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். டாப் 10 பட்டியலில் முதல் 5 இடங்களில் ராகுலை தவிர I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் யாரும் இடம்பெறவில்லை. முதல் இடத்தில் மோடி, 2வது இடத்தில் மோகன் பகவத், 3வது இடத்தில் அமித் ஷா, 4வது ராகுல், 5வது இடத்தில் சந்திரபாபு, 7வது இடத்தில் யோகி உள்ளனர். இதில் 8வது இடத்தில் தான் ஸ்டாலின் இருக்கிறார்.
ஜெட்டாவில் நவ. 24-25 தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் 2025 ஏலத்தில் இரண்டு செட்களாக மார்க்கீ வீரர்கள் இடம் பெறுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரூ. 2 கோடியை அடிப்படை விலையாக கொண்ட இந்த பட்டியலில் ராகுல், பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், சிராஜ், உட்பட 6-9 வீரர்கள் இடம் பெறவுள்ளனர். இதற்கு முன்பு 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மெகா ஏலத்தில் இதுபோன்று நடைமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.
காலையில் எழுந்ததுமே பல் தேய்க்காமல் Bed காபி, டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இப்பழக்கம் நல்லதல்ல எனக் கூறப்படுகிறது. டீ மற்றும் காபியில் காஃபின் இருப்பதால், வயிற்றில் அமிலத்தின் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்யுமாம். அப்படியாகும் சூழலில், வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்றவற்றுடன் காஃபின் சிறுநீர் வருவதை அதிகரிப்பதால், உடலில் நீரின் அளவு குறையும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்தபிறகு கொங்கு மண்டலத்தில் பல்வேறு அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். புதிதாக கட்சியில் ஐக்கியமானவர்களுக்கு சால்வை அணிவித்து திமுக உறுப்பினர் அட்டைகளை வழங்கிய அவர், வார்டு வாரியாக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதனால், பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மாலை 5 மணிக்கு சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றி வைக்கிறார். இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், நெய்யபிஷேகத்துடன் ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
டிரம்ப் மனைவி மெலானியா, வெள்ளை மாளிகையில் தொடர்ந்து வசிக்க மாட்டார் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு ஒரு காரணமும் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக புளோரிடாவில் தனக்கான நட்பு வட்டாரத்தை உருவாகியுள்ள மெலானியா, அங்கேயே அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார். இதன் காரணமாகவே இவர், அம்மாகாணத்தில் தொடர்ந்து வசிக்க விரும்புவதால், வெள்ளை மாளிகையில் அதிக நேரம் இருக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.