India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

PM மோடி இன்று 127-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். அதில், வரும் நவ.7-ம் தேதியன்று நாம் வந்தே மாதரம் பாடல் இயற்றி 150-வது ஆண்டில் நுழைய இருக்கிறோம். இதை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக மாற்ற வேண்டும், வரும் தலைமுறையினருக்காக இந்த கலாச்சாரத் தொடரை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும். மேலும், ஆபரேஷன் சிந்தூர், நமது பண்டிகைகளை மேலும் வண்ணமயமாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

பிக் பாஸ் சீசன் 9-ல் Wild Card மூலம் 4 போட்டியாளர்கள் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், மகாநதி சீரியலில் கம்ருதீனுக்கு மனைவியாக நடித்த திவ்யா இந்த வாரம் முதலில் எண்ட்ரீ கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும், கம்ருதீனுக்கும் ஏற்கெனவே பிரச்னை இருப்பதாக கூறப்படும் நிலையில், இவர் வந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும் என எண்ணி பிக் பாஸ் குழு இவரை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறதாம்.

தலையணை இருந்தால் மட்டும்தான் இங்கு பலருக்கும் தூக்கம். தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று என தலையணை வைத்து தூங்குபவர்கள் பலர். ஆனால், Amerisleep பவுண்டேஷனின் ஆய்வில், தலையணை குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி துவைக்காத, அழுக்குப் படிந்த தலையணை உறைகளில், டாய்லெட் சீட்டில் உள்ளதைவிட 17,000% கிருமிகள் உள்ளதாம். இதனால் சரும பிரச்னைகள் உள்பட பல பாதிப்புகள் ஏற்படுமாம்.

மொன்தா புயல் உருவாவதால், புதுவையின் ஏனாமில் நாளை முதல் அக்.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மேலும், <<18102668>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், சிவகங்கையில் 7 ஒன்றியங்களுக்கு நாளை, அக்.30 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக கூட்டணி கட்சிகள் மத்தியில், கூட்டணி ஆட்சிக்கான முழக்கம் எழுந்திருப்பதால் திமுக அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026-ல் கூட்டணி கட்சியா, கூட்டணி ஆட்சியா என திருமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘தேர்தல் முடிவுக்கு பின்னர்’ என ஒற்றை வார்த்தையில் பதில் கூறி நகர்ந்தார். இதனால் திமுகவுக்கு இன்னும் அழுத்தம் அதிகரிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் நாளை மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு உள்பட 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் SIR-ஐ திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் உள்ள ஈபிள் டவர் வெயில் காலத்தில் 15 செ.மீ., வரை வளரும் என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், வெப்பம் அதிகரிக்கும்போது இதில் உள்ள இரும்பு உலோகம், சிறிதளவு விரிவடைந்து, குளிர்காலம் வரும்போது சுருங்குகிறது. இதனால் இதன் உயரம் ஒவ்வொரு ஆண்டும் வெயில் காலத்தின் போது அதிகமாவதாக சொல்கின்றனர். தற்போது இதன் உயரம் 1083 அடியாக இருக்கிறது. 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இந்த தகவலை SHARE பண்ணுங்க.

காதலுக்கு கண்ணுமில்லை, வயதுமில்லை என்ற கேப்ஷனுடன் SM-ல் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. 80 வயது முதியவர் ஃபிராங்குக்குள் ஆழமான காதலை கண்டுகொண்ட 20 வயது ஜெசிகா, தானும் அவரை காதலிக்க தொடங்கினார். ஊரார் பேச்சை உதாசீனப்படுத்தி காதலில் திளைத்த இந்த ஜோடிக்கு, இப்போது குழந்தை பிறக்கப் போகிறதாம். குழந்தையுடன் காதலின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் தம்பதியர். வாழ்த்தலாமே!

குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்கள் தீவிரவாதிகள் எனவும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்றும் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் VS சஜ்ஜனார் எச்சரித்துள்ளார். கர்னூலில் ஆம்னி பஸ் விபத்துக்கு பிறகு ஹைதராபாத்தில் ஆம்னி பஸ்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, பஸ் மீது மோதிய பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞர் குடிபோதையில் இருந்ததோடு, தாறுமாறாக ஓட்டியது வீடியோவில் அம்பலமாகியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வை நவம்பருக்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு ₹1,000 கிடைக்காது. விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டில் சரியான முகவரி இல்லை என்றாலும் ₹1,000 கிடைப்பதில் சிக்கல் வரும்.
Sorry, no posts matched your criteria.