India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில், EPS முன்னிலையில், திருவாரூர் நகர திமுக பிரமுகர் சின்னவன் பிரகாஷ் அதிமுகவில் இணைந்தார். அதேபோல், திண்டுக்கல் மதிமுக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த அனீஸ் பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், திண்டுக்கல் சீனிவாசன் முன்பு தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

திருப்பரங்குன்றத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக உத்தரவு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சுவாமிநாதன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீபம் ஏற்ற அனுமதி வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், சுவாமிநாதன் மீது HC தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நவ.4 முதல் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோர் 25.72 லட்சம், கண்டறிய முடியாதோர் 8.95 லட்சம், நிரந்தர இடமாற்றமானோர் 39.27 லட்சம் என 77.52 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 10.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், காஸாவில் தாக்குதல்கள் தொடர்ந்தே வருகின்றன. சமீபத்திய இஸ்ரேல் தாக்குதலில் 2 பிஞ்சு குழந்தைகள் உள்பட 5 பேர் பலியான நிலையில், 32 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, ஹமாஸ்-இஸ்ரேலிய படைகளின் மோதலில் 5 இஸ்ரேல் வீரர்களும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு பிறகான தாக்குதல்களில், இதுவரை 360 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் AVM சரவணனின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையே கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்துள்ளது. CM ஸ்டாலின் முதல் ரஜினி, சிவகுமார் என அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது இறுதி அஞ்சலியை அவரது பாதங்களில் சமர்ப்பித்து வருகின்றனர். AVM ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாமக யாருக்கு என்ற வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தை அணுக டெல்லி HC உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரங்களில் EC தலையிட முடியாது என்ற கோர்ட், கடிதங்கள் அடிப்படையில் EC முடிவெடுக்க முடியாது எனவும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் தொடுத்த இவ்வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, அன்புமணிக்கு எதிரான ஆவணங்களோடு அவர் உரிமையியல் கோர்ட்டை நாடுவார் என கூறப்படுகிறது.

PM ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ₹2.67 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கிறது. இந்த மானியம் 3 தவணைகளாக வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு இல்லாதவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற டிச.31-க்குள் <

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்த பதிவை, <<18466560>>செங்கோட்டையன் <<>>பிற்பகல் 12.26 மணிக்கு நீக்கியிருந்தார். தவெக கொள்கை தலைவர்கள் உடன் MGR, ஜெ., புகைப்படமும் இருந்ததால் நீக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது. இதனையடுத்து, கட்சி மாறிய உடன் ஜெ., போட்டோவை நீக்கியதாக பலரும் கமெண்ட் செய்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் நீக்கப்பட்ட போஸ்டரை மீண்டும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வரும் 5-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை கட்டிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என அர்ஜுன்லால் என்பவர் தொடர்ந்த வழக்கில், தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்தி, ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார்.

‘Thalaivar 173’ படத்துக்கான உத்தேச இயக்குநர் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பது லோகேஷ் கனகராஜுக்கு தெரிந்துவிட்டது. இதையடுத்து, ரஜினிக்காக எழுதி வைத்திருந்த கதையைதான் கொஞ்சம் பட்டி, டிங்கரிங் செய்து அல்லு அர்ஜுனுக்கு ஏற்றதுபோல அவர் மாற்றியிருக்கிறாராம். இந்த நிலையில் கடந்த வாரம் மும்பையில் அல்லு அர்ஜுனை சந்தித்த லோகி, அவரிடம் கதையை சொல்லி ஒப்புதலும் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.