News May 7, 2025

இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்: ராகுல்

image

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். தங்களது அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்திருப்பதாகவும், அதற்கு தெலங்கானா முன்னோடியாக இருந்ததாகவும் பெருமைப்பட கூறினார். மேலும், இட ஒதுக்கீட்டில் இருக்கும் 50% உச்சவரம்பு நீக்கப்படும் வரை போராட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

News May 7, 2025

கிடுகிடுவென உயரும் ரூபாயின் மதிப்பு

image

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று வேகமாக உயர்ந்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இன்று ஒரே நாளில் 38 பைசா உயர்ந்து 84.58 ரூபாய் என வர்த்தகம் ஆகிறது. இந்தியா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்ததையடுத்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரிகளை டிரம்ப் நீக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

News May 7, 2025

மேக்ஸ்வெல் IPL-ல் இருந்து வெளியேறினார்

image

PBKS வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியிருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அறிவித்துள்ளார். அவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஐயர் தெரிவித்தார். ஆனால், அவருக்கு பதிலாக வேறு எந்த வீரரையும் அந்த அணி இன்னும் தேர்வு செய்யவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2025

மேக்ஸ்வெல் IPL-ல் இருந்து வெளியேறினார்

image

PBKS வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியிருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அறிவித்துள்ளார். அவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஐயர் தெரிவித்தார். ஆனால், அவருக்கு பதிலாக வேறு எந்த வீரரையும் அந்த அணி இன்னும் தேர்வு செய்யவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு: ஸ்டாலின் கேள்வி

image

சாதி அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மக்களை பிளப்பதாக கூறி வந்த மோடி அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது I.N.D.I.A கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை தவிர்ப்பதற்கான மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக விமர்சித்த அவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்.

News May 7, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு: ஸ்டாலின் கேள்வி

image

சாதி அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மக்களை பிளப்பதாக கூறி வந்த மோடி அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது I.N.D.I.A கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை தவிர்ப்பதற்கான மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக விமர்சித்த அவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்.

News May 7, 2025

தமிழகத்தில் 40 டிகிரியை தொட்ட வெயில்

image

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக, வேலூரில் 40.5 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பதிவானது. அடுத்தபடியாக, கரூர் பரமத்தி – 40°C, ஈரோடு – 39.6°C, சேலம் – 39°C, தர்மபுரி – 38.2°C, மதுரை – 38°C, சென்னை – 37.7°C, திருச்சி – 37.7°C, திருப்பத்தூர் – 37.2°C, கடலூர் – 37°C என அதிகபட்ச வெப்பம் பதிவானது. தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அந்தப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது.

News May 7, 2025

நாளை சிலிண்டர் விலை மாற்றமா?

image

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் LPG சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படும். உழைப்பாளர் தினமான (மே 1) நாளையும் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வணிக சிலிண்டர் விலையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நாளை வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையிலும் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

News May 7, 2025

தமிழகத்தில் 40 டிகிரியை தொட்ட வெயில்

image

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக, வேலூரில் 40.5 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பதிவானது. அடுத்தபடியாக, கரூர் பரமத்தி – 40°C, ஈரோடு – 39.6°C, சேலம் – 39°C, தர்மபுரி – 38.2°C, மதுரை – 38°C, சென்னை – 37.7°C, திருச்சி – 37.7°C, திருப்பத்தூர் – 37.2°C, கடலூர் – 37°C என அதிகபட்ச வெப்பம் பதிவானது. தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அந்தப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது.

News May 7, 2025

நாளை சிலிண்டர் விலை மாற்றமா?

image

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் LPG சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படும். உழைப்பாளர் தினமான (மே 1) நாளையும் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வணிக சிலிண்டர் விலையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நாளை வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையிலும் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!