India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியதால், ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து Xஇல் பதிவிட்டுள்ள CM அதிஷி, அனைத்து தொடக்கப் பள்ளிகளும் (5ஆம் வகுப்பு வரை) மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுவதாகக் கூறியுள்ளார். இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக டெல்லி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்திய விளையாட்டு சந்தையின் மூலம் 2030க்குள் 1.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் மற்றும் டெலாய்ட் வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் தளங்களின் எழுச்சி இந்தியாவில் விளையாட்டு நுகர்வு மீது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், 21 பில்லியன் டாலர் அளவுக்கு மறைமுக வரி வருவாயும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குகளை பெற பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏழைகளை காங்கிரஸ் ஏமாற்றுவதாக PM மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்கு வங்கி அரசியலில் அந்தக் கட்சி முன்னோடி என விமர்சித்த அவர், அதற்காக நாட்டையும், ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அவர்கள் விளையாட்டாக பார்ப்பதாக சாடினார். PM மோடியின் குற்றச்சாட்டு குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? கீழே கமெண்ட்ல சொல்லுங்க.
6 அறிவு எவை எவை என்பதை தொல்காப்பியம் இவ்வாறு விளக்கியுள்ளது.
*ஓரறிவு: தொடுதலால் உணர்வது
*இரண்டறிவு: தொடுதல், சுவைத்தல்.
*3ஆம் அறிவு: தொடுதல், சுவைத்தல், முகர்தல்.
*4ஆம் அறிவு: தொடுதல் சுவைத்தல், முகர்தல், பார்த்தல்
*5ஆம் அறிவு: தொடுதல் சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல்.
*6ஆம் அறிவு: தொடுதல் சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல் மற்றும் சிந்திப்பது.
நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை, அடுத்த ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக INDSRI FERRY SERVICES PVT LTD வெளியிட்டுள்ள அறிவிப்பில், வானிலை காரணமாக நவ.19 – டிச.18 வரை, பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாகை – காங்கேசன்துறை இடையே நவ.15-18ஆம் தேதி வரை, கப்பல் சேவை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரை விமர்சித்த ரஷ்ய சமையல் கலைஞர், மர்ம முறையில் உயிரிழந்தார். அலெக்ஸி ஜிமின் என்பவர் அதிபர் புதினை விமர்சித்ததுடன், இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்து வேலைபார்த்து வந்தார். மேலும், உக்ரைனுக்கு நன்கொடையும் வழங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், செர்பியாவில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என செர்பிய போலீஸ் கூறியுள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறல் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: இனியவைகூறல்
▶குறள் எண்: 99
▶குறள்:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
▶விளக்க உரை: இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர், அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது திமுக அரசின் கடமை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கடந்த 3.5 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதாகக் குறிப்பிட்ட அவர், எதற்கும் திமுக அரசு செவி சாய்க்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். மேலும் இந்த விவகாரத்தில், CM ஸ்டாலின் உடனே தலையிட்டு தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து 4ஆவது நாளாக இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 முதல் 15 நிமிடங்கள் மழை சடசடவென பெய்கிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பகலிரவாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. நீங்க இருக்கிற ஊருல மழை பெய்யுதா? கமெண்ட்ல சொல்லுங்க.
▶நவ.15 (ஐப்பசி 29) ▶வெள்ளி ▶நல்ல நேரம்: காலை 12:15-01:15, மாலை 04:45-05:45 ▶கெளரி நல்ல நேரம்: காலை 01:45-02:45, மாலை 06:30-07:30 ▶ராகு காலம்: 10:30 AM-12:00 PM ▶எமகண்டம்: 03:00 – 04:30 PM ▶குளிகை: 07:30-09:00 AM ▶திதி: பெளர்ணமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: 10:45 PM வரை பரணி பின்பு கிருத்திகை ▶சந்திராஷ்டமம்: 10:45 PM வரை அஸ்தம் பின்பு சித்திரை.
Sorry, no posts matched your criteria.