India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் லண்டனில் இருந்து காணொலி மூலம் பங்கேற்ற அண்ணாமலை, அதிமுக கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் சிலரின் கருத்துகளால் குழப்பம் ஏற்படுவதாக குறிப்பிட்டார். எனவே கூட்டணி தொடர்பாக யாரும் எவ்வித கருத்தும் கூறக்கூடாது என நிர்வாகிகளை அறிவுறுத்திய அவர், 10 நாள்களில் தமிழகம் திரும்பி, மீண்டும் கட்சிப்பணிகளை தீவிரமாக முன்னெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிக வசதிபடைத்த, முன்னேறிய மாநிலமான மகாராஷ்டிராவில் பெரும்பாலானோர் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம் பழங்குடியினரும், கிராமப்புற மக்களும் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்டில் அதிகமானோர் வாக்களித்துள்ளனர். 3 மணி நிலவரப்படி JH 61%, MH 45% பேர் வாக்களித்துள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் சற்றுமுன்பு வரை 45.53% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் 2ஆம் கட்டத் தேர்தலில் 61.47% வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து மாலை வரை தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த வாக்குகள் விகிதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை EC வெளியிடும்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 16ஆம் தேதி தாெடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1ஆம் தேதி அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும், அதன்பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்க.
IDBI வங்கியில் 600 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 600 இடங்களும் ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் நிலையிலான பதவிகள் ஆகும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நாளை முதல் www.idbibank.in இணையதளத்தில் தொடங்கவுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 30ஆம் தேதி கடைசி நாளாகும். வேலை குறித்த கூடுதல் தகவலை www.idbibank.inஇல் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் WHATSAPP தளத்திலோ, SMS மூலமோ வரும் வேலைவாய்ப்பு LINK-ஐ நம்பி நிதி தகவலை பகிர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். அதிலுள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். பணம் கேட்டால் அனுப்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து www.cybercrime.gov.in, 1930 எண்ணில் புகார் அளிக்கவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் சாதாரண மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பொது போக்குவரத்து, ரயில்கள் தான். ஆனால், ஒரு மாநிலத்தில் ரயில்வே ஸ்டேஷனே இல்லை என்பது தெரியுமா? கடினமான மலைப்பகுதியில் சிக்கிம் மாநிலம் அமைந்துள்ளதால், அங்கு ரயில்பாதை அமைப்பதில் சிக்கல் இருந்தது. அங்கு சாலை போக்குவரத்தே பிரதானமானது. தற்போது, 45 கிமீ நீளத்துக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டு, ரங்போ என்ற இடத்தில் முதல் ரயில்வே ஸ்டேஷன் அமையவுள்ளது.
சமீபத்தில் நடந்த SA-வுக்கு எதிரான தொடரில், கடைசி 2 T20 போட்டிகளில் அதிரடியாக ஆடிய இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா அடுத்தடுத்து 2 சதங்கள் அடித்தார். இதன் மூலம், சர்வதேச T20 தரவரிசையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்த சீரிஸுக்கு முன் 72வது இடத்தில் இருந்த திலக் வர்மா, தற்போது 69 இடங்கள் முன்னேறி 3வது இடம் பிடித்துள்ளார். SKY, ஜெய்ஸ்வால் முறையே 4, 8வது இடங்களில் உள்ளனர்.
ARR – சாய்ரா விவாகரத்து செய்தியை ரசிகர்கள் ஜீரணிப்பதற்குள், இன்னொரு இசைப் பிரபலமும் விவாகரத்தை அறிவித்துள்ளார். பிரபல கிடாரிஸ்ட் மோகினி டே, அவரின் கணவர் மார்க் ஹார்ட்சச் பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர். வாழ்க்கையில் தங்களின் விருப்பங்கள் வெவ்வேறாக இருப்பதால் கனத்த இதயத்துடன் பிரிவதாக தெரிவித்துள்ளனர். ARR-இன் குழுவில் நீண்டகாலமாக பயணித்துவரும், மோகினி டே, உலகின் சிறந்த பேஸ் கிடாரிஸ்ட் ஆவார்.
தற்போது ஒரு சில வங்கிகள் கடன்கோரும் நபரிடமிருந்து Cancelled Cheque-ஐ கோருகின்றன. இதில் அச்சப்பட ஒன்றுமில்லை. வங்கிக் கணக்கின் (Proof of Identity) ஆதாரமாக காசோலை கருதப்படுகிறது. அதில் உள்ள தகவல்களை முன்னெச்சரிக்கையாக பதிவு செய்ய கடனளிக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதனைப் பார்த்து, காப்பீடு & ஒரு சில வங்கி & நிதிச் சேவை நிறுவனங்களும் கேன்சல் செய்த காசோலையைக் கேட்கின்றன.
Sorry, no posts matched your criteria.