India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆண்களே, முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் இளம்வயதிலேயே வழுக்கை விழுகிறதா? கவலைய விடுங்க. அதனை இயற்கையான முறையிலேயே சரி செய்யலாம். கற்றாழை ஜெல்லையும், ஆமணக்கு எண்ணெயையும் கலந்து முடியின் வேர்களில் தடவுங்கள். அரை மணி நேரம் ஊறவைத்த பின் தலைக்கு குளியுங்கள். வாரத்திற்கு 2 முறை இதனை செய்து வந்தால், வழுக்கையிலும் முடி வளரும். பலரது பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் SHARE.

வங்கி கணக்கு மற்றும் லாக்கர் பயன்படுத்தும் பயனர்களுக்கு, நிதி அமைச்சகம் புதிய வாரிசுதாரர் நியமன விதிகளை அறிவித்துள்ளது. நவ.1 முதல் அமலாகும் இந்த விதிகளால், பயனர்கள் தங்களது வங்கி கணக்கு, லாக்கருக்கு நான்கு வாரிசுதாரர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு சேர வேண்டிய தொகையின் பங்கையும் குறிப்பிடலாம். பயனர் இறந்தால் நால்வருக்கும் பணம் சென்று சேரும். இதுவரை, ஒரே ஒரு வாரிசுதாரரை மட்டுமே நியமிக்க முடியும்.

தீபாவளியையொட்டி அறிவிக்கப்பட்ட ₹1 பிளான், நவ.15 வரை நடைமுறையில் இருக்கும் என BSNL தெரிவித்துள்ளது. அதன்படி, ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு 2 GB டேட்டா, 100 SMS மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். புதிதாக சிம் வாங்குவோருக்கு மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும். சுதந்திர தினத்திற்கும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுகவும். SHARE

PM மோடி இன்று 127-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். அதில், வரும் நவ.7-ம் தேதியன்று நாம் வந்தே மாதரம் பாடல் இயற்றி 150-வது ஆண்டில் நுழைய இருக்கிறோம். இதை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக மாற்ற வேண்டும், வரும் தலைமுறையினருக்காக இந்த கலாச்சாரத் தொடரை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும். மேலும், ஆபரேஷன் சிந்தூர், நமது பண்டிகைகளை மேலும் வண்ணமயமாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

பிக் பாஸ் சீசன் 9-ல் Wild Card மூலம் 4 போட்டியாளர்கள் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், மகாநதி சீரியலில் கம்ருதீனுக்கு மனைவியாக நடித்த திவ்யா இந்த வாரம் முதலில் எண்ட்ரீ கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும், கம்ருதீனுக்கும் ஏற்கெனவே பிரச்னை இருப்பதாக கூறப்படும் நிலையில், இவர் வந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும் என எண்ணி பிக் பாஸ் குழு இவரை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறதாம்.

தலையணை இருந்தால் மட்டும்தான் இங்கு பலருக்கும் தூக்கம். தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று என தலையணை வைத்து தூங்குபவர்கள் பலர். ஆனால், Amerisleep பவுண்டேஷனின் ஆய்வில், தலையணை குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி துவைக்காத, அழுக்குப் படிந்த தலையணை உறைகளில், டாய்லெட் சீட்டில் உள்ளதைவிட 17,000% கிருமிகள் உள்ளதாம். இதனால் சரும பிரச்னைகள் உள்பட பல பாதிப்புகள் ஏற்படுமாம்.

மொன்தா புயல் உருவாவதால், புதுவையின் ஏனாமில் நாளை முதல் அக்.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மேலும், <<18102668>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், சிவகங்கையில் 7 ஒன்றியங்களுக்கு நாளை, அக்.30 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக கூட்டணி கட்சிகள் மத்தியில், கூட்டணி ஆட்சிக்கான முழக்கம் எழுந்திருப்பதால் திமுக அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026-ல் கூட்டணி கட்சியா, கூட்டணி ஆட்சியா என திருமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘தேர்தல் முடிவுக்கு பின்னர்’ என ஒற்றை வார்த்தையில் பதில் கூறி நகர்ந்தார். இதனால் திமுகவுக்கு இன்னும் அழுத்தம் அதிகரிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் நாளை மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு உள்பட 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் SIR-ஐ திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் உள்ள ஈபிள் டவர் வெயில் காலத்தில் 15 செ.மீ., வரை வளரும் என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், வெப்பம் அதிகரிக்கும்போது இதில் உள்ள இரும்பு உலோகம், சிறிதளவு விரிவடைந்து, குளிர்காலம் வரும்போது சுருங்குகிறது. இதனால் இதன் உயரம் ஒவ்வொரு ஆண்டும் வெயில் காலத்தின் போது அதிகமாவதாக சொல்கின்றனர். தற்போது இதன் உயரம் 1083 அடியாக இருக்கிறது. 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.