India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில நடைபெற்றது. நிகழ்ச்சியில் CM ஸ்டாலின் பேசுகையில், இப்படியொரு அறிவார்ந்த போட்டிக்கு ஏற்பாடு செய்த எனது அருமை தங்கை கனிமொழிக்கு வாழ்த்துகள். பாசத்தை பொழிகையில் அவர் கனிமொழி. தமிழக உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில் கர்ஜனை மொழி. மொத்தத்தில் ஒரு வீரமங்கை நம் கனிமொழி என பாராட்டினார்.

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக வெற்றிக்கு பின் மிகப்பெரிய சதி இருப்பதாக உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் சந்தேகம் எழுப்பியுள்ளார். ”இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். இது எப்படி நடந்தது என மக்களே நம்ப மாட்டார்கள். தேர்தலில் பணம் விளையாடியிருக்கிறது.” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்திருக்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வயநாடு இடைத்தேர்தலில் ராகுலை விட பிரியங்கா அதிக வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார். ராகுல் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், தற்போது இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலேயே 3.68 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்கை பிரியங்கா, அண்ணனை முந்தியுள்ளார். இதன் மூலம் இந்திரா என்ற பெண் சிங்கம் மீண்டும் உருவாகிவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி முகத்தில் உள்ளது. இதில், ஆளும் ஜேஎம்எம் 29 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகவிருப்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. பண மோசடி புகாரில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஹேமந்த் சோரன் 5 மாதங்கள் சிறை செல்ல நேரிட்டது. ஜாமினில் வெளியே வந்து மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 8.30 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு- வட மேற்காக நகர்ந்து 25ஆம் தேதி மத்திய வங்கக் கடலில் நிலை கொள்ளும். மேலும், அது தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் வரும் 26 முதல் 28 வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்கப் போவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், சயானி கோலிவாடா தொகுதியைக் கைப்பற்ற போகும் பாஜகவின் கேட்பன் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தேவேந்திர ஃபட்னாவீஸுக்கு மிக நெருக்கமானவர். தற்போது ஃபட்னாவீஸ்தான் அடுத்த முதல்வர் என்ற பேச்சு உள்ளதால், தமிழ்ச்செல்வன் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு இடைவேளைக்கு முன்பு 104 ரன்களுக்கு ஆஸி. அணி ஆல் அவுட்டானது. 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 84/0 ரன்களை எடுத்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2ம் நாள் டி இடைவேளை வரை, ஓப்பனர்கள் ஜெய்ஸ்வால் 42(88) ரன்களும், கே.எல்.ராகுல் 34(70) ரன்களும் எடுத்துள்ளனர். தற்போது வரை இந்திய அணி 130 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் முதல் வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. வடாலா தொகுதியின் பாஜக வேட்பாளர் காளிதாஸ் நில்கந்த் கோலம்கர் வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 125 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

மகாராஷ்டிராவில் பட்னவிஸ் முதல்வராக தேர்வாவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குழப்பம் எழுந்துள்ளது. பாஜக 124, சிவசேனா (ஷிண்டே) 55, என்சிபி (AP) 37 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சியமைக்க பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (145 சீட்) கிடைக்கவில்லை. இந்நிலையில், முதல்வர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை; ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறி, ஏக்நாத் ஷிண்டே பரபரப்பை கிளப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவில் 216 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதால், தேவேந்திர பட்னவிஸ் CM ஆகுவது உறுதியாகியுள்ளது. கடந்த முறை பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த ஷிண்டே (சிவசேனா) முதல்வராக இருந்த நிலையில், இந்த முறை CM நாற்காலியை விட்டுக்கொடுக்க பாஜக தயாராக இல்லை. இதனால், மூன்றாவது முறையாக பட்னவிஸ் முதல்வராக தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்காக வரும் திங்கள்கிழமை பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.