India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஹோட்டலுக்கு செல்லும் போது உணவின் விலை சற்று அதிகமாக இருந்தால், மீண்டும் அங்கு செல்வதற்கு யோசிப்போம். ஆனால், மேலே உள்ள உணவுகளின் விலையை பார்த்தால், இவ்வளவு காசு கொடுத்து வாங்கி சாப்பிடுகிறார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழும். புகைப்படங்களை SWIPE செய்து பார்ப்பதுடன், நீங்கள் சாப்பிட்ட விலை உயர்ந்த உணவின் பெயரை கமெண்ட் பண்ணுங்க..

‘நீயெல்லாம் நல்லா வரணும்டா’ என்று நட்புக்கான கலக்கல் காம்போவாக சினிமாவில் ஜொலித்தவர்களில் ஆர்யா – சந்தானமும் உண்டு. பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, சேட்டை என இந்த கூட்டணிக்கென்று தனி ரசிகர்களே உள்ளனர். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 கதைகளை இருவருமே கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ஜாய் தான்!

▶அக்டோபர் 27, ஐப்பசி 9 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் குப்பையில் கிழித்து எறியப்படும் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பிஹார் தேர்தலுக்கான பரப்புரையில் பேசிய அவர், அம்மாநில CM நிதிஷ்குமார் மதவாத சக்திகளுடன் கைகோர்ப்பதால் மாநிலத்தில் வெறுப்பு பரவுகிறது என்றும் விமர்சித்தார். வக்ஃபு குறித்த தேஜஸ்வியின் ஆவேச பேச்சு தற்போது பிஹார் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஆஸி.,க்கு எதிரான ODI தொடருக்கு தயாராவதற்கு தன்னிடம் நிறைய நேரம் இருந்ததாக ரோஹித் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அது தனக்கு தற்போது உதவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நீண்ட நாள்களுக்கு பிறகு கோலியுடன் 100+ பார்ட்னர்ஷிப் அமைத்தது சிறப்பாக இருந்ததாகவும், இணைந்து பேட்டிங் செய்வது இருவருக்குமே மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று (அக்.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

ஊழலை ஒழித்து, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கும் வகையில், உலகின் முதல் AI அமைச்சரான Diella-ஐ அல்பேனியா சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், Diella கர்ப்பமாக இருப்பதாகவும், 83 குழந்தைகள் பிறக்க உள்ளதாகவும் அந்நாட்டு PM எடி ராமா அறிவித்துள்ளார். இதில் குழந்தைகள் என்பது AI அஸிஸ்டெண்ட்கள் எனவும், அவை அனைத்து நாடாளுமன்ற விவகாரங்களையும் பதிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றிமாறன், மாரி செல்வராஜ், நான் என 3 பேர் தான் தமிழ் சினிமாவை சீரழித்தோமா என்று பா.ரஞ்சித் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ‘காந்தாரா’ படம் நல்ல வெற்றி பெற்ற பிறகு, தமிழ் சினிமாவில் இப்படியில்லை, இவர்கள் தான் சினிமாவை கெடுக்கின்றனர் என கூறுவதாக அவர் தெரிவித்தார். 2 ஆண்டுகளில் 600 படங்கள் வெளியாகும் தமிழ் சினிமாவில், அதன் இயக்குநர்கள் கோலிவுட்டை உயர்த்த எதுவும் செய்யவில்லையா என்றும் கேட்டுள்ளார்.

இன்று (அக்.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

சத்தீஸ்கரில் 13 பெண்கள் உள்பட 21 மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையிடம் சரணடைந்துள்ளனர். அவர்களுக்கான மறுவாழ்வு பணிகள் நடந்து வருவதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் சரணடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.