India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்கள் பாதுகாப்புக்காகவே சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்துள்ளது என்றார். மேலும், பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்ய 10,000 பேர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையின் பல்வேறு இடங்களிலும் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திமுக ஐடி விங் சார்பில் வெளியிடப்பட்ட பதிவில், சென்னை சைதாப்பேட்டையில் மழை நின்று, அங்குள்ள ஜோன்ஸ் சாலையில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் இயல்பு நிலை திரும்பி உள்ளதா? உங்கள் கருத்துகளை கீழே கமெண்ட் பாக்சில் பதிவிடுங்கள்.
சென்னையில் பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில், மழை பெய்தாலும் பரவாயில்லை , வெள்ளநீர் சூழ்ந்தாலும் கவலையில்லை என மதுபிரியர்கள், டாஸ்மாக் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர்.
ஃபெஞ்சல் புயல் நெருங்குவதால் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 55 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதால், இரவு 7.30 வரை விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய பாஜக அரசு அஞ்சுவதாக பிரியங்கா M.P. விமர்சித்துள்ளார். கேரள மாநிலம், மலப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு பாஜக மரியாதை கொடுப்பதில்லை என்றும், அதனாலேயே பாஜகவை காங்கிரஸ் எதிர்க்கிறது என்றும் கூறினார். மக்கள் பிரச்னை குறித்து விவாதிக்க பாஜக அஞ்சுவதாலேயே நாடாளுமன்றம் முடங்கி வருவதாகவும் சாடினார்.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக 4 மாவட்டங்களில்
EB கட்டணம் செலுத்த அரசு கால அவகாசம் அளித்துள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருவதால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மின்கட்டணம் செலுத்த டிச.10ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
புயல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என துணை முதல்வர் உதயநிதி கேட்டுக்கொண்டுள்ளார். பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதால் புயலால் ஏற்படும் பாதிப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது என்றார். தாழ்வானப் பகுதிகளில் தேங்கும் மழை நீர் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு வருவதால், விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும் தெரிவித்தார்.
புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசியக்கொடி கிழிந்தது. பலத்த மழை தொடர்வதால், கொடியை சரிசெய்யும் பணிகளை தொடங்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மழை ஓரளவு குறைந்ததும் உடனடியாக தேசியக்கொடி இறக்கப்படும் என்றும், மழை முழுவதும் நின்ற பிறகு புதிய தேசியக் கொடி மீண்டும் ஏற்றப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். *டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர், கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம். *வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.
ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் முன்பு நகர்ந்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்தப் புயல் நகரும் வேகம் மணிக்கு 7 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக புயல் 7 கிலோ மீட்டர் வேகத்திலேயே நகர்ந்து வருவதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மகாபலிபுரம், காரைக்கால் இடையே இன்று மாலை புயல் கரையைக் கடக்கையில் புயல் மேலும் வேகம் குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.