India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பில், மத்திய ஜிஎஸ்டி மூலம் ரூ.34,141 கோடி, மாநில ஜிஎஸ்டி மூலம் ரூ.43,047 கோடி வசூலாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், IGST மூலம் ரூ.91,828 காேடி, செஸ் மூலம் ரூ.13,253 கோடி வசூலாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 நவம்பருடன் ஒப்பிடுகையில் தற்போது ஜிஎஸ்டி வசூல் 8.5% உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
ஃபெஞ்சல் புயல் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம்தான் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில், விழுப்புரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்வர் ஸ்டாலின், நாளை விழுப்புரம் செல்லவுள்ளார். முன்னதாக, இன்று இபிஎஸ் விழுப்புரத்தில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிக ரன்களை அதிவேகமாக சேஸ் செய்த அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. நியூசி.க்கு எதிராக அந்த அணி இந்த சாதனையை படைத்துள்ளது. முதலில் களமிறங்கிய நியூசி. இரு இன்னிங்சிலும் முறையே (348 & 254) ரன்களை எடுத்தது. முதல் இன்னிங்சில் 499 ரன்கள் எடுத்த ENG அணி, 104 ரன்கள் டார்கெட்டை 12.4 ஓவர்களில் கடந்து, இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்வதால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.மேலும், பல விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காததால், கடந்த 2 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய Prime Minister’s XI அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸி அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய அணி தரப்பில் கில் 50, நிதிஷ், வாசிங்டன் சுந்தர் தலா 42 ரன்கள் குவித்தனர்.
நமது போராட்டம் நாட்டின் ஆன்மாவுக்கானது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். வயநாடு மானந்தவாடி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் கட்டமைப்பை அழிக்கும் சக்திக்கு எதிராகவும், மக்களின் தேவைகளுக்கும், உரிமைகளுக்கும் என்றும் தோளோடு தோள் நின்று போராடுவேன் என உறுதி அளித்தார். வயநாடு தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு பிரியங்கா வெற்றி பெற்றார்.
Sorry, no posts matched your criteria.