India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவாரூர், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லையில் லேசான மழை பெய்யக்கூடும் என MET தெரிவித்துள்ளது.
☛நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடியுங்கள். ☛ஓட்டல் உணவுகளை தவிருங்கள். ☛குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உட்கொள்வதை தவிருங்கள். ☛சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் சளி பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். ☛தெருவில் விற்கும் உணவுகள், நீண்ட நாள் ஆன திண்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. ☛நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை இலை போன்றவற்றில் கசாயங்களை எடுப்பது நல்லது.
இந்திய பொருளாதாரத்தின் பலன்கள் ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே கிடைப்பதாக, ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் GDP வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், விவசாயிகள் தொழிலாளர்கள் நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு பொருளாதார பிரச்னைகளால் சிரமப்படுவதாக குறிப்பிட்டார்.
டிச.5 தான் ரிலீஸ் தேதி என்றாலும் புஷ்பா 2 ஃபீவர் இப்போதே தொடங்கிவிட்டது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது. மும்பையில் ₹ 3,000, டெல்லியில் ₹ 2,400, கொல்கத்தா ₹ 1,680, பெங்களூரில் ₹ 1,400 என விலை எகிறுகிறது. இதைப் பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர், பொழுதுபோக்கு என்ற பெயரில் இப்படி சுரண்டுவது நியாயமா என்று கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக பலியானோரின் எண்ணிக்கை தற்போது 5ஆக உயர்ந்துள்ளது. வேளச்சேரியில் சூறைக்காற்றால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த சக்திவேல் என்பவர் மரணமடைந்தார். மண்ணடியில் ATM-ல் பணம் எடுக்க சென்ற வடமாநில இளைஞர் ஒருவர், வியாசர்பாடியைச் சேர்ந்த இசைவாணன் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அரக்கோணத்தை சேர்ந்த 9 வயது சிறுவனும் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் JIO நெட்வாெர்க் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JIO சிம் பயனாளர்களால் இன்று மாலை முதல் அவுட்கோயிங் அழைப்பு மேற்கொள்ளவோ, இணையதள சேவையை பயன்படுத்தவோ முடியவில்லை எனக் கூறப்படுகிறது. உங்கள் பகுதியில் JIO நெட்வொர்க் சேவை கிடைக்கிறதா? கீழே உங்கள் கமெண்ட்ஸ் பதிவிடுங்கள்.
திருவண்ணாமலை, மலையடிவாரம் வ.உ.சி., நகரில், தொடர் கனமழையால், 3 வீடுகள் பூமிக்குள் புதைந்துள்ளன. அந்த வீடுகளில் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 7 பேர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று உருளும் நிலையில் உள்ளதால், மீட்புப் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து கோவை திரும்பிய அண்ணாமலை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார். அவர் பேசுகையில், நான் லண்டன் சென்று திரும்பிய 3 மாதக்காலத்தில் ஒரு SUCCESSFUL ACTOR அரசியலுக்கு வந்திருக்கிறார். ஒரு FAILED ACTOR துணை முதல்வர் ஆகிவிட்டார். 10 அரசியல் தலைவர்களின் ஃபோட்டோக்களை வைத்தால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என நினைத்து, ஒரு புது அரசியல் கட்சி வந்திருக்கிறது என பேசினார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் PAK வென்றது. புலவாயோ நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய PAK 165/4 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் உஸ்மான் கான், தயப் தாஹிர் ஆகியோர் தலா 39 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடி ZIM அணி, பாக். பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல்
108 ரன்களில் ஆட்டமிழந்தது. தயப் தாஹிர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதில்லை என்று CM ஸ்டாலின் கூறினார். இதற்கு பதிலளித்துள்ள இபிஎஸ், பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், மக்கள் பிரச்சனையை உரிய நேரத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். உரிய முறையில் செயல்பட்டு பிரச்சனையை தீர்ப்பது அரசின் கடமை. ஆனால், இங்கிருக்கிற முதலமைச்சரோ, பிரச்சனையை தீர்க்க முடியாத, கையாலாகாத, திராணியற்ற முதலமைச்சர் என இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.