News October 19, 2025

3 நாள்களில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

image

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களில் மட்டும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் 6,15,992 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News October 19, 2025

அடுத்த மதுரை மேயர் யார்?

image

மாநகராட்சியில் சுமார் ₹200 கோடி சொத்து வரி முறைகேடு புகார்கள் எழுந்ததை அடுத்து மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அப்பதவிக்கான ரேஸில் 5 பேர் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 79 – வது வார்டு கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ, 32 வது வார்டு விஜய மௌசுமி, ரோஹினி, வாசுகி சசிகுமார் ஆகியோர் பெயரை தலைமை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

News October 19, 2025

FLASH: இந்திய அணி பேட்டிங்

image

முதல் ODI-யில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி பெர்த் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ODI-ல் முதல் முறை கேப்டனாக சுப்மன் கில் அணியை வழிநடத்தவுள்ளார். இந்திய அணி: கில், ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், KL ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், சிராஜ். இந்த மேட்ச்சில் இந்தியா வெற்றி பெறுமா?

News October 19, 2025

BREAKING: விலை சரசரவென மாறியது

image

நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றது. தீபாவளி பண்டிகையையொட்டி முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலையில், ஒரு முட்டை 10 காசு உயர்ந்து ₹5.25-க்கும், சென்னையில் ₹5.90-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், கறிக்கோழி உயிருடன் விலை மாற்றமின்றி Kg ₹100-க்கும் விற்பனையாகிறது.

News October 19, 2025

திமுகவால் செய்யமுடியாததை EPS செய்துகாட்டினார்

image

தமிழக நலன் குறித்து அக்கறையில்லாமல் மத்திய அரசுடன் பகைமை பாராட்டுகிறது திமுக என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சொத்துவரி, மின் கட்டண உயா்வு குறித்து கேள்வி எழுப்பினால், மத்திய அரசு நிதி தராததே காரணம் என தமிழக அரசு சொல்கிறது என்றார். மேலும், ஊரக வேலை உறுதி திட்ட நிதியை தமிழகத்துக்கு திமுகவால் பெற முடியவில்லை எனவும், தனிநபராக டெல்லிக்கு சென்று EPS இதை செய்துமுடித்தார் எனவும் அவர் கூறினார்.

News October 19, 2025

காலை 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழை: IMD

image

நெல்லை, விருதுநகர், தேனி, குமரி, தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, மயிலாடுதுறை, தி.மலை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News October 19, 2025

பிஹார் தேர்தல்: நடிகையின் வேட்புமனு நிராகரிப்பு

image

பிஹார் தேர்தலில் போஜ்புரி நடிகை சீமா சிங்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிராக் பஸ்வானின் LJP (RV) கட்சி சார்பாக அவர் போட்டியிட இருந்தார். சிறிய தவறால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மறுபரிசீலனைக்காக மீண்டும் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

ரஷித் கானின் செயலால் பாகிஸ்தான் அதிர்ச்சி

image

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 ஆப்கன் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியான சம்பவத்தை கடுமையாக சாடியிருந்தார் ரஷித் கான். இதன் தொடர்ச்சியாக தன்னுடைய X-ன் பயோவில் இருந்த Lahore Qalandars அணியின் பெயரை நீக்கியுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தான் இடம்பெற்றிருந்த அணியின் பெயர்தான் Lahore Qalandars. இதனால், PSL-ல் அவர் இனி விளையாடமாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News October 19, 2025

மழை சீசனில் இந்த கசாயம் குடிங்க!

image

மழைக் காலத்தில் கடும் இருமலால் பாதிக்கப்படுபவர்கள் இந்த கசாயத்தை குடிக்கும்படி, சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் *முதலில் முளைக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும் *ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி, அதில் அதிமதுரம் & மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும் *நீர் நன்கு கொதித்ததும், அதை வடிகட்டி குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கு பகிரவும்.

News October 19, 2025

கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது

image

INDIA கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மியை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் விலகியுள்ளது. பிஹார் தேர்தலில் சக்காய், தம்தாஹா, பிர்பைன்டி, ஜமுய், மணிஹரி, கட்டோரியா ஆகிய பழங்குடி மக்கள் அதிகம் உள்ள 6 தொகுதிகளில் அக்கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது, ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. JMM-ன் முடிவால் NDA தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

error: Content is protected !!