India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசுப் பணிகளில் சேர்பவர்களது ஆவணங்களை 6 மாத காலத்திற்குள் சரிபார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 1985ஆம் ஆண்டு ஒருவர் அரசுப் பணியில் சேர்ந்தார். ஆனால், அவர் இந்திய குடிமகன் அல்ல என்று 2010ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், ஒருவர் பணியில் சேர்ந்த 6 மாதத்திற்குள் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று SC உத்தரவிட்டது.
1) Climatology – காலநிலை பற்றிய படிப்பு 2) CCI – Competition Commission of India 3) டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் – ரோலோஃப் டீசல் 4) இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் – சுவர்ணகுமாரி தேவி 5) கவி ராட்சசன் என போற்றப்பட்ட புலவர் – ஒட்டக்கூத்தர் 6) ரப்பரை பதனிட உதவும் தனிமம் – சல்ஃபர் 7) சூரியக் குடும்பத்தில் அதிக வெப்பமுடைய கோள் – வெள்ளி 8) இந்தியாவில் முதல் CENSUS 1881ஆம் ஆண்டு கணக்கிடப்பட்டது.
கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து அணி டெஸ்டில் 5 லட்சம் ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. NZ அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இச்சாதனையை படைத்துள்ளார். 1877 ஆம் ஆண்டு ஆஸி.க்கு எதிராக முதல் அதிகாரபூர்வ டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து அணி இதுவரை 1,081 டெஸ்டில் விளையாடி 399 வெற்றிகளையும் 327 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 355 போட்டிகள் டிரா ஆகியுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 10ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை & ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று IMD தெரிவித்துள்ளது. மேலும், 11ஆம் தேதி காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
பழைய காதலனால், பெங்களூரு பெண் ஒருவர் ₹2.5 கோடியை இழந்துள்ளார். ஸ்கூல் படித்த போது இவரை காதலித்த மோகன் என்பவர், மீண்டும் பழகி வலை வீசியுள்ளார். இருவரும் தனியாக இருக்கும் வீடியோவை வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அப்பெண்ணை மிரட்ட ஆரம்பித்து, வாட்ச், கார் என ப்ராக்கெட் போட்டுள்ளார் மோகன். ஆனால், டார்ச்சர் பொறுக்க முடியாததால், போலீசில் அப்பெண் புகார் கொடுக்க, தற்போது மோகன் கம்பி எண்ணுகிறார்.
‘ஊருக்கு போனா லெட்டர் போடுங்க” எனக்கூறாத ஜெனரேஷனே இருக்காது. ‘அன்புள்ள, நலம் நலமறிய ஆவல்’ எனும் வார்த்தையில் இருக்கும் பாசம் படிக்கும் போதே உணரலாம். வழிய வழிய லெட்டர் எழுதி, ‘உன் உயிர்’ எனப் பெயர் எழுதாமல் லெட்டர் கொடுக்காத பையன்களே இருந்திருக்க மாட்டார்கள். கடிதம் எழுதுவதன் மகத்துவத்தை கூறும் வகையில், டிச. 7 கடிதம் எழுதும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நீங்க கடைசியா எழுதிய லெட்டர் ஞாபகம் இருக்கா
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ₹1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021இல் சிவசேனா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் இருந்தபோது IT ரெய்டுகள் நடைபெற்றன. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. அவர் பாஜக கூட்டணியில் ஆட்சியில் இணைந்தபோது அவர் மீதான பினாமி வழக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை விமர்சித்து பேசிய நிலையில், ஆதவ் அர்ஜுனுக்கு விசிகவில் எதிர்ப்பு வலுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. திருமாவளவனின் பேச்சை மீறி அவர் செயல்படுவதாக நிர்வாகிகள் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். திமுகவை விமர்சித்து பேசக் கூடாது என திருமா அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், 2026 தேர்தலில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வரும் என்று ஆதவ் பேசியிருக்கிறார்.
மருத்துவம் வணிகமாகிவிட்ட சூழல், நாள், நட்சத்திரம் பார்த்து குழந்தை பெற விரும்புவது, அச்சம் உள்ளிட்ட காரணங்களால் கர்ப்பிணிகள் அதிகம் சிசேரியன் பிரசவத்தை நாடுவதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே தெலங்கானாவுக்கு (60.7%) அடுத்து 2-வதாக தமிழ்நாட்டில் தான் சிசேரியன் பிரசவம் அதிகமாக (45%) உள்ளது. தனியார் ஹாஸ்பிடல்களில் 2-ல் ஒரு பிரசவம் சிசேரியனாக உள்ளது. தேசிய அளவில் சிசேரியன் பிரசவம் 21.5% தான்.
இயற்கை பிரசவம் மூலம் பிறக்கும் குழந்தைகளை விட, சிசேரியன் முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சனைகள், சீரணம் தொடர்பான கடுமையான பாதிப்புகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக இந்திய – அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில் 3.2% சிசேரியன் குழந்தைகளுக்கு மேற்கண்ட நோய்கள் உள்ளது. இதனால் குழந்தைகளின் இறப்பு வீதமும் அதிகரிக்கிறது. ஆகவே, மருத்துவரிடம் நன்கு ஆலோசித்த பிறகு முடிவு எடுங்கள்.
Sorry, no posts matched your criteria.