India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக TN மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இதே கூட்டணியை திமுக 2 முறை தோற்கடித்திருக்கிறது என்றார். மூன்றாவது முறையாகவும் தோற்கடிப்போம். 2024ல் இரு கட்சிகளும் பிரிந்தது போல நடித்தன. அப்போதே ரகசிய கூட்டு இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தேன். இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது என கூறினார்.
சிக்கன் விலை இன்று(ஏப்.20) சரிவைக் கண்டுள்ளது. நாமக்கல்லில் ஒரு முட்டை ₹4.15 காசுகளுக்கு விற்பனையாகிறது. அதேபோல், முட்டைக் கோழி ஒரு கிலோ ₹85-க்கும், கறிக்கோழி ₹6 குறைந்து ₹80-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் கறிக்கோழி உயிருடன் கிலோ ₹130-க்கும், தோல் நீக்கிய கறி ₹200-க்கும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன?
கலிபோர்னியா யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் யாரும் பார்த்திராத ஒரு கலரை கண்டுபிடித்ததாக சொல்கின்றனர். அந்த கலருக்கு, ‘Olo’ என்றும் பெயரிட்டுள்ளனர். கண்களின் விழித்திரையில் (Retina) இருக்கும் வெவ்வேறு செல்கள் லேசருடன் தூண்டப்படும்போது இந்த கலர் தோன்றும் எனக் கூறுகிறார்கள். தற்போது வரை, உலகில் 5 பேர் மட்டுமே இந்த கலரை பார்த்துள்ளனர். அவர்கள், இதை ‘நீல-பச்சை’ காம்பினேஷன் என்கின்றனர்.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் சந்தைகளில் மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால், மீன்களின் விலை வழக்கத்தை விட கிலோவுக்கு குறைந்தபட்சம் ₹100 வரை அதிகரித்துள்ளது. அதுவும் விடுமுறை நாளான இன்று மீன்கள் விலை உயர்ந்திருப்பது, அசைவ பிரியர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் மட்டன், சிக்கனுக்கு மாறியுள்ளனர்.
திமுக மூத்த நிர்வாகியும், கடலூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான தங்கராசு காலமானார். தங்கராசுவை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கராசுவை கடந்த 1-ம் தேதி மினிஸ்டர் MRK பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்த்து சிகிச்சை குறித்து கேட்டறிந்த நிலையில், அவரும் தங்கராசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. விண்ணப்பிப்பவர்கள் 24 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். மாதச் சம்பளம் ₹23,000 இருந்து வழங்கப்படும். <
அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். தற்போது, இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் செயல்பாடுகள் (அ) கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இலக்கியம், நாவல், கவிதை, தொழில்முறை உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட அனுமதி பெற வேண்டியதில்லை. அதேநேரம், தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிட வேண்டும்.
கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட 3-ம் நாள், அவருடைய சீடர்கள் கல்லறைக்கு சென்ற போது கல்லறை காலியாக இருந்தது. எனவே அந்த நாளில் இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்துமஸைப் போல் அல்லாமல், உயிர்த்தெழுதலின் அடையாளமாக ஈஸ்டர் ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதியில் வருவது இல்லை.
அதிபர் டிரம்பின் கொள்கைகளை எதிர்த்து, அமெரிக்கா முழுவதும் மீண்டும் போராட்டம் வெடித்தது. டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு, மோசமான நிர்வாகம் ஆகியவற்றால் நாடு சுயத்தை இழந்து வருவதாக போராட்டக்காரர்கள் விமர்சித்தனர். டிரம்பின் ஆட்சியில் குடிமக்களின் சுதந்திரம் பறிபோய்விட்டதாகவும் குற்றம்சாட்டினர். பொருளாதார கொள்கைகள், பணி இழப்பு ஆகியவை கவலையளிக்கிறது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
பெரியவர்களை பார்த்தால், அவர்களின் காலைத் தொட்டு வணங்கும் பழக்கம் நம்மூரில் அதிகம். இது பாரம்பரியம் என்பதை தாண்டி இதில் வேறொரு நன்மையும் உள்ளது. ஆம், இதுவும் ஒரு வகை உடற்பயிற்சியே. உடலின் வட துருவமான தலையை குனிந்து, தென் துருவமான காலை எட்டும்படி குனிவது மூளையில் இருந்து வெளியேறும் ரத்த ஓட்டத்தை மேம்படுகிறது. மேலும், முதுகு மற்றும் முழங்கால் வலிக்கு இது நல்லது என்கின்றனர். SHARE IT.
Sorry, no posts matched your criteria.