India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல், மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் இன்று சந்திக்க இருக்கிறார். இதுகுறித்து TVK அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஊடகங்களுக்கு கூட அழைப்பு விடுக்காமல் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறது. ஒருபுறம் அரசியல் நெருக்கடிகள் இருந்தாலும், அதற்கு தீனிபோடும் வகையிலேயே விஜய்யும் செயல்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள மொன்தா புயலைத் தொடர்ந்து 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் தங்களது படகுகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்து வருகிறது. தற்போது 1 அவுன்ஸ்(28g) $48(₹4,216) சரிந்து $4,047-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $1.34 சரிந்து $48-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கடந்த வார தொடக்கத்தில் மளமளவென சரிந்து, வார இறுதியில் ஏற்றம் கண்ட தங்கம், தற்போது மீண்டும் குறைந்து வருவதால் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நவ.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபி, நர்சிங், பாரா மெடிக்கல், ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளில் இன்னும் 2,000 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இங்கே <

4 ஆண்டுகளாக காணாமல் போன EPS, இன்று CM ஸ்டாலினை நோக்கி கேள்வி கேட்கிறார் என கனிமொழி சாடியுள்ளார். ஒளிந்து கொண்டிருந்த EPS-ஐ, பாஜக கண்டறிந்து கூட்டணிக்குள் இணைத்துள்ளதாகவும் விமர்சித்தார். இந்த கூட்டணியை விரட்ட வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்றும் அவர் கூறினார். மேலும், ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

2027 உலகக் கோப்பைக்கு ரோஹித், கோலி தயாராவதற்காக, இருவரையும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வைக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக ODI கேப்டன் கில்லிடம் கேட்டபோது, இது பற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். அதேநேரம், தெ.ஆப்பிரிக்கா, நியூசி., தொடருக்கு இடையே சிறிது இடைவெளி உள்ளதால், அப்போது இதுகுறித்து முடிவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறவிருக்கிறார். இது மாற்றுக்கட்சியினரை மட்டுமல்ல, சொந்த கட்சியினரையும் அதிருப்தியடைய செய்துள்ளது. நேற்றிலிருந்து இந்த விவகாரம் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், கரூரை சேர்ந்த தவெக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

‘ஜெயிலர் 2’ பட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்திலிருந்த சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கும் நிலையில், வில்லனாக மிதுன் சக்கரவர்த்தி நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் வித்யா பாலன் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். முன்னதாக, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் கேமியோவாக நடித்திருந்த வித்யா, இதில் முழு படத்திலும் பயணிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹுக்கும்..

மனமுருகி கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால், நவகிரகங்களும் நம்முடனே இருக்கும் என்பது ஐதீகம். வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் நீங்கி, நேர்மறை சக்திகள் உண்டாகும். மன, உடல் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரமும் ஏற்படும். முருகனுக்கே உகந்த செவ்வாய்க்கிழமைகளில் 3 முறை கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால், நாம் நினைத்த காரியங்கள் கைகூடும். அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!

வங்கக்கடலில் ‘மொன்தா’ புயல் உருவானதாக IMD தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 600 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள இப்புயல், அடுத்த 48 மணி நேரத்தில் கடும் புயலாக வலுப்பெறும். இதனையடுத்து, நாளை மாலை (அ) இரவு நேரங்களில் காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.