India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்னையாகத்தான் தெரிவார் என ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அம்பேத்கர் பெயரை முழக்கமிடுவது ஃபேஷனாகிவிட்டதாக அமித்ஷா கூறியது சர்ச்சையானது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்வினையாற்றி வருகின்றன. எவ்வளவு தைரியம் இருந்தால் அம்பேத்கரை இவ்வளவு இழிவாக பேசுவீர்கள் எனக் கேள்வி எழுப்பிய கே.சி.வேணுகோபால், அம்பேத்கர் கடவுளுக்கு ஒப்பானவர்தான் என்றார்.
நீங்க விளம்பரம் தேட என் குடும்பம் தான் கிடைச்சதா என முகேஷ் கன்னாவுக்கு சோனாக்ஷி சின்ஹா விளாசியுள்ளார். சோனாக்ஷிக்கு அவரது தந்தை ராமாயணம் சொல்லிக் கொடுக்கவில்லை என முகேஷ் பேசியதே இந்த பஞ்சாயத்துக்குக் காரணம். பல வருசங்களுக்கு முன்னாடி நடந்த ஷோவில் இருந்த மத்தவங்களை விட்டுவிட்டு என்னை டார்கெட் செய்வது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர் என் குடும்பத்தையும் வைத்து செய்தியில் வர நினைக்காதீர்கள் என்றார்.
‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்திற்கு மேலும் ₹400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே ரூ.995.61 கோடி செலவீனம் செய்யப்பட்ட நிலையில், மேலும் ₹400 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்குத் தொகை விடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
BGT தொடரின் மூன்றாவது போட்டி போதிய வெளிச்சம் இல்லாததால் நிறுத்தப்பட்டது. ஐந்தாவது நாளான இன்று இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2.1 ஓவர்களில் 8 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. அதோடு, மழையும் லேசாக பெய்யத் தொடங்கியிருக்கிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ₹57,200க்கு விற்பனையான நிலையில் இன்று ₹57,080ஆக உள்ளது. நேற்று ₹7,150க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ₹15 குறைந்து ₹7,135க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹100க்கு விற்பனையாகிறது.
‘கார்த்தி 29’ படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஏப்ரலில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ‘மெய்யழகன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’, பிரேம் குமார் இயக்கத்தில் ‘கார்த்தி 28’ ஆகிய படங்களில் கார்த்தி பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே, அவரது 29ஆவது படத்தை ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மழை வெள்ளத்தின்போது செந்தூர் விரைவு ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தடுத்த ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு ரயில்வேயின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் பணியை கெளரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 800 பேரின் உயிரை காப்பாற்றிய ஜாபர் அலிக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
BGT மூன்றாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்கள் எடுத்திருக்கும் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்வதாக அறிவித்துள்ளது. அவர்கள் 7 விக்கெட்டுகளை இழந்திருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு 275 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கின்றனர். இன்றைய போட்டி முடிவதற்குள் இந்திய அணியின் விக்கெட்டுகளை எடுத்தால் ஆஸி வெற்றி பெறும்., 274 அடித்தால் இந்தியா வெற்றி பெறும்., இல்லாவிட்டால் போட்டி டிரா ஆகும்.
CM ஸ்டாலின் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டத்தை டிச.30ம் தேதி தொடங்கி வைக்கிறார். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று, தற்போது உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ₹1000 வழங்கப்பட உள்ளது.
BGT தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. போட்டியில் இன்று காலை வரை இரண்டு இன்னிங்ஸ் மட்டுமே முடிந்திருந்ததால் டிரா ஆகிவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவ்வணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருக்கிறது. இதனை இன்றைக்குள் இந்தியா சேஸ் செய்தால் வெற்றி பெறலாம்.
Sorry, no posts matched your criteria.