India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரேஷன் கடையில் புகுந்த யானை அரிசி மூட்டைகளைச் சேதப்படுத்தியது என்ற செய்தி சமீப காலமா நிறைய வருவதை பார்த்திருப்பீங்க. அது ஏன் தெரியுமா? ரேஷன் அரிசியில் வரும் வாசனை யானைகளுக்கு ரொம்ப பிடிக்குமாம், ஒரு மூட்டையில் ஒரு படி அரிசியை அவை சாப்பிடுமாம். அரிசி மட்டுமல்ல, உப்பு கூட யானை விரும்பி சாப்பிடும் உணவு என்கிறார் சூழலியல் ஆய்வாளர் கோவை சதாசிவம். ஏங்க அரிசி ராஜா.. இவ்வளவு ஒரு படி அரிசிக்கு தானா..?
அதிமுக மறைந்த தலைவர்கள், இந்நாள் தலைவர்கள் குறித்து விமர்சிக்காதீர் என TN பாஜக தலைமைக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையற்ற கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்க வேண்டாமென்றும், கட்சி நலன் கருதி பாஜக திட்டங்களை மட்டும் மக்களிடம் கொண்டு செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளதாம். பூத் கமிட்டியை வலுபடுத்துமாறும், வீடு வீடாக பிரச்சாரம் செல்லுமாறும் கேட்டு கொண்டதாகக் கூறப்படுகிறது.
பிஹார் அரசுப் பள்ளியில் ஆண் ஆசிரியர் ஒருவர் கர்ப்பம் என்று கூறி 12 மாதங்கள் விடுமுறை எடுத்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதன் மீதான விசாரணையில், பல ஆண் ஆசிரியர்கள் இதேபோல விடுமுறை எடுத்தது தெரியவந்துள்ளது. அவர்களுக்கான இணையதளத்தில் இருந்த ஓட்டைகள் மூலம் ஆசிரியர்கள் கர்ப்பகால விடுமுறை எடுத்து வந்துள்ளனர். இந்த ஓட்டை விரைவில் சரி செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
வன்னியர் உள் ஒதுக்கீடு கொடுத்தால் வரும் தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம், இல்லையெனில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுகவுக்கு சமூக நீதி இல்லை எனவும் வன்னியர்களை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும் சாடினார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழகம் அருகே உள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலாவதியான பொருள்கள், ரசாயனம் கலந்த உணவுகளால் ஹோட்டல் உணவுகள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, ஹோட்டல்களில் தரமான உணவு விற்பனையை உறுதி செய்ய வணிகர்கள், பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவர், நடுத்தர, பெரிய ஹோட்டல்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என TN உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
கட்சி தொடங்கியது முதலே விஜய்யை சர்ச்சைகளும் விடாமல் துரத்துகின்றன. பெரியாரின் நினைவு தினத்தையொட்டி பனையூர் கட்சி ஆபிஸில் பெரியார் போட்டோவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதுவும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அரசியல் கட்சியைத் தொடங்கிவிட்டு பொதுவெளிக்கு வரத் தயங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், எலக்ஷனின் போது ஓட்டு கூட்ட பனையூரில் இருந்தே கேட்பாரா? என வினவுகின்றனர்.
புதுமைப் பெண் திட்டத்தை டிசம்பர் 30ஆம் தேதி தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தற்போது, இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இதனை 30ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இனி அவர்களும் மாதம் ₹1000 பெறலாம்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகள் தொடங்கிய 30 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. ஜன.10ஆம் தேதி முதல் ஜன.19ஆம் தேதி வரை நடக்கும் வைணவர்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு நாளொன்றுக்கு 14,000 பக்தர்கள் வீதம் 10 நாள்களுக்கு 1,40,000 பேருக்கான முன்பதிவு காலை 11 மணிக்குத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே நிறைவடைந்ததால் காத்திருந்த பக்தர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.
பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தினார். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சுயமரியாதைச் சுடர், தங்கள் கொள்கைத் தலைவர் என நினைவஞ்சலி தெரிவித்துள்ளார். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, பெரியார் வழிகாட்டிய சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.