News October 27, 2025

TN அரசிடம் திருமா வைத்த கோரிக்கை

image

ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்றதால் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற கார்த்திகாவுக்கும், அபினேஷுக்கும் தலா ₹25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆனால், குகேஷுக்கு ₹5 கோடி, கார்த்திகாவுக்கு ₹25 லட்சம் தானா என திமுக அரசை எதிர்நோக்கி கேள்விகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், அவர்களுக்கான ஊக்கத்தொகையை ₹1 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என விசிக சார்பில் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

News October 27, 2025

தங்க நகை: இப்படியொரு கட்டுப்பாடா?

image

கல்யாண வீடுகள்ல பெண்கள் நிறைய தங்க நகைகள் அணிவதற்கு இந்த கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி அணியலாம். ஆனால் ஆடம்பரமாக அதிக அளவு நகைகள் போட்டுட்டு வந்தா ₹50 ஆயிரம் ஃபைன். ஏன் தெரியுமா? பணக்காரங்கள பார்த்து ஏழைகளும் நகைகள் சேர்க்க கடன் வாங்கி சிரமப்படுவதால இப்படி ஒரு கட்டுப்பாடாம். உத்தராகண்ட்ல இருக்குற இந்த கந்​தார் கிராமத்த இந்தியாவே வியந்து பாக்குது.

News October 27, 2025

சற்றுமுன்: கண்ணீருடன் விஜய்

image

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கண்ணீருடன் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் 33 குடும்பங்களை தனித்தனியாக விஜய் சந்தித்து வரும் நிலையில், அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை. மேலும் கூடுதல் நிதியுதவி செய்ய ஏதுவாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சுயதொழில், சொந்த வீடு, கடன் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துபூர்வமாகவும் பெறுகிறார்.

News October 27, 2025

CM பதவியை தக்கவைக்க அமைச்சரவையில் மாற்றம்

image

கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தபோது, CM பதவியை சித்தராமையா, DK சிவக்குமார் ஆளுக்கு 2.5 ஆண்டுகள் பங்கிட ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, நவ.20 உடன் சித்தராமையா CM ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால், பதவியை விட விரும்பாத சித்தராமையா, அதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு சில அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நவ.15-ல் டெல்லி மேலிடத்தை சந்திக்கிறார்.

News October 27, 2025

PAK-AFG மீண்டும் மோதல்: 5 பாக். வீரர்கள் பலி

image

ஆப்கனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் போரை தொடங்குவோம் என பாக்., அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஆப்கன் எல்லையில் மீண்டும் மோதல் வெடித்தது. இந்த மோதலில், 5 பாக்., வீரர்கள், 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. தங்களது எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாக பாக்., ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

News October 27, 2025

வட தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

மொன்தா புயல் சென்னைக்கு கிழக்கு பகுதியில் 560 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக மணிக்கு 16 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த புயலின் வேகம் சற்று குறைந்துள்ளது. புயலின் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் இன்று நாள் முழுவதும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

BREAKING: தங்கம் விலை ₹400 குறைந்தது

image

தங்கம் விலை இன்று(அக்.27) சவரனுக்கு ₹400 குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராமுக்கு ₹50 குறைந்து ₹11,450-க்கும், சவரன் ₹91,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹170-க்கும், பார் வெள்ளி ₹1,70,000-க்கும் விற்பனையாகிறது. <<18114487>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், நம்மூரிலும் தங்கம் விலை மீண்டும் மாற்றம் கண்டுள்ளது.

News October 27, 2025

பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார்: சீமான்

image

கரூர் துயரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை பனையூருக்கு அழைத்துள்ள விஜய், தேர்தலின்போதும் வாக்குப்பெட்டியை பனையூரில் வைத்து, அங்கு வந்து வாக்களிக்க சொல்வாரா என சீமான் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார், ஆனால் பனையூர் பஞ்சாயத்து என் (விஜய்) வீட்டில் தான், ஆலமரத்துக்கு வர மாட்டேன் என்றும், இது நாட்டாமையை தாண்டிய நாட்டாமையாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.

News October 27, 2025

FLASH: மீண்டும் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

image

கடந்த வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(அக்.27) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்ந்து 84,457 புள்ளிகளிலும், நிஃப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 25,858 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Kotak Mahindra, HDFC Bank, ICICI Bank, Tata Steel உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் உள்ளதால் அவற்றில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News October 27, 2025

இன்று விசாரணைக்கு வரும் தவெகவுக்கு எதிரான வழக்குகள்

image

கரூர் துயரம் தொடர்பான வழக்குகள் சென்னை HC தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன. N.ஆனந்த் முன்ஜாமீன் கோரிய மனு, கலெக்டர், எஸ்பிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியது, பிரச்சாரத்தின் போது, அடிப்படை வசதிகள் வழங்குவதை கட்டாயமாக்க கோரிய வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன. இதனால் தவெக வட்டாரம் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.

error: Content is protected !!