India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என ராமதாஸ் குரல் எழுப்பியுள்ளார். பஞ்சாப்பில் ஒரு டன் கரும்பு விலை ₹4,100 வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் ₹3150 மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படியெல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலின் சாதனையா? என விமர்சித்த அவர், ஒரு டன் கரும்புக்கு ₹5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
UGC தலைவராக இருந்த போது மன்மோகன் சிங்கிற்கு வந்த ஒரு அழைப்புதான், அவரை அரசியலுக்கு வரவழைத்தது. 1991ல் சோவியத் ஒன்றியம் உடைந்து உலகமே திக்குமுக்காடிப் போயிருந்தது. இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து இருந்தது. அப்போது நெதர்லாந்தில் இருந்த மன்மோகனுக்கு, பிரதமர் நரசிம்ம ராவ்வின் செயலாளர் போன் செய்து, நிதி அமைச்சராக தேர்வு செய்துள்ளதாக கூறினார். அன்று முதல் அவர் அரசியல்வாதி ஆனார்.
UPI பயனாளர்களுக்கு RBI நற்செய்தியை அறிவித்துள்ளது. இனி 3ஆம் தரப்பு ஆப்கள் மூலமும், PPI வாலட்களுக்கு பணம் செலுத்தலாம். அதாவது, Phonepe, Paytm வாலட்களுக்கு பணத்தை மாற்றவோ, பெறவோ விரும்பினால், அதற்கு அந்த Appஐ தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. வேறு எந்த UPI ஆப்கள் மூலமாகவும் இதை செய்யலாம். முன்னதாக, வங்கியின் ஆப்கள், வங்கியுடன் இணைக்கப்பட்ட ஆப்கள் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் ரோஹித்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஃபார்ம் இல்லாமல் அவர் ஆஸி.க்கு எதிரான BGT தொடரில் திணறி வருகிறார். 2வது டெஸ்ட்டில் 9, 3வது டெஸ்ட்டில் 10, 4th Test முதல் இன்னிங்சில் 3 ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், ரோஹித் கேப்டன் பதவியை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது ஓய்வுபெற வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
‘ஜெயிலர் 2’ படத்தில் KGF நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோக, முதல் பாகத்தில் நடித்த மிர்ணாவும், தமன்னாவும் 2ஆம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு ஜன.1ஆம் தேதி படம் குறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மார்ச் மாதம் ஷூட்டிங்கைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடர்பாக காங்., – மத்திய அரசுக்கு இடையே மோதல் என தெரிகிறது. அவரது நினைவிடத்திற்கு டெல்லியில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற காங்., கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. INC உடன் கலந்தாலோசிக்காமல் நிகம்போத் காட்டில் உடல் தகனம் செய்யப்படும் என உள்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில், நினைவிடம் அமைப்பது, அவருக்கு அளிக்கும் அஞ்சலி என மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
மன்மோகன் மறைவையடுத்து, ‘இந்திய நாட்டிய விழா’ ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக TN சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று முதல் ஜனவரி 1 வரை மாமல்லபுரத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 2ஆம் தேதி முதல் வழக்கம்போல நிகழ்ச்சிகள் நடைபெறும்” எனக் கூறப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழா (டிச.22 – ஜன.20) திட்டமிடப்பட்டிருந்தது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம். பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றார்.
யாருக்கு தான் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. ஆனால், பலருக்கு அது கனவாகவே நின்றுவிடுகிறது. அக்கனவை எட்டிப்பிடிக்க சில டிப்ஸ் ‣ தேவையற்ற ஆடம்பரங்களை தவிர்க்கவும் ‣ கடன் வாங்கி வாழ்க்கை நடத்த திட்டமிடாதீர்கள் ‣ சேமிப்புகளில் கவனம் செலுத்துங்கள் ‣ எப்போதும் அவசரத்திற்கு பணம் சேமிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள் ‣ வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் தொடர்ந்து உழைத்திடுங்கள்.
போதைப்பொருள் பள்ளிகள் வரை வந்துவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க சிறப்பு அதிரடிப்படையை அமைக்கவும் அரசுக்கு HC உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலை.,யில் உள்ள விசாகா குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளன.
உள் விசாரணை குழுவிடம் எத்தனை புகார்கள் நிலுவையில் உள்ளன. தற்போது வரை நடந்த விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும், போலீஸ், தமிழக அரசு, பல்கலை.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.