India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வந்திருந்தார். முதல்வர் வந்ததை அறிந்து அங்கு மக்கள் திரளான கூடினர். இதை பார்த்த ஸ்டாலின், அங்கு சென்று அவர்களுடன் கைகுலுக்கி நலம் விசாரித்துவிட்டு புறப்பட்டார்.
மாநிலத்தில் கடந்த ஓராண்டில் 55% அளவுக்கு குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக RTI தகவல் வெளியாகியுள்ளது. சாதிக்குள் திருமணம், மதக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மேற்கு மண்டலத்தில் இவை அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருமணம் நடந்த பிறகு பிரசவத்துக்காக ஹாஸ்பிடலுக்கு வரும்போது தான் இவை அதிகளவில் தெரிய வருகிறது. இதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
➤மேஷம் – அமைதி
➤ ரிஷபம் – கவலை
➤மிதுனம் – விருப்பம்
➤கடகம் – சிக்கல்
➤சிம்மம் – இன்பம்
➤கன்னி – போட்டி
➤துலாம் – தெளிவு
➤விருச்சிகம் – பரிசு
➤தனுசு – இரக்கம்
➤மகரம் – பெருமை
➤கும்பம் – ஆதாயம் ➤மீனம் – செலவு
‘பேபி ஜான்’ புரொமோஷன் நிகழ்ச்சிகளில் மஞ்சள் தடவிய தாலி கயிறுடன் வந்தது பற்றி கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். தாலி கட்டிய பின் குறிப்பிட்ட நாள்களுக்கு மஞ்சள் கயிறு இருக்க வேண்டும் என்பதால், அப்படி வந்ததாகவும், அந்த குறிப்பிட்ட நாள் இடைவெளியில் நல்ல நாள் இல்லாததால் தங்க செயினுக்கு மாற்றவில்லை எனவும் அவர் பதிலளித்துள்ளார். மேலும், தங்க செயினை விட இதுதான் புனிதமானது எனவும் தெரிவித்துள்ளார்.
ICC-யின் T20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தையும், ஆஸி., 2வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆனால், சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக விளையாடிய இந்தியா, முதல் இடத்தை பறிகொடுத்துள்ளது. இதனால், ஆஸி., முதல் இடத்தையும், இந்தியா 2வது இடத்தையும் பிடித்துள்ளன. அதேபோல், டெஸ்ட்டில் தெ.ஆப்., ஒருநாள் போட்டியில் பாக்., டி20யில் இங்கி., ஆகிய அணிகள் 3ஆவது இடத்தை பிடித்துள்ளன.
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க, ராஜ்காட் அல்லது கிசான் காட் பகுதியில் 1 -1.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை மன்மோகன் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் நினைவிடம் அமையும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரு, இந்திரா காந்தி நினைவிடங்கள் உள்ள ராஜ்காட் பகுதியிலேயே நினைவிடம் அமைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது கிடையாது என மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்தது. இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பேசிய காங்., எம்.பி. கார்த்தி சிதம்பரம், மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதால், பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல எனக் கூறியுள்ளார்.
கவலையை மறக்க சிரிக்கிறோம். ஆனால், அந்த சிரிப்பே ஒரு சிலருக்கு உயிரை பறிக்க காரணமாக அமைவதுதான் சோதனை. கடுமையாக சிரிக்கும் போது ஒரு சிலருக்கு மாரடைப்பும், மூச்சுத் திணறலும் ஏற்படுவது ஹாஸ்பிடல் ரிப்போர்ட்களின் மூலம் தெரியவந்துள்ளது. சிலருக்கு நினைவு இழப்பு, மூளை நோய்கள் கூட வரலாம் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இனி காமெடி நிகழ்ச்சிகளுக்கு கூட Disclaimer போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
IND vs AUS மோதும் 5ஆவது டெஸ்ட் வரும் 3ஆம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது. இதில் வென்றால் மட்டுமே, 2-2 என்ற அளவில் இந்த தொடரை IND சமன் செய்யும். ஆனால், கடந்த காலங்களில் அங்கு நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 5 போட்டிகளில் AUS வென்றுள்ளது. இந்த வரலாற்றை இந்தியா மாற்றுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நபராக இந்தியாவின் ஜகதீப் சிங் உள்ளார். Quantum Scape நிறுவனத்தின் நிறுவனரும், சி.இ.ஓ.வுமான சிங்கின் ஆண்டு வருமானம் ₹17,500 கோடி என Unstop ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, அவரது ஒரு மாத சம்பளம் ₹1,458 கோடியாகவும், ஒரு நாளைய சம்பளம் ₹48 கோடியாகவும் உள்ளது. Quantum Scape கம்பெனியை தொடங்குவதற்கு முன்பு, அவர் பல நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.