India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களுக்காக உழைக்கும் திராவிட மாடல் அரசை குறை கூற காரணங்கள் இன்றி, இபிஎஸ் பொய் கூறுகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஒரே பொய்யை அரைத்து அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கும் இபிஎஸ்-ஐ மக்கள் புறக்கணிப்பார்கள் எனக் கூறிய அவர், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் சமரசமின்றி திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், இது உண்மைதான். 1959ஆம் ஆண்டு 11.66 கிராம் தங்கத்தின் விலை ₹113 தான். இதன் பொருள், 1 கிராம் தங்கம் ₹10க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முந்தையை இந்த ரசீதை பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆகியுள்ளனர். இன்றைக்கு ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் ₹57,440 தேவைப்படுகிறது. ஆனால், அந்த காலத்தில் ₹113 என்பதும் பெரிய தொகைதான்.
திமுக ஆட்சிக்கு வந்தபின் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை குறை கூறியுள்ளார். தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ₹44,042 கோடி எங்கு சென்றது என கேள்வி எழுப்பிய அவர், திமுக மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி எம்.பிக்கள் வரை தனியார் பள்ளிகளை நடத்துகின்றனர். எனவே, அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலை.விவகாரத்தில் போராட்டம் நடத்த முயன்றதால் கைதான சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இதன்பின் பேசிய செளமியா, மாநிலத்தில் பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன; பெண்கள் பயத்துடன் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், பெண்களுக்கு அரசு கொடுக்கும் ₹1000 வேண்டாம்; பாதுகாப்புதான் வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தினால்கூட அரசு கைது செய்கிறது என்றார்.
புதன் – சூரிய பகவான் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம், 3 ராசிக்காரர்களை குபேரன் போல மாற்றும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, மேஷம், துலாம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இனி பணப் பிரச்னை நீங்கும். சிக்கலில் இருந்த பணம் வீடு தேடி வரும். முதலீடு நல்ல லாபத்தை தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். மகிழ்ச்சி பல மடங்கு பெருகும். உடல்நலனில் கவனம் தேவை.
இந்த தலைமுறையினரிடம் நியூ இயர் கொண்டாட்டங்கள் மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பார், பப் என்பது மட்டுமில்லாமல் இறை வழிபாட்டிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. காசி, அயோத்தி, திருப்பதி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் டிச.31 மற்றும் ஜன.1 லட்சக்கணக்கான மக்கள் கூடியதே இதற்கு உதாரணம். சுருக்கமாக சொல்வதானால் ஆங்கில புத்தாண்டு இந்தியமயமாக மாறியுள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் நாளை மதுரையில் ‘நீதி கேட்பு பேரணி’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பேரணிக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில், திட்டமிட்டபடி நாளை மதுரையில் நீதி கேட்பு பேரணி நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். போலீசார் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட ஊரக திறனாய்வுத் தேர்வு பிப்.1ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவிகள் + 50 மாணவர்கள்) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம்.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரத்தின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜீத்து மாதவன் எழுத, சிதம்பரம் இயக்க மட்டுமே உள்ளார். இப்படமும் மலையாளத்தில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. இதில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் டாஸ்மாக் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜன.15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜன.26 குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகள் இயங்காது. மதுப்பிரியர்களே தேதியை குறிச்சு வெச்சிக்கோங்க..
Sorry, no posts matched your criteria.