News January 4, 2025

இந்தியாவில் எவ்வளவு Left-Handers இருக்கிறார்கள்?

image

ஒரு வகுப்பில் 50 பேர் இருந்தால், அதில் 1, 2 பேர் இடதுகை பழக்கமுள்ளவர்களாக இருப்பதை பார்த்திருப்போம். அந்த வகையில், இந்திய மக்கள் தொகையில் 5.20% பேர் அத்தகைய பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 13.10%, கனடாவில் 12.80%, UKவில் 12.24%, ஃபிரான்ஸில் 11.15% பேர் உள்ளனர். இடதுகை பழக்கம் உள்ளவர்களில் நீங்கள் பார்த்த வித்தியாசமான பழக்கங்களை கமெண்ட் பண்ணுங்க.

News January 4, 2025

₹45 கோடி மாளிகை: கெஜ்ரிவால் மீது அமித் ஷா புகார்

image

மக்கள் பணத்தில் டெல்லியில் மாளிகை கட்டிக்கொண்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் சுஷ்மா விடுதி திறப்பு விழாவில் பேசிய அவர், அரசு கார், பங்களாவை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது 50,000 சதுர அடியில் ₹45 கோடி செலவில் பங்களா கட்டியுள்ளதாக விமர்சித்தார். இதற்காக டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் பதில் சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

News January 4, 2025

பேஸ்புக், இன்ஸ்டாவில் கணக்கு.. விரைவில் கட்டுப்பாடு

image

இந்தியாவில் எந்த வயதினர் வேண்டுமானாலும் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கலாம் என்ற நிலை உள்ளது. இதனால் சமூக பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து 18 வயதுக்கும் குறைவானோர் கணக்குத் தொடங்க பெற்றோர் சம்மதம் தேவை என்ற விதியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்தையும் அரசு கேட்டுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.

News January 4, 2025

விரைவில் ‘வீர தீர சூரன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்

image

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

News January 4, 2025

BREAKING: டிஜிபி எச்சரிக்கை

image

அண்ணா பல்கலை., வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஊகத்தின் அடிப்படையில் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தற்போது விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்பாக தற்போது வெளியாகும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News January 4, 2025

ரோகித், கோலிக்கு ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதா?

image

ரோகித் சர்மாவை தொடர்ந்து கோலியும் மோசமான ஃபார்மில் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்ம் காரணமாக ரோகித் விளையாடவில்லை. ஆனால், களமிறங்கிய கோலி 2 இன்னிங்சிலும் சேர்த்தே 23 ரன்கள் தான் எடுத்தார். இதனால், அவருக்கு எதிராகவும் திரும்பியுள்ள நெட்டிசன்கள், இருவருமே ஓய்வு பெற வேண்டும் என கூறுகின்றனர்.

News January 4, 2025

பகுதிநேர ஆசிரியர்களுக்கும் போனஸ் வழங்குக

image

C & D Group பணியாளர்களை போல் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பாடுபடும் அவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கைவிட்டுவிட்டார் என விமர்சித்த அவர், 13 ஆண்டுகளாக பணிபுரிகின்ற அவர்களுக்கு இந்த முறையாவது போனஸ் வழங்க வேண்டும். DMK தேர்தல் வாக்குறுதி 181-ன் படி அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News January 4, 2025

PF பென்ஷன்: ரூ.1,570 கோடி செட்டில்மெண்ட்

image

PF பென்ஷனுக்கான ஒருங்கிணைந்த பேமெண்ட் அமைப்பை மத்திய தொழிலாளர் அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம், பிஎப் ஓய்வூதியம் பெறும் 68 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளுக்கு, டிசம்பர் மாதத்துக்கான பென்ஷன் தொகையாக மொத்தம் ரூ.1,570 கோடியை அனுப்பியுள்ளது. புதிய சேவையின் மூலம், நாட்டின் எந்த வங்கியிலும் பென்ஷன் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதனால் பென்ஷன்தாரர்களின் அலைச்சல் குறையும்.

News January 4, 2025

பும்ரா நாளை விளையாடுவாரா?

image

முதுகுத் தசைப்பிடிப்பால் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன பும்ரா, நாளைய ஆட்டத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர்கள் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், நாளை அவரின் உடல்நிலையை பொறுத்தே, பவுலிங் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். ஒருவேளை, பும்ரா பவுலிங் செய்யவில்லை என்றால், அது IND அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

News January 4, 2025

உலகின் வயதான பெண்மணி உயிரிழந்தார்

image

உலகின் வயதான பெண்மணி என கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்த, ஜப்பானின் டோமிகோ இடூகா (116) உயிரிழந்தார். கடந்த 2019 முதல் அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், கடந்த டிச.29ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர். முதல் உலகப்போர் தொடங்குவதற்கு 6 ஆண்டுகள் முன்னதாக பிறந்து, 2 உலகப்போர்கள், கொரோனா மற்றும் டெக்னாலஜி புரட்சியை டோமிகோ கடந்து வந்துள்ளார்.

error: Content is protected !!