India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டிக்கெட் விலையை உயர்த்த ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜன.11- 23 வரை, மல்டிபிளக்ஸ் டிக்கெட்டுகளின் விலை வழக்கமான கட்டணத்தை விட ₹175, சிங்கிள் ஸ்கிரீன் டிக்கெட்டுகள் ₹135ஆக அதிகரிக்கலாம். புஷ்பா படத்தின் வசூலுக்கு முக்கிய காரணம் டிக்கெட் விலை உயர்வு. அதேபாணியில் டிக்கெட் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக MET தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. 6ஆம் தேதி கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? அப்படியெனில் கீழே கமெண்ட் பண்ணுங்கள்.
தமிழக பாஜகவுக்கு 15ஆம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் ஒருவர் 2 முறை தலைவர் பதவி வகிக்கலாம் என்ற விதி உள்ளது. ஆதலால் அண்ணாமலையே மீண்டும் தலைவராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களும், மாநிலத் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஸ்பைடர்மேன் நடிகர் டாம் ஹாலண்ட், நடிப்பில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் மனம் திறந்த ஹாலண்ட், “எனக்கு குழந்தைகள் பிறந்தபின், நடிப்பதில் இருந்து முழுமையாக விலகி, குடும்ப வாழ்க்கையை முழுமையாக வாழப் போகிறேன்” என்றார். ஹாலிவுட்டின் டாப் நடிகை ஸெண்டாயாவுடன் இவர் தீவிர டேட்டிங்கில் உள்ளார். ஹாலண்டின் முடிவு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்கு ஸ்பைடர்மேன் பிடிக்குமா?
ChatGPT, AI பாட்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்களின் தனிப்பட்ட தகவல்கள், பாஸ்வேர்ட், யாருக்கும் தெரியக்கூடாது என நினைக்கிற ரகசியங்கள், பைனான்ஸ் விவரங்கள் ஆகியவற்றை AI-யிடம் நிச்சயம் பகிர வேண்டாம். AI ஒருபோதும் தகவல்களை மறக்காது, இந்த தகவல்கள் வேறு யார் கைக்கும் கிடைக்கலாம். AI-க்களிடம் மருத்துவ ஆலோசனை கேட்பதும் நல்லதில்லையாம். ஆபாச விஷயங்கள் வேண்டவே வேண்டாம்.
பெஞ்சல் புயலை தீவிர பேரிடராக மாநில அரசு அறிவித்துள்ளது. புயலால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. அந்த பாதிப்பிலிருந்து மீள முடியாமல் மக்கள் துயரத்தில் உள்ளனர். இந்நிலையில், அந்த புயலை தீவிர பேரிடராக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்திற்கு உட்பட்ட பேரிடர் நிதியை மட்டுமன்றி, இதர நிதிகளையும் பேரிடர் கால சீரமைப்புக்கு பயன்படுத்தலாம்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நாளை (ஜன.5) உடன் முடிகிறது. இதன்படி, ஊராட்சித் தலைவர்கள், ஊரக ஒன்றிய தலைவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் தங்களது அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு விருந்து கொடுத்து விடை பெறுகின்றனர். இனி ஊராட்சி மன்ற செயலாளர்கள் தான், அரசு நலத்திட்டங்கள், மக்களுக்கான திட்டங்களை கண்காணிப்பார்கள். இதனால், விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.
மாநிலம் முழுவதும் துணை கலெக்டர்கள் 30 பேருக்கு பதவி உயர்வு அளித்து TN அரசு உத்தரவிட்டுள்ளது. 30 பேரையும் பல்வேறு மாவட்டங்களில் வருவாய் அதிகாரிகளாக நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆணையிட்டுள்ளார். முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு 54 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டனர். அதேபோல், சில நாட்களுக்கு முன்பு 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
தம்பதியர் உறவில் விரிசல் தொடங்கிவிட்டதை உணர்த்தும் அறிகுறிகள்: *நெகடிவாகவே தொடங்கும் பேச்சுகள் *பிரச்னைகளை கவனிக்காதது போல இருத்தல் *சாதாரண சண்டைகூட பெரிதாக மாறுவது *காதல் வந்த கணத்தை (பழையதை) மறந்துவிடுதல் *எப்போதும் மோசமானதையே கற்பனை செய்தல் *எப்போதும் குறை, விமர்சனம் சொல்லுதல் *விலகிவிட்ட உணர்வு, ஏக்கம் *துணைவர் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை கற்பனை செய்தல்.
மும்பையில் இன்று நடைபெறும் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் கியாரா அத்வானி கலந்து கொள்ளவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ள அவரது செய்தித் தொடர்பாளர், சோர்வின் காரணமாகவே கியாரா நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அவர் மருத்துவமனையில் அட்மிட்டானதாக வெளியான தகவல் பொய் என்று மறுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.