India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழில் கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் கங்கை அமரன். இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான அவர், பல படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். சிவகங்கை அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த கங்கை அமரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கங்கை அமரன் உடனடியாக ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்குவதற்காக விடுமுறை நாளான கடந்த 3ஆம் தேதி (வெள்ளி) ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. இதேபோல், பொங்கல் தொகுப்பை வழங்குவதற்காக விடுமுறை நாளான வரும் 10ஆம் தேதியும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனால் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் உண்டு. எனவே டோக்கனில் குறிப்பிட்டபடி அன்று பொங்கல் தொகுப்பை மக்கள் வாங்கலாம்.
CPI-M புதிய மாநில செயலாளர் சண்முகத்துக்கு விஜய் வாழ்த்து கூறியுள்ளார். பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும் என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். DMK கூட்டணி தலைவர்கள் கூட இதுவரை வாழ்த்து தெரிவிக்காதபோது, முதல் ஆளாக விஜய் வாழ்த்துக்கூறி, அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளார்.
அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நேற்று ஞானசேகரனின் வீட்டில் புலனாய்வுக் குழு நடத்திய சோதனையில், அதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. குற்றத்தின் தன்மையால் இந்த வழக்கு தற்போது மிக சென்சிடிவ் ஆன ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு பரிந்துரைப்படி, அவன் மீது 4வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
அண்ணா பல்கலை., விவகாரம் மாநிலத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இன்று ஈரோட்டில் 9ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் அத்துமீறல் சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவனை பைக்கில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அம்மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனக்கு ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக நடிகை ஹனிரோஸ் குற்றம்சாட்டியுள்ளார். மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள அவர், பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் தாம் கலந்து கொண்டபோது அங்கு வந்தவர், கண்ணியக் குறைவாக தன்னிடம் ஆபாசமாக பேசியதாக கூறியுள்ளார். மேலும், சமூகவலைதளங்களில் பின்தொடர்ந்து தொல்லை அளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
CPI (M) புதிய மாநிலச் செயலாளராக தேர்வான உடனே திமுகவுக்கு எதிராக பெ.சண்முகம் கருத்துக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், திமுக வெளிச்சத்தில் சிபிஎம் எப்போதும் இருந்ததில்லை. அப்படி கூறுவது பொருத்தமற்றது. மக்கள் பிரச்னைக்காகவும், மதவெறி சக்திகளை ஒழிக்கவும் தெருவில் இறங்கிப் போராடுவோம். எங்களின் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மனைவி டார்ச்சர் தாங்க முடியாமல் கணவர் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகின்றன. குஜராத்தில் சுரேஷ் என்பவர் கடந்த மாதம் தற்கொலை செய்தார். இதுகுறித்து அவரின் தந்தை அளித்த புகாரின்பேரில் செல்போனை கைப்பற்றி போலீஸ் ஆய்வு செய்தது. அதில் சுரேஷ் தன்னை, தனது மனைவி ஜெயா மனரீதியில் கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தள்ளிவிட்டதாகவும், அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
லக்னோவில் தாய், 4 தங்கைகளைக் <<15037822>>கொலை<<>> செய்த அர்ஷத், வலிக்காமல் எப்படி கொலை செய்வது என யூடியூப் வீடியோவை பார்த்தது தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்துவிட்டுத் தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் கூகுளில் தேடியுள்ளார். நியூ இயர் அன்று நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளிவருவது காவல்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘சூர்யா 45’ படத்தில், அப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியே வில்லனாக நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சூர்யா வக்கீலாக நடித்தும் வரும் நிலையில், எதிர் தரப்பு வக்கீலாக நெகட்டிவ் கேரக்டரில் பாலாஜி நடித்து வருவதாக கூறப்படுகிறது. கோவை சுற்றுவட்டார பகுதிகளில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. த்ரிஷா, சுவாசிகா, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.