India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண்களின் பாலியல் எண்ணங்களை கண்டறியும் வகையில், சர்வதேச ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள் முதலில் சுயநினைவுடனும், பின்னர் சுயநினைவு இல்லாத நிலையிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பெரும்பாலான பெண்கள் சுயநினைவு இல்லாத நிலையில், தங்களுக்கு பெண்கள் மீதே அதிக ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், பாலியல் உறவுக்கு ஆண்களையே பெரும்பாலான பெண்கள் தேர்வு செய்துள்ளனர்.
நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊசி மூலம் மருந்து செலுத்தி டாக்டர் சந்தான கோபாலன் தற்கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலுக்கும் தெரியவில்லை. அவரின் உடலை மீட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தை கண்டுள்ளதாக PM மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2014 வரை நாடு முழுவதும் 35% ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அது 100%ஐ நெருங்கிவிட்டது என்றார். மேலும், உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், பயணிகளுக்கு நவீன வசதிகள், நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் ரயில் சேவை ஆகியவற்றை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரபு தெரிந்தும் சட்டப்பேரவையை ஆளுநர் ரவி அவமதித்துள்ளதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறி ஆளுநர் வெளியேறி இருப்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக தெரிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், R.N.ரவியின் செயல்பாடு அரசியல் சாசன பொறுப்புக்கு ஏற்றது இல்லை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கைதானவர்கள் 6 மாதத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் நிலையில், இதற்கு மேலும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டிய தேவை ஏன் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியான நிலையில், சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டது.
ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக நாளை போராட்டம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் மீதுள்ள மக்களின் கோபத்தை திசை மாற்றும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் நாளை காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
BGT கடைசி டெஸ்டில் பும்ரா காயமடைந்து பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு முதுகு தசை பிடிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில்தான், வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 5 T20, 3 ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. பும்ரா இல்லாதது என்ன மாற்றத்தை அணிக்கு கொடுக்கும்.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் செல்வார்கள் என்பதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க 14,104 சிறப்பு பேருந்துகளை அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இந்த பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்தியன் 2 படம் லைகாவிற்கு பெரும் நஷ்டம். இந்தியன் 3ம் பாதியில் நிற்கிறது. அப்படத்தை முடித்து கொடுக்காமல், ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட கூடாது என லைகா நிறுவனம் திரைத்துறை கூட்டமைப்பில் புகார் அளித்துள்ளது. 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில், இன்னும் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சரின் திரையரங்க ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதனால் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளுநர் ரவியை ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். சட்டப்பேரவையில் அரசின் உரையை ஆளுநர் வாசிப்பது ஜனநாயக மரபு, அதை மீறுவதையே வழக்கமாக வைத்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார். இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. சட்டக் கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் ஆளுநராக ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என வினவியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.