India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிக்கன், மட்டனை விட பலருக்கும் மீன் பிடிக்கும். தினமும் மீன் சாப்பிடலாமா என்றால், தாராளமாக என்று கூறுகின்றனர் டாக்டர்கள். மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை மூளை, கண்கள், உடல் எடையை சீராக்க, இதய பிரச்னை மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆக தினமும் சாப்பிடலாம், அதேநேரம் சாப்பிடும் அளவில் கவனம் தேவை என்பதே டாக்டர்கள் அட்வைஸ்.

இதுவரை நடிகை, நடிகர்களின் Deep Fake வீடியோக்கள் வெளியாகின. அது தற்போது சாதாரண மக்கள் வாழ்விலும் புகுந்துள்ளது. ஹரியானாவை சேர்ந்த ராகுலிடம், ₹20,000 தரவில்லை என்றால், அவரது 3 சகோதரிகளின் AI Deep Fake நிர்வாண வீடியோக்களை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் ராகுல் தற்கொலை செய்துகொண்டார். இது போன்ற மிரட்டல்கள் வந்தால் பதற்றமாகாமல், போலீஸை அணுக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மகளிர் உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பிரதிகா ராவல் விலகியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்த போது, பிரதிகா ராவலுக்கு கணுக்காலில் படுகாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஹர்லின் தியோல் ஓபனிங் இறங்குவார் எனக் கூறப்படுகிறது. தொடரில் 308 ரன்கள் குவித்த பிரதிகா ராவலின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாகும்.

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் தெரிவிக்கும் நிகழ்வு நிறைவடைந்துள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பாதிக்கப்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். அப்போது முக்கியமான அறிவிப்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடைய கல்வி, மருத்துவச் செலவுகளை ஏற்பதாகவும், வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார்.

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு விருப்பமான பழக்கம் உண்டு. அதில் சில முக்கியமான உறுப்புகள், அதன் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க, என்ன செயல்கள் உதவியாக இருக்கும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தகவலை கமெண்ட்ல சொல்லுங்க

EPS-தான் ஒரே எதிரி என்ற மோடில் இயங்கிக்கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன். இதனால்தான் NDA கூட்டணி வேண்டாமென இருக்கிறார். அத்துடன் விஜய்யும் EPS உடன் சேரக்கூடாது என கூறி வருகிறார். ஆனால், விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், டிடிவி அடுத்து செல்லும் இடம் திமுகதான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்காகவே கரூர் மேட்டரில் ஆளும் தரப்புக்கு எதிரான கருத்துகளை அவர் சொல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

‘மொன்தா’ புயல் எதிரொலியாக அடுத்த 1 மணி நேரத்திற்கு சென்னை, செங்கை, கடலூர், கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருக்கவும். SHARE IT.

முன்பெல்லாம் வீட்டில் சத்தான உணவுகளை செய்து சாப்பிடுவோம். ஆனால் இன்றைய சூழலில் எல்லாம் Fast Food தான். இதனால் பலரும் பலவீனமாக இருக்கிறார்கள். இதற்கு உளுந்தங்கஞ்சியை ரெகுலராக சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். வாரத்தில் 2 முறையாவது இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் அவர்கள், இதன் மூலம் மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி உள்ளிட்டவைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த OPS-சிடம் ‘திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என CM கூறி இருக்கிறாரே’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக பதிலளித்தார். திமுகவா! என்று அழுத்தமாக கேட்ட உடனே, சுதாரித்துக் கொண்ட அவர், மக்கள் பேசிக் கொள்கிறார்கள்; என் மீது பழியை போட்டுவிடாதீங்க சாமி! என சிரித்துக் கொண்டே கூறினார்.

நடிக்கும்போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்ற போக்கு கொடுமையானது என சீமான் தெரிவித்துள்ளார். வேறு எங்கேயும் நடக்காத இது, இங்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அரசியல் என்பது வாழ்வியல் என்று குறிப்பிட்டுள்ளார். தம்பி, தங்கைகளுக்கு ஒரு மூத்தவனாக சொல்கிறேன், அரசியலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.