India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அனைத்து கிராமப்புற பள்ளிகளுக்கும் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நவ.9-ல் நடைபெறவுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை நாளை முதல் டவுன்லோடு செய்யலாம். இதில், மாவட்டத்திற்கு 100 பேர் (50 மாணவர்கள், 50 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு ஆண்டிற்கு ₹1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க நவ.4 கடைசி தேதி. SHARE IT.

67-ல் காங்., வீழ்ந்த மாநிலங்களில் பிஹாரும் TN-ம் முதன்மையானவை. பிஹாரில் லோஹியா சீடர்கள் (லாலு, நிதிஷ்) களத்தை பிடித்தனர். TN-ல் அண்ணாவின் தம்பிகள் (கருணாநிதி, எம்ஜிஆர்) ஆட்சியை தமதாக்கினர். ஜெ., மறைவுக்கு பிறகு அதிமுக vote bank சரிந்தது போல, பிஹாரில் நிதிஷின் JD(U), பாஜகவிடம் களத்தை இழந்துவருகிறது. பிஹாரில் இருதுருவ அரசியல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், TN-ம் தற்போது அதை நோக்கி நகர்ந்து வருகிறது.

சோசலிச கட்சியான JD(U) உடன் பயணித்தபடியே, பாஜக Hindutva-வை மாற்றாக முன்வைக்கிறது. TN-ல் திராவிட கட்சியான அதிமுகவுடன் கைகோர்த்தபடி, களத்தை திராவிடம் Vs இந்துத்துவம் என மாற்ற முனைகிறது. மாநிலத்தில் INDIA கூட்டணியை வழிநடத்தும் DMK, RJD அடுத்த தலைமுறையை (உதய், தேஜஸ்வி) கைகாட்டிவிட்டன; பாஜக எதிர்ப்பில் உறுதிகாட்டினாலும், எதிர்க்கட்சியாக மாநில கட்சிகளே (ADMK, JD(U)) தொடர வேண்டுமென விரும்புகின்றன.

உண்ணும் உணவு, தண்ணீர் வழியாக தினம் தினம் மனிதனின் உடலில் லட்சக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கிறது. இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகிறது. எனவே, முடிந்த வரை அனைவரும் (குறிப்பாக கர்ப்பிணிகள்) பிளாஸ்டிக் பொருள்களை தவிருங்கள். இல்லையென்றால் அவை உங்கள் ரத்தத்தில் கலந்து தாய்ப்பால் வழியாக உங்கள் குழந்தையின் உடலுக்குள் செல்லும். அடுத்த தலைமுறையை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

திமுக துணை அமைப்புச் செயலாளரும், சென்னை திருவிக நகர் தொகுதி MLA-வுமான தாயகம் கவியின் தாயார் சௌந்தரி அம்மையார் வயது மூப்பால் இன்று காலமானார். மேற்கு மாம்பலம் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு DCM உதயநிதி அஞ்சலி செலுத்தினார். மேலும், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், திமுக நிர்வாகிகள், MLA-க்களும் சௌந்தரி அம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். RIP

மழைப்பொழிவைப் பெறும் அடர்ந்த காடுகளான அமேசான் காடுகளில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. அதில், குறிப்பாக ஆபத்தான மற்றும் கொடிய விஷமுள்ள பாம்புகள் சில உள்ளன. இந்த பாம்புகள், காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை என்னென்ன பாம்புகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. share பண்ணுங்க

CM ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில்<<18119925>> SIR-க்கு <<>>எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிஹாரில் நடந்ததை போல SIR என்ற பெயரில் தமிழகத்தில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குரிமையை பறிக்கும் சதியை அனுமதிக்க மாட்டோம் என்றும் திமுக கூட்டணி தெரிவித்துள்ளது. மேலும், 2026 தேர்தலை சீர்குலைக்கும் வேலையை EC தொடங்கியுள்ளதாகவும் திமுக கூட்டணி சாடியுள்ளது.

புயல் எதிரொலியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கை, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், கவனம் மக்களே..!

பூத் அதிகாரிகள், ஒவ்வொரு வீட்டிற்கு 3 முறை சென்று வாக்காளர்களின் தகவல்களை சரிபார்பார்கள் என <<18119925>>ECI<<>> தெரிவித்துள்ளது. வெளியூரில் இருப்பவர்கள் ஆன்லைனில் Enumeration Form-ஐயும், 2003 வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டு பார்க்கலாம். மேலும், பிறந்த தேதி (அ) இருப்பிடச் சான்றாக ஆதார் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இருப்பினும், SIR-க்கான அடையாள சான்றாக ஆதாரை அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

TN-ல்<<18119925>> SIR பணிகளை<<>> மேற்கொள்ள திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நவ.2-ல் தி.நகரில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SIR தொடர்பாக தேர்தல் ஆணையமும் அக்.29-ல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.
Sorry, no posts matched your criteria.