India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புயல் பாதிப்பு எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை(அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்வதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மொன்தா புயல் நாளை தீவிர புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால், கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்படவுள்ளது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவில் ODI WC-யில் விளையாடிவரும் <<18100854>>ஆஸி., வீராங்கனைகளிடம்<<>>, சமீபத்தில் அத்துமீறப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலை விட்டு கஃபேக்கு சென்ற போது அத்துமீறிய அவலம் நடந்ததால், இனி வீராங்கனைகள் வெளியில் செல்லும் போது, போலீசாரிடம் கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரூர் துயரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த விஜய், அடுத்தக்கட்ட பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அவரது அரசியல் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கும் என CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கோர்ட் உத்தரவின்படி, அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் விதிகளை அறிவித்தவுடன், உரிய அனுமதி பெற்று விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை, பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதி என்று CM ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பரில் SIR நடவடிக்கை மேற்கொள்வது சவால்கள் நிறைந்தவை என்று அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும், மக்களின் வாக்குரிமையை பறிக்க துணியும் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழகம் போராடும், வெல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

SBI, IOB உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை 20%-ல் இருந்து 49%-ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும், RBI-யும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம், மூலதனம் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசுக்கு நிகராக தனியார் பங்குகள் வைத்திருக்கலாமா? கமெண்ட் பண்ணுங்க.

கடல் உணவுகளில் மிகவும் சுவையான இறால் பலருக்கும் பிடித்த ஒன்று. இறால் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் சில முக்கியமான நன்மைகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அதில், விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், வேறு ஏதேனும் நன்மைகள், உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

கரூர் துயரத்தில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவி, விஜய் அனுப்பிய ₹20 லட்சத்தை அவருக்கே திருப்பி அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்டவரை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் கூறிய நிலையில், சங்கவியை அழைத்துச் செல்லவில்லை எனத் தெரிகிறது. எனவே, தனக்கு பணம் வேண்டாம், விஜய் ஆறுதல் தெரிவித்தால் போதும் என அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

2025-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர். அவர்கள் யார்? எத்தனை சதம் அடித்தனர்? என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை ஆச்சரியப்பட வைத்த வீரர் யார்? கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.