News October 28, 2025

Sports Roundup: ரஞ்சியில் களமிறங்கும் ஜெய்ஸ்வால்

image

*புரோ கபடியில் பாட்னா பைரேட்ஸ் 46-37 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேற்றம். *வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. *ஆசிய யூத் கேம்ஸ் மகளிர் ஹேண்ட்பாலில், இந்தியா 33-17 என்ற புள்ளிகள் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. *ராஜஸ்தானுக்கு எதிரான ரஞ்சி போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவார் என தகவல்.

News October 28, 2025

என் படங்களில் இளையராஜா பாடல் இருக்காது: NKP

image

நான் இசையமைக்கும் படங்களில் இளையராஜா உள்ளிட்ட பிற இசையமைப்பாளர்களின் பாடல்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என நிவாஸ் கே பிரசன்னா தெரிவித்துள்ளார். ‘பைசன்’ படத்தின் ‘சீனிக்கல்லு’ பாடலுக்கு பதிலாக ‘மலர்ந்தும் மலராத’ பாடலை மாரி செல்வராஜ் வைக்க இருந்தாா். தன்னை வைத்து கொண்டு இன்னொருவர் பாடலை போடலாமா என கோபமடைந்து, அடுத்த 10 நிமிடத்தில் போட்ட டியூன் தான் ‘சீனிக்கல்’ என்று அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

News October 28, 2025

பள்ளிக்கரணை விவகாரம்.. TN அரசுக்கு நயினார் எச்சரிக்கை

image

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் அடுக்குமாடி கட்டுவதற்கு வழங்கிய அனுமதியை TN அரசு ரத்து செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். வனத்துறை, CMDA உள்ளிட்ட அரசுத் துறைகள், சட்டத்தை மீறி அனுமதி தந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை, தமிழக பாஜக சந்தித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் போராட்டம் நடத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

News October 27, 2025

3 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

image

புயல் பாதிப்பு எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை(அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்வதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மொன்தா புயல் நாளை தீவிர புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால், கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

ராசி பலன்கள் (28.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News October 27, 2025

SIR நடவடிக்கை: TN அரசியல் கட்சிகளுடன் EC ஆலோசனை

image

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்படவுள்ளது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

News October 27, 2025

ஆஸி., வீராங்கனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

image

இந்தியாவில் ODI WC-யில் விளையாடிவரும் <<18100854>>ஆஸி., வீராங்கனைகளிடம்<<>>, சமீபத்தில் அத்துமீறப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலை விட்டு கஃபேக்கு சென்ற போது அத்துமீறிய அவலம் நடந்ததால், இனி வீராங்கனைகள் வெளியில் செல்லும் போது, போலீசாரிடம் கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 27, 2025

BREAKING: விஜய் முக்கிய முடிவு

image

கரூர் துயரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த விஜய், அடுத்தக்கட்ட பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அவரது அரசியல் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கும் என CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கோர்ட் உத்தரவின்படி, அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் விதிகளை அறிவித்தவுடன், உரிய அனுமதி பெற்று விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News October 27, 2025

வாக்குரிமை பறிப்பை தடுப்போம்: CM ஸ்டாலின்

image

அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை, பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதி என்று CM ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பரில் SIR நடவடிக்கை மேற்கொள்வது சவால்கள் நிறைந்தவை என்று அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும், மக்களின் வாக்குரிமையை பறிக்க துணியும் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழகம் போராடும், வெல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News October 27, 2025

அரசு வங்கிகளில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க திட்டம்?

image

SBI, IOB உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை 20%-ல் இருந்து 49%-ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும், RBI-யும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம், மூலதனம் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசுக்கு நிகராக தனியார் பங்குகள் வைத்திருக்கலாமா? கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!