India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தபோது, CM பதவியை சித்தராமையா, DK சிவக்குமார் ஆகியோர் 2.5 ஆண்டுகள் பங்கிட ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பதவியை விட்டுத்தர விரும்பாத சித்தராமையா, அதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், காங்., மேலிட முடிவுகளுக்கு உட்பட்டு, 5 ஆண்டுகளுக்கும் தானே CM ஆக நீடிப்பேன் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

▶அக்டோபர் 28, ஐப்பசி 11 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா, தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். ‘Ala Vaikuntapuramlo’ என்ற அல்லு அர்ஜுனின் படம் போன்று ஃபேமிலி டிராமாவாக இருக்கும் என்றும், இது பான் இந்தியா படம் அல்ல என்றும் இப்பட தயாரிப்பாளர் நாக வம்சி கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் ரவீனா டன்டன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி.வி இசையில் உருவாகும் இப்படத்தில் மமிதா பைஜு ஹீரோயினாக நடிக்கிறார்.

நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்குவதற்கு IAF தயாராகி வருகிறது. இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான Israel Aircraft Industries நிறுவனத்திடமிருந்து ₹8,000 கோடிக்கு IAF ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் 6 டேங்கர் விமானங்களை வாங்க முடியும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், 6 பழைய, இரண்டாம் நிலை போயிங் 767 விமானங்கள் டேங்கர் விமானங்களாக மாற்றியமைக்கப்படும்.

மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், 21 வயதான அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகிய நிலையில், மாற்று வீராங்கனையாக ஷெபாலி வர்மா அணியுடன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஷெபாலி வர்மா களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

பிஹாரில் SIR மேற்கொள்ளபட்டபோது எழுந்த கேள்விகளுக்கே ECI-யிடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என காங்., தெரிவித்துள்ளது. முந்தைய காலங்களில் SIR நடக்கும் போது புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, தேவையில்லாதவர்கள் நீக்கப்பட்டனர். ஆனால் பிஹாரில் ஒருவரை கூட புதிதாக சேர்க்காமல், 65 லட்சம் பேரை நீக்கியுள்ளனர். இந்த சூழலில்தான் 12 மாநிலங்களில் SIR நடத்தப்பட உள்ளதாகவும் அக்கட்சி சாடியுள்ளது.

*வரும் நவ.4-ம் தேதி முதல் ‘பேட் கேர்ள்’ படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. *துருவ் விக்ரமின் ‘பைசன்’ 10 நாள்களில் ₹55 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *சமந்தா நடிக்கும் புதிய படத்திற்கு ‘மா இண்டி பங்காரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. *ஜித்து மாதவன் இயக்கும் படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். *விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

இன்று (அக்.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்காக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட 36,000 நெல் மூட்டைகள் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, கடந்த 10 நாள்களாக பெய்த மழையில் நனைந்த நெல் மூட்டைகள் முளைக்க தொடங்கிவிட்டதாகவும் அன்புமணி பேசியுள்ளார்.

நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக UGC அறிவித்துள்ளது. இந்த பட்டியலில், 10 பல்கலை.,களுடன் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக உ.பி.யில் 4, ஆந்திராவில் 2, மேற்கு வங்கத்தில் 2, கேரளாவில் 2, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒரு பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக தெரிவித்துள்ளது. மேற்கூறிய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பட்டங்கள் அங்கீகரிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.