India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீன்பிடித் தடைக்காலம் காரணமாக தமிழகத்தில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. ஏப்.15 அன்று மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியதை அடுத்து, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நாட்டுப் படகு மீனவர்கள் மட்டும் வழக்கம் போல மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், பிடிக்கப்படும் மீன்கள் போதுமானதாக இல்லை. வரத்து குறைந்ததால் ஒவ்வொரு ரக மீனும் கிலோவுக்கு ₹100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
நஸ்ரியா, ஃபஹத் ஃபாசில் ஜோடி விவகாரத்து செய்யப் போவதாக தகவல் பரவுகிறது. நஸ்ரியாவின் அண்மைக் கால சோசியல் மீடியா பதிவுகளும் அதையே உணர்த்துவதாக நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, “நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ‘Sookshmadarshini’ திரைப்பட வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை. இது கடினமான நேரம்” என நஸ்ரியா பதிவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் பாஜக வெற்றி பெறாது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் TNல் பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியாது. TN என்றும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான். 2026-லும் திராவிட மாடல் ஆட்சியே மலரும் என்றார். TN MP தொகுதிகள் குறையாது, நீட் விலக்கு, இந்தி திணிப்பு இருக்காது என அமித் ஷா உறுதியளிப்பாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
அரசின் விண்வெளி தொழில் கொள்கை CM ஸ்டாலின் குடும்பம் பயனடையவே உருவாக்கப்பட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், CM ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான Vaanam Space LLP-இன் பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தை பெறும் எனவும் அதற்கான ஆதாரம் தான் இது என்றும் கூறியுள்ளார்.
தெலங்கானாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் மனதை உலுக்குகிறது. தேஜஸ்வி என்பவரின் 2 குழந்தைகளுக்கும் சுவாச பிரச்னை இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கு, 4 மணிநேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுக்க வேண்டும். ஆனால், கணவரோ டெய்லி சண்டை போட, அவர் டிப்ரஷனில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் நிதானம் இழந்து தேஜஸ்வி, குழந்தைகளின் தலை, கழுத்தில் கத்தியால் வெட்டி கொன்றுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
பெங்களூரை சேர்ந்த சதீஷ் ₹50 கோடிக்கு ஓநாய் இன கேடாபாம்ப் ஒகாமி நாய் வாங்கியதா சோஷியல் மீடியாவுல பதிவிட்டாரே ஞாபகமிருக்கா? நெட்டிசன்கள் கூட அவர தூக்கி வெச்சு கொண்டாடுனாங்க. ஆனா, இதுல தான் ட்விஸ்ட். அது ஓநாய் இன நாயே இல்லையாம். பக்கத்து வீட்டுல வளர்ற இந்திய இன நாயாம். விலை கூட ஒரு லட்சமாம். ED அவரு வீட்டுக்கு போயி கிடுக்கிப்பிடி போட்டதுல சதீஷ் சரண்டரானாரு. எதுக்கு இந்த பெருமை?
நாங்கள் அழவில்லை; உரிமையை தான் கேட்கிறோம் என PM மோடிக்கு CM ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பாம்பன் திறப்பு விழாவில் பங்கேற்ற PM மோடி நிதி தரவில்லை என்பதற்காக சிலர் அழுகிறார்கள் என விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மத்திய அரசிடம் கையேந்த மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என குஜராத் CM ஆக இருந்தபோது PM கேட்டதை சுட்டிக்காட்டினார். நீங்கள் கேட்டால் சரி; நாங்கள் கேட்டால் தவறா? என்றார்.
பாஜக உடன் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, <<16081235>>முன்னாள் MLA<<>> உள்பட பலர் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டு கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக பக்கீர் மைதீன் என்பவர், அதிமுக தலைமைக்கு எழுதிய கடிதம் வைரலாகிறது.
திரும்ப பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை ‣https://www.tnpds.gov.in/ பக்கத்தில் ‘பயனாளர் நுழைவு’ கிளிக் செய்யவும் ‣ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து, வரும் OTPயை பதிவிடுங்கள் ‣கார்டு டவுன்லோட் டேப் வரும் ‣அதில், ‘Smart card Print’ ஆப்ஷனை கிளிக் செய்து, மொழியை தேர்வு செய்யவும் ‣உங்களின் ஸ்மார்ட் கார்டை PDF வடிவத்தில் எளிதாக டவுன்லோட் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
ம.பி.யில் 17 வயது சிறுமி, தனது கணவரை(25)‘சதக்… சதக்’ என 36 முறை கொடூரமாக குத்தி கொன்றுள்ளார். தனது காதலனின் 2 நண்பர்களுடன் சேர்ந்து இப்பிளானை அச்சிறுமி தீட்டியுள்ளார். வீடு திரும்பும்போது, தலையில் பீர் பாட்டிலால் அடித்து, பின்னர் 36 முறை மாறி, மாறி குத்திக் கொலை செய்துள்ளனர். நிகழ்ந்த இந்த கொடூரத்தை தனது காதலனுக்கு வீடியோ காலில் காட்டியுள்ளார் அச்சிறுமி. தற்போது 4 பேரும் கைதாகி இருக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.