India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிம்புவின் ’அரசன்’ படத்தின் ஷூட்டிங்கை ஜனவரி முதல் வாரத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரலில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தமிழ் புத்தாண்டுக்கு தான் சூர்யாவின் கருப்பு படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், சூர்யாவின் கருப்பு ரிலீஸில் மீண்டும் மாற்றம் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2021-ல் 12.5 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இந்த நோய்க்கான அறிகுறிகள் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததாலேயே இதனை முன்பே கண்டறிய நாம் தவறுகிறோம். மார்பக புற்றுநோய் குறித்த தவறான புரிதல்களும் அதன் உண்மைகளையும் தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. உயிர் காக்கும் தகவலை SHARE பண்ணுங்க.

தொடர்ந்து தனது யூஸர்களை தக்கவைத்துக் கொள்ள, Whatsapp புது புது அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது. அப்படிதான் தற்போது, X & பேஸ்புக்கில் Cover photo வைப்பது போல, Whatsapp-லும் Cover photo வைக்கும் வசதி அறிமுகமாகவுள்ளது. முதற்கட்டமாக, Beta வெர்ஷனில் பிசினஸ் அக்கவுண்டகளுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. விரைவில் இந்த வசதி, விரைவில் அனைத்து யூஸர்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கேமரூனில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குளறுபடி நடந்ததாக அங்கு வன்முறை வெடித்தது. இதனால் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில், பால் பியா 53.66% வாக்குகளையும், எதிர்த்து போட்டியிட்ட இசா சிரோமா 35.19% வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம் 92 வயதில் மீண்டும் அதிபரான பால் பியா, உலகின் மிகவும் வயதான அதிபர் என்ற சாதனையையும் படைத்தார். 1984-ல் இருந்து (41 ஆண்டுகளாக) பால் பியாதான் அதிபராக உள்ளார்.

மக்கள் பிரச்னையை மக்களோடு மக்களாக நின்று சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்கே தகுதியற்றவர்கள் என்று விஜய்யை, கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யை விட பெரிய கூட்டத்தை கையாண்டவர் விஜயகாந்த் என குறிப்பிட்ட கருணாஸ், சும்மா ஏதோ சப்ப கட்டு கட்டக்கூடாது என்று காட்டமாக பேசினார். கரூர் துயரை அடுத்து விஜய்யின் செயல்பாடுகள் மீதே அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ராணிப்பேட்டையில் இன்று(அக்.28) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘மொன்தா’ புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அந்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு WAY2NEWS பேசியது. அப்போது, சில ஊடகங்களில் தவறான தகவல் பரவுவதாகவும், இன்று பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவித்தார்.

➤இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரையை கட்டுப்படுத்த வெற்றிலை கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவை: வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு, ஏலக்காய், பட்டை & நாட்டுச்சர்க்கரை ➤செய்முறை: இவை அனைத்தையும் 10 முதல் 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். கொதி வந்து நல்ல மணம் வந்ததும் அதை வடிகட்டி சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். SHARE IT.

Ro-Ko-வால் ஹர்ஷித் ராணாவின் திறமை பாராட்டை பெறவில்லை என்று முன்னாள் வீரர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார். ஆஸி.,க்கு எதிரான கடைசி ODI-ல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றிக்கு உண்மையில் வித்திட்டதே ஹர்ஷித் தான் என்றும் அவர் குறிப்பிட்டார். ரசிகர்களுக்கும் ரோஹித் – கோலியின் ஆட்டமே தேவைப்பட்டதாகவும், அது கடைசி ஆட்டத்தில் நன்றாகவே கிடைத்ததாகவும் கூறினார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

விடாமுயற்சி, GBU என்று திரையில் ரசிகர்களுக்கு விருந்து வைத்துவிட்டு ரேஸிங்கில் பிஸியானார் அஜித். அவரது 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்நிலையில், அஜித்தின் 65-வது படத்தை ‘FIR’ பட இயக்குநர் மனு ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’என்னை அறிந்தால்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோது, ஆனந்த் – அஜித் இடையே ஏற்பட்ட நட்புறவால் இப்படம் கைகூடியுள்ளதாக தெரிகிறது.

மொன்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து 420 கிமீ தூரத்தில் உள்ள இந்த புயல் வடக்கு நோக்கி மணிக்கு 17 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே இன்று மாலை கரையை கடக்கும்போது மணிக்கு 90 – 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் TN-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் IMD கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.