India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விமான பணியாளர்களின் புதிய பணி நேர வரம்பு, ஏர்பஸ் A320 பிரச்னை, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், நேற்று இண்டிகோவின் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கி தவித்தனர். இதற்கு மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ நிறுவனம், நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கமளித்துள்ளது. நாளை (டிச.5) வரை மேலும் விமானங்கள் ரத்தாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை முன்னின்று வழிநடத்திய போதிலும், எப்போதும் எளிமையானவராகவே AVM சரவணன் இருந்துள்ளார். அவர் கை கட்டாமல் நிற்கும் ஒரு போட்டோவை கூட உங்களால் பார்க்க முடியாது. அதே போல, வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அவரின் டிரேட்மார்க். பழகுவதற்கு இனிமையானவர், பந்தா காட்டாத பண்பானவர், உழைப்பில் கடிகாரத்தை முந்துபவர் என இவரது பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். #RIP

EX MLA சின்னசாமியுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே, இடையில் நுழைந்த செந்தில் பாலாஜி, அவரை தட்டித்தூக்கி திமுகவில் இணைத்ததாக கூறப்படுகிறது. இதுபோல் இனி நடந்துவிடக் கூடாது என உஷாரான செங்கோட்டையன், சென்னை, டெல்டா, கொங்குவை சேர்ந்த 3 முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் விரைவில் தவெகவில் இணையவிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $22 உயர்ந்து, $4,211.56-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.4) மட்டும் சவரனுக்கு ₹160 உயர்ந்து, ₹96,480-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் வேலையே மதங்களுக்கு இடையே சூழ்ச்சி செய்வதுதான் என MP சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சிகளுக்கு TN இடமளிக்கக்கூடாது என்ற அவர், இங்கிருக்கும் கலாசாரம் வேறு என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் கலாசாரமாக தமிழ் கலாசாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடிய AVM சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். இந்த செய்தியை கேட்டு துடித்துப்போன ரஜினி, முதல் ஆளாக அவரின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். AVM ஸ்டுடியோவின் 3-வது தளத்தில் அவருக்கு இன்று மாலை 3.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள் இன்னும் சற்றுநேரத்தில் அஞ்சலி செலுத்தவிருப்பதாக கூறப்படுகிறது.

AV மெய்யப்ப செட்டியாரின் மகனான <<18464432>>AVM சரவணன்<<>> இந்திய திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்தவர். MGR முதல் சூர்யா வரை அரைநூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவின் மையப்புள்ளியாக இயங்கியுள்ளார். சம்சாரம் அது மின்சாரம், முரட்டுக்காளை, முந்தானை முடிச்சு, சிவாஜி, அயன் போன்ற மறக்க முடியாத படங்கள் அவர் தயாரித்தவை. திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய அவர், 1986-ம் ஆண்டில் சென்னையின் ஷெரிப்பாகவும் பணியாற்றியுள்ளார்.

ஒருபக்கம் மழை, புயலால் பல நாடுகள் தவித்து வரும் நிலையில், USA-வின் வடகிழக்கு பகுதிகளில் கடும் பனிப்புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு வாழும் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாசசூசெட்ஸ், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கு ஒரு அங்குலம் என்ற வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து மேலும் பலரை தூக்க KAS மும்முரம் காட்டுகிறாராம். இந்நிலையில் இதனை அறிந்த MGR மாளிகை இனியும் ஆட்களை இழக்கவேண்டாம் என சமாதான பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறதாம். இதற்காக வேலுமணியும், முனுசாமியும் கே.சி.பழனிசாமி, OPS ஆதரவாளர்கள் என பலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. வெள்ளைக் கொடி பறந்தால் OPS கட்சி ஆரம்பிக்கமாட்டார் என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரான AVM சரவணன் (86) காலமானார். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து திரைப்படம் தயாரித்தவர். குறிப்பாக, AVM தயாரிப்பில் உருவான ‘சிவாஜி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற சரவணன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.