India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித்குமாரின் வீடு (தனிப்பட்ட ஜிம் உள்பட) ₹15 கோடி மதிப்புடையது. ₹25 கோடி மதிப்பிலான சொந்த தனி விமானம், BMW, Aprilia Caponor போன்ற ₹60 லட்சம் மதிப்பிலான பைக்குகள் வைத்துள்ளார். லம்போர்கினி உள்பட ₹75 லட்சம் மதிப்பிலான கார்களையும் வைத்துள்ளார். அஜித்தின் நிகர சொத்து மதிப்பு ₹350 கோடி என கூறப்படுகிறது. அஜித் தற்போது ஒரு படத்திற்கு ₹165 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கொலம்பியா பல்கலை. மாணவர் மோஹ்சென் மக்தவி US குடியேற்ற அதிகாரிகளால் ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று விடுதலையான அவர் கோர்ட் வாசலில் நின்றவாறே, ‘அதிபர் டிரம்ப் மற்றும் அவரது அமைச்சரவையிடம் தெளிவாகவும் சத்தமாகவும் சொல்கிறேன், நான் உங்களைப் பார்த்து பயப்படவில்லை’ எனக் கூறினார். இது US அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் அஜித்குமார் இன்று தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரேஸில் பிஸியாக இருந்த அஜித், ஐபிஎல் மேட்ச் பார்த்து ரசிகர்களை குஷியாக்கினார். அதோடு, டெல்லியில் பத்மபூஷன் விருது வாங்கிய கையோடு சென்னை வந்த அவர் பேட்டி அளித்ததில் ரசிகர்கள் டபுள் ஹேப்பியாக உள்ளனர். இந்நிலையில், மனைவி ஷாலினி, அஜித்தின் 53-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். #HBD AK
ஆதார், பான், ரேஷன் கார்டுகள் குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக தங்கிய பல வெளிநாட்டினர் ஆதார், ரேஷன் கார்டுகளை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், குடியுரிமைக்கான ஆதாரங்களாக பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த ஆவணங்கள் இல்லாத மக்கள் அவற்றை முறையாக விண்ணப்பித்து பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
’சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும், அடுத்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி ஏற்படும்’ என தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகக் கூறி, இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நாதகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து சீமான் அவதூறாகப் பேசியதாக போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் இன்று பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததாகக் கூறிய தோனி, பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டும் 10-20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம் என்ற ஃபீலிங் உள்ளது என்றார். PBKS-க்கு எதிரான போட்டியிலும் CSK தோல்வியையேத் தழுவியது. மேலும், ஓய்வு குறித்து இப்போது பேச விரும்பவில்லை என்றும் தோனி தெரிவித்தார். மேட்ச் தொடங்கும் முன்பு ‘அடுத்த போட்டிக்கு வருவேனா என்றே தெரியாது’ எனக் கூறியிருந்தார்.
உங்களுக்கு முடி அதிகமாக சிக்குகிறதா? இதற்கு முதன்மைக் காரணம், போதுமான ஈரப்பதமும், மென்மையும் இல்லாததே. *சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்துதல். *அவகேடோ ஹேர் மாஸ்க்குகள் உபயோகப்படுத்தலாம். *போதிய கால இடைவெளியில் முடியை ட்ரிம் செய்யலாம். *தலையணைகளில் சாட்டின் போன்ற மென்மையான பொருளைப் பயன்படுத்தலாம். *அதிகமாக தலை வாருவதையும் தவிர்க்கலாம்.
ஜெர்மனியின் நாஜி படைகளை சோவியத் யூனியன் வென்றதைக் கொண்டாடும் வகையில், வருகிற 9-ம் தேதி மாஸ்கோவில் வெற்றி தின அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள PM மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் பங்கேற்க மாட்டார் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என ரஷ்ய அதிபருக்கான பத்திரிகை செயலர் கூறியுள்ளார்.
பாக்.-க்கு ஆதரவாக பேசும் சிலர் அவ்வளவு அன்பு இருந்தால் பாக்.-க்கே செல்லலாம் என AP Dpy CM பவன் கல்யாண் காட்டமாக கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த நபரின் இரங்கல் கூட்டத்தில் பேசிய அவர், இந்துக்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்தியா தான் எனக் கூறிய அவர், இங்கு வாழமுடியாவிட்டால் எங்கு செல்வது என்று கேள்வியெழுப்பினார். இப்போது போர் ஏற்பட்டால் மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் சூளுரைத்தார்.
சுறா படத்தை வழங்கிய தனியார் டிவியின் ஒரு பணியாளரின் தனிப்பட்ட ஈகோவால் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்காமல் சதி செய்துவிட்டனர் என இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் கூறியுள்ளார். சுறாவை தோல்வி படமாக சித்தரித்து அந்நபர் மீம்ஸ் போட வைத்தார், இது விஜய்க்கும் தெரியும் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். நேற்றுடன் சுறா வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவான நிலையில், ரீரிலிஸ் செய்கிற எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.