News August 20, 2025

விரைவில் ஜெர்மனி செல்லும் CM ஸ்டாலின்

image

ஐரோப்பாவிலும் TN Rising மாநாட்டை நடத்தவுள்ளதால், CM ஸ்டாலின் ஜெர்மனி செல்ல உள்ளார் எனவும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் TRB.ராஜா தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த அவர், 2024 முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 80% வரை அமலுக்கு கொண்டு வந்து திமுக அரசு சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

News August 20, 2025

BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும்.. HAPPY NEWS

image

9 – 12-ம் வகுப்பு மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களோடு பன்முகத்திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைப்பட்டறையை அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், அனைத்து பள்ளிகளிலும் போதை எதிர்ப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை எடுத்துச் செல்லும் நல்ல உள்ளங்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News August 20, 2025

மற்றொரு திசைத் திருப்பும் முயற்சியா?

image

எப்போதெல்லாம் அரசுகளுக்கு நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் புதிய சர்ச்சை உருவாக்கப்படும் என்பார்கள். தற்போது வாக்காளர் பட்டியல் சர்ச்சையை கையிலெடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தொடங்கியுள்ளன. ராகுலும் ‘வோட் அதிகார்’ பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் ‘<<17462799>>PM, CM<<>> பதவிபறிப்பு மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதா என சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News August 20, 2025

தனியாருக்கு தூய்மைப் பணிகள்: HC முக்கிய உத்தரவு

image

சென்னை மாநகராட்சியில் (GCC) தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிராக உழைப்போர் உரிமை இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த HC, மண்டலம் 5, 6-ல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான GCC தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்றும் கோர்ட் கூறியுள்ளது. இதற்காக போராட்டமும் நடைபெற்றது.

News August 20, 2025

GST வரி மாற்றம்: நாடு முழுவதும் விலை குறைகிறது

image

GST வரி விதிப்பில் மத்திய அரசு மாற்றம் செய்யவுள்ளது. 5%, 12%, 18% மற்றும் 28% ஆக உள்ள வரி முறைகள் 5%, 18% மற்றும் 40% ஆக மாறவுள்ளது. இதனால், நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய டூத் பேஸ்ட், குடை, பிரஷர் குக்கர், சிறிய அளவிலான வாஷிங் மெஷின், செல்போன், காலணிகள், ஆடைகள், மருந்து உள்ளிட்டவற்றின் விலை குறையும். அதேநேரம், புகையிலை, சூதாட்டம் ஆகிவற்றின் விலை உயரும் எனக் கூறப்படுகிறது. SHARE IT.

News August 20, 2025

அப்போ மாடு; இப்போ மரம்.. சீமானின் புதிய மாநாடு

image

மதுரையில் எழுச்சி பொங்க ஆடு, மாடுகளுக்கு முன் சீமான் ஆற்றிய உரை இணையத்தில் டிரெண்டானது. இதனால் அடுத்தது மரங்களோடு தான் மாநாடு என ஆல் ஏரியாவும் அதிர்ந்துபோகும் அளவிற்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார் சீமான். இந்நிலையில், திருவள்ளூரில் அக்.30-ல் நடக்கவுள்ள மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை அவர் பார்வையிட்டிருக்கிறார். இதன் ஃபோட்டோஸ் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிவருகிறது. உங்கள் கருத்து?

News August 20, 2025

யாருடைய கரிசனமும் தேவையில்லை: பிரித்வி ஷா

image

இந்திய அணியில் இடம்பெறாதது, IPL-ல் விலை போகாதது என பின்னடைவுகளை சந்தித்து வரும் பிரித்வி ஷா, தனக்கு யாருடைய கரிசனமும் தேவையில்லை என தெரிவித்துள்ளார். சமீபத்திய உள்ளூர் போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக ஆடி, சதம் விளாசிய நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், தனது வாழ்க்கையில் பல மேடு, பள்ளங்களை சந்தித்துள்ளதால், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு மீண்டும் அணிக்கு திரும்புவேன் என தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

ஏன் இந்தியா மீது கூடுதல் வரி? USA சொன்ன ஷாக் காரணம்

image

இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளது USA. இதுதொடர்பாக ஆக.25-ல் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையும் ரத்தானது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தவே இந்தியா மீது டிரம்ப் அரசு கூடுதல் வரி விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். NATO உள்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் இதற்கு ஆதரவளித்துள்ளதாகவும் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

News August 20, 2025

BREAKING: தவெக மாநாட்டில் மீண்டும் பெரிய விபத்து

image

தவெக மாநாட்டில் பிற்பகலில் <<17463695>>கொடிக்கம்பம் விழுந்து<<>> கார் சேதமடைந்த விபத்தை தொடர்ந்து மற்றொரு விபத்து அரங்கேறியுள்ளது. மாநாட்டு திடலின் பிரதான நுழைவு வாயிலில் ராட்சத போக்கஸ் லைட்டுகள் கட்டப்பட்ட கம்பம் கீழே விழுந்து கண்ணாடி துண்டுகள் சிதறின. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மாநாட்டு ஏற்பாடுகளை கூடுதல் கவனத்துடன் செய்ய விஜய் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 20, 2025

Prayer-க்கு வரலையா? ஜெயில் கன்ஃபார்ம்.. வினோத சட்டம்

image

மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் வெள்ளிக்கிழமைகளில் மசூதிக்கு வராவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹53,422 – ₹61,794 அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் இருந்து விடுபட முடியும் எனவும் ஆளும் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமிக் கட்சி எச்சரித்துள்ளது. இந்த சட்டத்த பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?

error: Content is protected !!