India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தங்கம் வெள்ளியின் விலை இன்று குறைந்திருக்கிறது. இருந்தாலும், அதன் விலை இனி வரும்காலங்களில் மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் சொல்கின்றனர். தங்கம், வெள்ளியை விட விலை உயர்ந்த உலோகங்கள் சில இருக்கின்றன. இவை தொழிற்சாலை தேவைகளுக்காக பயன்படுகின்றன. அந்த விலை உயர்ந்த உலோகங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

வீட்டில் உள்ளவர்கள் அவசர நேரத்திற்கு உங்களுக்கு Call பண்ணும்போது, அதனை எடுக்கமுடியாமல் போனால் ஏதாவது அசம்பாவிதம் நேரலாம். இதனை தவிர்க்க போனில் இந்த Settings-ஐ ON-ல வெச்சுக்கோங்க. ➤போனில் உள்ள Dial pad-க்கு சென்று ➤Calling Accounts ➤Call forward Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤நெருங்கிய உறவினரின் போன் நம்பரை உள்ளிடுங்கள். Call-ஐ நீங்கள் எடுக்கவில்லை என்றால், அது அவர்களுக்கு Forward ஆகும். SHARE.

‘மொன்தா’ புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. எண்ணூரில் தொடர்மழை பெய்து வருவதால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி வருகின்றனர். புயல் இன்று மாலை கரையை நெருங்கும் போது மணிக்கு 90 – 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்.

2026 தேர்தலுக்காக திமுக பல முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் பயிற்சி வழங்குகிறார். இதில், MP, MLA, மாவட்ட செயலாளர்கள், கிளை செயலாளர் என சுமார் 3,000 பேர் பங்கேற்றுள்ளனர். கரூர் மக்களை நேற்று விஜய் சந்தித்த அதே மாமல்லபுரம் ரிசார்ட்டில்தான் திமுகவின் இக்கூட்டமும் இன்று நடைபெறுகிறது.

கடந்த 4 நாள்களாக விலை மாற்றத்தை சந்திக்காமல் சைலண்ட் மோடில் இருந்த வெள்ளி இன்று(அக்.28) ஒரே அடியாக கிலோவுக்கு ₹5,000 குறைந்துள்ளது. 1 கிராம் ₹165-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,65,000-க்கும் விற்பனையாகிறது. இம்மாத தொடக்கத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த வெள்ளியின் விலை, மாதத்தின் கடைசி வாரங்களில் மளமளவென கிலோவுக்கு ₹41,000 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

டாக்டர் பரிந்துரைத்த நாள்களில் Syrup-ஐ குடித்துவிட்டு, Expiry Date இருக்கிறது என்பதற்காக ஸ்டாக் வைக்கக்கூடாது. Syrup பாட்டிலை திறக்கும்போது அதனுள் புகும் காற்றால், ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் தன்மையை இழந்து நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணங்களால் இருமல் வரும் என்பதால், ஸ்டாக் வைத்த Syrup-ஐ எடுத்துக் கொள்ளக்கூடாது என்கின்றனர் டாக்டர்கள்.

கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 1 மாதமாக முடங்கிப்போய் இருக்கிறது தவெக. நேற்றுதான் பலியானோர் குடும்பத்தை அழைத்து விஜய் ஆறுதல் சொல்லி, இழப்பீடு வழங்கினார். இந்நிலையில், மீண்டும் புத்துணர்ச்சியோடு தேர்தல் பணிகளை தொடர்வது குறித்து 2-ம் கட்ட நிர்வாகிகளோடு விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், கட்சியின் பொதுக்குழுவை விரைவில் நடத்தவேண்டும் என விஜய் சொன்னதாக கூறப்படுகிறது.

இன்று தமிழகம், ஆந்திராவை அதிர வைத்துள்ள ‘மொன்தா’ புயலின் பெயர் காரணம் தெரியுமா? இப்பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது. தாய்லாந்து மொழியில் ‘மொன்தா’ என்றால், ‘மணமிக்க மலர்’ அல்லது ‘அழகான பூ’ என பொருள் பெறுகிறது. மேலும், மென்மை, அழகு & இயற்கையின் மணத்தை குறிக்கவும் தாய்லாந்து மொழியில் ‘மொன்தா’ குறிப்பிடப்படுகிறது. எனவே, இயற்கையின் அழகையும், மழையின் நறுமணத்தையும் ‘மொன்தா’ பிரதிபலிக்கிறது.

இந்தியாவில் துட்டு கொட்டோ கொட்டு’னு கொட்டும் கோயில் திருப்பதி என அனைவரும் அறிவோம். ஆனால், திருப்பதியை போலவே நாட்டின் பணக்கார கோயில்கள் லிஸ்ட் உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அந்த லிஸ்ட்டை பார்க்கவும். இவற்றில் எந்தெந்த கோயில்களில் நீங்க தரிசனம் செஞ்சிருக்கீங்க?

அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிரீன் கார்டு வைத்திருக்கும் வெளிநாட்டினர் உள்பட அனைவரும் நாட்டிற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் facial recognition மற்றும் பயோமெட்ரிக் சோதனைக்கு உட்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் வைத்திருப்பவர்களை கண்டறிய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.