India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தற்போது தமிழகம் முழுவதும் நகரங்களில் இயக்கப்படும் உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் செய்ய அனுமதி தர வேண்டுமென அண்மையில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு, கோயில் நிர்வாகத்தால் இயக்கப்படும் பஸ்களில் மட்டும் மாற்றுத் திறனாளிகள் இனி இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார்.
நாம் தமிழர் கட்சியில் தான் சொல்வதை கேட்காதவர்கள் விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள் என்று சீமான் காட்டமாக பேசியிருக்கிறார். கட்சியினர் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் நான் சொல்பவர்கள்தான் வேட்பாளர்கள், அதனை மீறி யாராவது போட்டியிட நினைத்தால், விஜய் கட்சிக்கு சென்றுவிடுங்கள் என்று கூறினார். சீமானின் இப்பேச்சு குறித்த உங்களது கருத்து என்ன?
நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் செய்த ஒரு காரியம் பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சமீபத்தில்
பழங்குடி கிராமமான பெடபாடுவுக்கு சென்றிருந்த அவர் வயதான பெண்கள் உள்பட பலர் காலில் செருப்பின்றி இருந்ததை கண்டுள்ளார். உடனடியாக அந்த கிராமத்தில் இருக்கும் 350 பேருக்கு செருப்பு வாங்கி கொடுக்க முடிவு செய்து, அதை நிறைவேற்றியும் உள்ளார். யார் சாமி இவர்?
2008-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதிதான் ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பமானது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியும், கொல்கத்தா அணியும் மோதின. அதில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய நியூசிலாந்தின் ஜாம்பவான் மெக்கல்லம் சரவெடியாக 73 பந்துகளில் 158 ரன்களை விளாசினார். இதனால் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது. பிறகு விளையாடிய ஆர்சிபி 82 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. மிஸ் யூ மெக்கல்லம் சார்!
செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில், அந்த நிறுவனங்கள் வரும் நவ.-டிச. மாதங்களில் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10%-20% உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி விரிவாக்க செலவீனத்தை ஈடுகட்டவும், லாபத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இக்கட்டண உயர்வுக்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
GST-க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 7 நாள்களுக்குள் நம்பரை வழங்க வேண்டும் என்று CBIC உத்தரவிட்டுள்ளது. GST-க்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் அதிகாரிகள் தேவையற்ற ஆவணங்களை கேட்டு அலைக்கழிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, 7 நாள்களுக்குள் ரெஜிஸ்டிரேஷனை முடிக்க வேண்டும் என்று உத்தரவு பறந்துள்ளது. சந்தேகத்திற்குரிய விண்ணப்பங்களுக்கு மட்டும் 30 நாள்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24-ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது பிறந்தநாளான இன்று குழந்தைக்கு ‘எவராஹ்’ என ராகுல் பெயர் சூட்டியுள்ளார். மனைவி குழந்தையுடன் தான் இருக்கும் போட்டோவுடன் பெயரை இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளார். ‘எவராஹ்’ என்ற பெயருக்கு ‘கடவுளின் பரிசு’ என அர்த்தம் என்பதையும் ராகுல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பெயர் நல்ல இருக்கா?
பல தடைகளை தாண்டி வெளியான விக்ரமின் ‘வீர தீர சூரன்’ -2 படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு இரவில் நடக்கும் கதையில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் உள்ளிட்டோரின் மாறுபட்ட நடிப்பு மக்களை கவர்ந்தது. திரையில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் தற்போது OTT-க்கு வருகிறது. வரும் 24-ம் தேதி அமேசான் பிரைம் OTT-யில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்களுக்காக அயராது உழைக்கும் போலீசுக்கு நாள் கிழமை கிடையாது, நேரம் காலம் கிடையாது, விடுமுறையை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதனை மாற்றும் வகையில், போலீசுக்கும் வார விடுமுறை அளிக்கப்படும் என்று 2021ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு, ஐகோர்ட்டில் காவலர் ஒருவர் மனு அளித்திருக்கிறார்.
வக்ஃப் சட்டத்துக்கு எதிராக மே.வங்கத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மைனாரிட்டி முஸ்லிம்களை காக்க இந்தியா நடவடிக்கை எடுக்குமாறு வங்கதேசம் வலியுறுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, முதலில் அங்குள்ள மைனாரிட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள், தேவையின்றி மூக்கை நுழைக்காதீர்கள் என பதிலடி தந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.