India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒருபுறம் திருமண செலவுக்கே பலரும் தள்ளாடி வரும் நிலையில், உலகை ஆச்சரியப்பட வைக்கும் அதிக செலவிலான திருமணங்களும் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. இந்த லிஸ்ட்டில் யார் யாரின் திருமணங்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பதை பார்க்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணுங்க. உங்க கல்யாணத்துக்கு எவ்வளவு செலவு பண்ணீங்க?

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக கோவை வந்த CP ராதாகிருஷ்ணன், கொடிசியா அரங்கில் நடைபெற்ற தொழில் துறையினருடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். இதில் துணை ஜனாதிபதி பதவி என்பது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை என அவர் தெரிவித்தார். நாடு உயர்ந்தால் தான் நாம் வளர முடியும் என்றும், விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்சிக்கு முக்கியம் எனவும் கூறினார்.

22 காரட் ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் ₹3,000 குறைந்துள்ளது. காலையில் சவரன் ₹1,200 குறைந்த நிலையில், மதியம் மேலும் ₹1,800 சரிந்துள்ளது. சென்னையில், தற்போது 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,075-க்கும், 1 சவரன் ₹88,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கம் விலை ₹9,000 சரிந்து, 1 சவரன் விலை மீண்டும் ₹90,000-க்கு கீழ் சென்றுள்ளது. SHARE IT.

கபடியில் தங்கம் வென்று கண்ணகி நகரை பெருமைப்படுத்திய கார்த்திகாவுக்கு தமிழக அரசு ₹25 லட்சம் பரிசு தொகை வழங்கியிருந்தது. இந்த தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என சீமான், திருமா, இபிஎஸ், வேல்முருகன் என பலர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தனக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கியிருக்கலாம் என கபடி வீராங்கனை கார்த்திகாவே பேசியிருக்கிறார். TN அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

2026 ஏப்.1 முதல், தங்கத்தைபோல் வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம் என RBI அண்மையில் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, வெள்ளி நகைகள், நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். பார் வெள்ளி, ETF, மியூச்சுவல் பண்ட் போன்ற நிதி சொத்துக்கு கடன் கிடையாது. நீங்கள் ₹2.5 லட்சம் வரை பெற விரும்பினால் வெள்ளியின் மதிப்பில் 85% கடன் கிடைக்கும். ₹5 லட்சம் வரை 80% வரையும், அதற்கு மேல் 75% வரையும் கடன் பெறலாம்.

2019-ல் இருந்து தாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளை பெற்று வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்தார். 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம் என கூறிய அவர், அன்றைக்கு தலைப்புச் செய்தி, திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது என்பதுதான் என்றும் குறிப்பிட்டார். இதை ஆணவத்தில் சொல்லவில்லை, மக்கள் மீதான நம்பிக்கையிலேயே சொல்வதாகவும் வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டத்தில் CM கூறினார்.

இந்திய சினிமாவை புரட்டிபோட்ட பாகுபலி படத்தின் பார்ட் 3-யை விரைவில் எதிர்பார்க்கலாம். ஆம், கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் & தயாரிப்பாளர்களிடம் இது குறித்து பேச்சுவார்த்தையில் ராஜமெளலி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த படம் அனிமேஷன் படமாக எடுக்கப்படவுள்ளதாம். முன்னதாக, முதல் 2 பாகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, ‘பாகுபலி The epic’ என்ற பெயரில், வரும் அக்டோபர் 31-ம் தேதி ரிலிஸாகவுள்ளது.

மொன்தா புயல் இன்று இரவு கரையை கடக்கவுள்ள நிலையில், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை சென்னை, செங்கை, திருவள்ளூர், கோவை, காஞ்சி, குமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், வெளியே செல்பவர்கள் பாதுகாப்புடன் இருங்கள். SHARE IT

₹399 மதிப்புள்ள ChatGPT Go மாதாந்தர சப்ஸ்கிரிப்ஷனை ஓராண்டுக்கு இலவசமாக வழங்கப்போவதாக Open Al நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 4 முதல் புதிதாக Sign Up செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இதன்மூலம், AI image generation போன்ற பிரத்யேக சேவைகளை தடையில்லாமல் பெறலாம். பயனர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் இப்படி ஒரு ஆஃபரை அறிவித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. SHARE.

கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய்தான் முதன்மை காரணம் என சீமான் தெரிவித்துள்ளார். விஜய் மீது சிபிஐ FIR பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், பாஜக கூட்டணிக்கு விஜய் செல்லவில்லை எனில் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என்றார். மேலும், வழக்கை சிபிஐக்கு மாற்றியதும் முன்ஜாமின் மனுவை ஆனந்த் திரும்ப பெறுகிறார் என்றால் சிபிஐ அவரை காப்பாற்றுகிறது என்றே அர்த்தம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.