India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிஹாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு சட்டத்தில் கள்ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல், SC, ST வன்கொடுமை சட்டம் போன்றே BC-க்கும் தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். முன்னதாக, மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி அளித்திருந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘The Family Man’ வெப்சீரிஸின் 3-வது சீசன் வரும் நவம்பர் 21-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சீசன் பாகிஸ்தான் தீவிரவாதிகளையும், 2-ம் சீசன் விடுதலை புலிகளையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தற்போதைய 3-ம் சீசன், சீன ஆச்சுறுத்தல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வார விடுமுறையையொட்டி 3 நாள்களுக்கு சுமார் 1,000 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து அக்.31, நவ.1-ல் 690 பஸ்களும் இயக்கப்படும் என்றும் கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து 150 பஸ்களும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவ.2 அன்று பணியிடங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாகவும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. SHARE IT.

சுவை மிகுந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, எப்போதும் தனி அனுபவம் தரும். சுவை மற்றும் மெல்லும்போது ஏற்படும் சத்தங்கள் நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும். ஓய்வு நேரங்களில், ஸ்நாக்ஸ் நம் மனதை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. சுவை மிகுந்த ஸ்நாக்ஸ் பட்டியலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

வர்ஷா பரத் இயக்கிய ‘பேட் கேர்ள்’ படம், U/A 16+ சான்றிதழுடன் செப். 5-ம் தேதி வெளியானது. இதன் டீசர் வெளியானதில் இருந்தே இப்படத்தை சுற்றி பல சர்ச்சைகள் வெடித்தது. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் பல விருதுகளை வென்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நவ.4-ம் தேதி Hotstar ஓடிடி தளத்தில் நீங்கள் இப்படத்தை பார்க்கலாம்.

2-ம் கட்டமாக SIR நடத்த போவதாக ECI நேற்று அறிவித்தது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால் என கேரள CM பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) மறைமுகமாக திணிக்கும் முயற்சி எனவும், மத்தியில் ஆளும் கட்சியின் கைப்பாவையாக ECI செயல்பட கூடாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, ECI-ன் அறிவிப்பை திமுக கூட்டணி கட்சிகளும் சாடியிருந்தது.

காதலி இல்லாத வலியை விட, முடி கொட்டும் வலிதான் இளைஞர்களை வாட்டி வதைக்கிறது. ஆனால், இப்பிரச்னைக்கு தைவான் ஆய்வாளர்கள் தீர்வு கண்டறிந்துள்ளனர். National Taiwan University-யை சேர்ந்த ஆய்வாளர்கள், 20 நாள்களில் வழுக்கை தலையில் முடி வளர்க்கும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் மீது இன்னும் சோதிக்கப்படவில்லை என்றாலும், ‘பண்டிகைய கொண்டாடுங்கலே’ என்ற மோடில் நெட்டிசன்கள் ஆனந்தத்தில் திளைத்துள்ளனர்.

8-வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குழு தலைவராக ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உறுப்பினர் செயலாளராக பங்கஜ் ஜெயின், பகுதி நேர உறுப்பினராக புலக் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் பரிந்துரைப்படி 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடையவுள்ளனர். 2026-ம் ஆண்டு ஜன.1 முதல் இக்குழுவின் பரிந்துரைகள் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்.

கடந்த 14 ஆண்டுகளில், ஜம்மு – காஷ்மீரில் உள்ள இமயமலை பனிப்பாறை ஏரிகள் 50% அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வழித்துறை ஆணையம் சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், கீழ் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கட்டுமானங்களுக்கு அனுமதி தரவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அனுமதி வழங்கியதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும், சதுப்பு நில எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா இடங்களுக்கு மட்டுமே அலுவலர்கள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் TN அரசு கூறியுள்ளது. அங்கு ராம்சார் தலம் அமையும் இடம் இன்னும் புல எண்களுடன் வரையறுக்கப்படவில்லை என்று TN அரசு கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.