India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மொன்தா புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே சற்றுநேரத்திற்கு முன்பு கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையை கடக்க 3 – 4 மணி நேரம் ஆகலாம் என IMD கணித்துள்ளது. புயல் எதிரொலியாக ஆந்திரா, ஒடிசா, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அபூர்வ ராகங்களில் கமலுடன் நடித்து திரையுலக பயணத்தை தொடங்கியது போல, நெல்சன் இயக்கத்தில் அவருடன் நடித்து ஓய்வு பெற ரஜினி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதை விரிவாக்க பணிகளில் நெல்சன் ஈடுபட்டுள்ளதாகவும், படப்பிடிப்பு 2027-ல் தொடங்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

தீவிரமடைந்துள்ள மொன்தா புயல் இன்றிரவு ஆந்திராவின் பாலகொல்லு அருகே கரையை கடக்கும் என IMD கணித்துள்ளது. இரவு 9 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கும் என்றும், இரவு 11 மணிக்குள் முழுவதுமாக கரையை கடந்துவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள்!

சில நாடுகளில் இந்திய ரூபாய்க்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அங்கே, நீங்கள் டாலர் வைத்திருப்பது போல ஜாலியாக செலவழிக்கலாம். அதனால், அந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது பட்ஜெட் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டாம். அவை எந்தெந்த நாடுகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இவற்றில், நீங்கள் சுற்றுலா செல்ல விரும்பும் நாடு எது? கமெண்ட்ல சொல்லுங்க!

தங்கள் மண்ணில் இருந்து 3-ம் நாடு ஒன்று, ஆப்கனுக்கு எதிராக டிரோன் தாக்குதல் நடத்துவதை பாக்., ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நாட்டின் பெயரை கூறாமல், தங்களுடன் ரகசிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ஆப்கனில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை கைப்பற்ற முயற்சிப்போம் என டிரம்ப் கூறியது மற்றும் பாக்., -USA இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்பட்டு வரும் நிலையில், இந்த ரகசியத்தை உடைத்துள்ளது.

மொன்தா புயலையொட்டி புதுச்சேரி ஏனாமில் நாளை(அக்.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மழை பாதிப்பால் சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதும் மழை நீடிப்பதால் நாளை விடுமுறை அளிக்க மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்கள் விரைவில் அறிவிக்க உள்ளன.

புதிய ஆடைகளை வாங்கிய உடன் அணிந்தால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் வாங்கிய ஆடையை வேறொருவர் ட்ரையல் பார்த்திருக்கலாம். அவர்களின் வியர்வை ஆடையில் பட்டிருக்கும். இதை அப்படியே நாம் ஒருநாள் முழுவதும் அணிந்திருந்தால் Rashes, allergy போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம். இதனால் புதிய ஆடைகளை துவைத்து, வெயிலில் காயப்போட்ட பின்பு அணிவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE.

கரூர் துயரினால் முடங்கியிருந்த விஜய், தற்போது கட்சிப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தவெக அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை அவர் நியமித்துள்ளார். N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 28 பேர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவிற்கு தவெக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் தன்னை அணியில் தேர்ந்தெடுக்காததற்கு, ஷமி உள்ளூர் போட்டியில் பதிலடி கொடுத்து வருகிறார். ரஞ்சி டிராபியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், முதல் இன்னிங்ஸில் 3, 2-ம் இன்னிங்ஸில் 5 என 8 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார். இதனால், அவரது பெங்கால் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி டிராபியில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை ஷமி கைப்பற்றியுள்ளார்.

இதுவரை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பொதுத்துறை நிறுவனமான HAL, 1988- க்கு பிறகு முதல்முறையாக உள்நாட்டில் பயணிகள் விமானத்தை தயாரிக்க உள்ளது. இதற்காக ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. PM மோடியின் UDAN திட்டத்தின் கீழ், இந்தியாவின் 2, 3-ம் நிலை நகரங்களை இணைக்கும் குறுகிய தூர விமான சேவைக்காக, இந்த விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
Sorry, no posts matched your criteria.