India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிஹார் இளைஞர்களின் கனவு & ஆசைகளை மோடி, நிதிஷ்குமார் தலைமையிலான NDA கூட்டணி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பிஹார் எல்லா வளர்ச்சி குறியீடுகளிலும் பின்தங்கியே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிஹார் இளைஞர்களின் எதிர்காலத்தையும் மோடி – நிதிஷ் இணைந்து நாசமாக்கியதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

*’பராசக்தி’ பர்ஸ்ட் சிங்கிள் வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல். *யஷ்-ன் ‘டாக்ஸிக்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை ரீ-ஹூட் செய்ய படக்குழு முடிவு. *மிருணாள் தாக்கூரின் ‘டகாய்ட்’ படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. *மாரி செல்வராஜுக்கு ‘இயக்குநர் திலகம்’ என வைகோ பட்டம் சூட்டியுள்ளார்.

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணையமைச்சர் ரக்ஷா கட்சே, தோனியை சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள MSD-ன் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது, விளையாட்டில் உளவியல் ரீதியான பயிற்சிக்கான மேம்பாடு & விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துதல் குறித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது.

*உலக பக்கவாத நாள்.
*1832 – பெங்களூரில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் படையினருக்கு எதிராக நடத்தப்படவிருந்த சிப்பாய்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
*1886 – பிரிட்டிஷ் இந்திய அரசு – திருவாங்கூர் மன்னர் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.
*1931 – கவிஞர் வாலி பிறந்தநாள்.
*1950 – கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தொடர் கல்கி இதழில் முதல்முறையாக வெளிவர ஆரம்பித்தது.

டிரம்ப் மத்தியஸ்தம் செய்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தம், தற்போது மீறப்பட்டுள்ளது. இஸ்ரேல் PM நெதன்யாகு, காஸாவில் உடனடியாக கடும் தாக்குதலை நடத்துமாறு அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இது மீண்டும் அப்பாவி காஸா மக்கள் மீதான கொடூரத்திற்கு வித்திடும் என உலக தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

நடிகர் சூரி அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில், ‘நேற்று இன்று நாளை’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. சூரி தற்போது ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ‘செல்ஃபி’ படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

*மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக்கூர்மை.
*நாம் வேடிக்கையானவர்களாக இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும்.
*நீங்கள் எப்போதும் கோபமாக புகார் கூறிக் கொண்டே இருந்தால், உங்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.
*‘அறியாமை’ என்பது அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல, அது அறிவின் மாயையே ஆகும்.
*யார் விதியும் இங்கு எழுதப்படவில்லை.

தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் SIR குறித்து மடைமாற்றும் வேலையில CM ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். முதலில் CAA, அடுத்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தற்போது SIR என முன்னுக்கு பின்னாக மாறிமாறி பேசுவதாகவும் சாடியுள்ளார். SIR-ஐ எதிர்த்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை நாளை நடத்தப்போவதாக CM அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸி., மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி காயம் காரணமாக, இங்கி., & தெ.ஆப்பிரிக்கா உடனான லீக் போட்டியில் விளையாடவில்லை. ஓய்வில் இருந்த அவர், உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் நாளை (அக்.30) நடைபெறவுள்ள இந்தியா உடனான அரையிறுதி போட்டியில் அலீஸா பங்கேற்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. லீக்கில் ஆஸி., உடன் தோல்வியுற்ற இந்தியா, செமி ஃபைனலில் வெற்றியை நோக்கி போராடும்.

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 503 ▶குறள்: அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. ▶பொருள்: அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.
Sorry, no posts matched your criteria.