India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முன்னாள் முதல்வர் OPS, கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி அங்கே வந்த அவர், இரண்டு நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திற்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்று இன்று அவர் தேனி புறப்பட்டுச் சென்றார்.
கலை, சமூகம், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக விளங்குவோருக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. தமிழகத்தில் நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்மபூஷணும், கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகளை இம்மாத இறுதியில் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.
இந்திய ஆஞ்சியோபிளாஸ்டியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் மாத்யூ சாமுவேல் களரிக்கல் (70) காலமானார். சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கேரள மாநிலம், கோட்டயத்தில் பிறந்த அவர், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்று விளங்கினார். அவரது திறமையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை 2000ம் ஆண்டில் வழங்கி கவுரவித்தது.
ஜோதிராவ் & சாவித்ரிபாய் பூலே குறித்து உருவாகியிருக்கும் பாலிவுட் படமான ‘பூலே’வுக்கு CBFC கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த அனுராக் காஷ்யப், CBFCயில் இருக்கும் பிராமணர்களை கடுமையாக சாடியிருந்தார். அதில் ஒருவர், பிராமணர்கள் உங்களை விட மேல் என்று கமெண்ட் செய்ய, கடுப்பான காஷ்யப், நான் பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் என்று கமெண்ட் செய்தார்.
மே மாதம் ராகு கிரகம் கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி இடப்பெயர்ச்சி ஆகின்றனர். சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசியில் ராகு பெயர்ச்சி ஆவது மேஷம், மிதுனம், கடகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பண லாபம், முன்னேற்றம், வெளிநாட்டுப் பயணம் என பல நல்ல விஷயங்கள் நடக்கலாம் என கூறுகின்றனர்.
இன்று உலகளவில் கொண்டாடப்படும் IPL 2008-ல் இதே நாளில் தான் தொடங்கியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றது. அன்று கேப்டனாக அறிமுகமான பலர் இன்று பயிற்சியாளர்களாகவும், கமெண்டேட்டர்களாகவும் மாறிவிட்டனர். அன்றும் இன்றும் கேப்டனாக இருப்பவர் தல தோனி மட்டுமே. 18 ஆண்டுகளாக சென்னை அணியை தோளில் சுமந்து வருகிறார் தோனி.
கோவையில் கல்லூரி மாணவிக்கு CEO பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவி, அதே கல்லூரியில் பணிபுரிந்து கொண்டு படித்து வந்துள்ளார். அக்கல்லூரியின் CEO-வான பிரசன்னா, செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன், கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூருவில் நடைபெறவிருந்த RCB, PBKS இடையேயான ஐபிஎல் போட்டி மழையால் தாமதமாகியிருக்கிறது. இன்னமும் மழை தொடர்வதால், போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர். இரவு 10.54 மணிக்கு போட்டியை தொடங்கினால் கூட 5 ஒவர் போட்டியாக இது நடைபெறும். அதனை மீறினால், போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பிரித்தளிக்கப்படும்.
₹2000-க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு GST வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. GPay, PhonePe மூலம் ₹2000-க்கு மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் நிதியமைச்சகம், அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று கறாராக தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயம் விஜயநகர பேரரசின் மன்னரான 2ம் தேவராயர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. நாணயத்தின் முன் பகுதியில் யானை ஓடுவது போலவும், மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ‘கன தனய காரு’ என கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.