India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிஹாரில் அடுத்த வாரம் தேர்தலை வைத்து கொண்டு ராகுல், பிரசார களத்திற்கு செல்லாதது காங்கிரஸ் கட்சியினரையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பாஜக, ஜேடியூ தலைவர்கள், ராகுல் காந்தி அச்சத்தில் ஓடி ஒளிந்து கொண்டதாக சாடி வருகின்றனர். ஏற்கெனவே கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் RJD, காங்கிரஸ் 10 தொகுதியில் எதிர்த்து போட்டியிடுவதால் கூட்டணியின் ஒற்றுமையின்மை என பேசுபொருளாகியுள்ளது.

வருண்குமார் IPS, தனக்கெதிராக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என MHC-ல் சீமான் தெரிவித்துள்ளார். வருண்குமார் மனநல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவர் எப்படி IPS ஆனார் என்றும், பதில் மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார். வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் சிறை சென்றவர் தான் வருண்குமார் என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.

தேமுதிக, 8 தொகுதிகள் என்ற உடன்படிக்கையுடன் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011 தேர்தலுக்கு பிறகு எந்த தேர்தலிலும் வெற்றி பெறாததால் 2026 தேர்தலை தேமுதிக மிக முக்கியமானதாக கருதுகிறது. இதனால், வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியில் சேர நிர்வாகிகள் தலைமைக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மற்றொருபுறம் ராமதாஸை திமுக கூட்டணியில் சேர்க்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தட்டையான வயிற்றை பெற Bicycle Crunches பண்ணுங்க ★தரையில் மல்லாந்து நேராக படுக்கவும். 2 கைகளையும் தலையின் பின்னால் வைத்து, 2 கால்களையும் முட்டிவரை மடக்கி வைக்கவும். இப்போது, இடது காலை மார்பு நோக்கி கொண்டு வரும்போது, வலது முழங்கை அதை தொடும் வகையில் உடலை மடக்கவும். அடுத்து வலது காலை கொண்டு வரும்போது, இடது முழங்கையை தொடவும். இப்படி மாறி மாறி செய்யவும். ஒரு நிமிடத்திற்கு 5–6 முறை செய்யலாம்.

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க, ஜப்பான் PM சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்த டிரம்ப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியா – பாக்., மோதல் உள்பட 7 போர்களை தான் நிறுத்தியதாகவும் இன்று வரை டிரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில் தான், ஜப்பான் PM மூலம் மீண்டும் நோபல் பரிசு கோரிக்கை எழுந்துள்ளது.

*சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
*உடற்பருமன் அதிகரிக்கலாம்.
*Leptin என்ற ஹார்மோன் அளவு குறைவதால், பசியுணர்வு அதிகமாகி, அளவுக்கு அதிகமான உணவை எடுக்க நேரிடும்.
*வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
*தினமும் காலை உணவை தவிர்ப்பதால், மதிய உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். *காலை உணவை தவிர்ப்பவர்கள், பெரும்பாலும் ஸ்நாக்ஸ் பிரியர்களாக இருப்பர் என ஆய்வுகள் கூறுகிறது.

கரூர் துயரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஆறுதல் கூறியது இயற்கையான ஒன்று என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். ஆனால், அனுமதி பெற்றும் கூட நினைத்த நேரத்தில் அரசியல் தலைவர்களால் ஒரு இடத்திற்கு செல்ல முடியவில்லை என்பது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்த்து அனைத்து கட்சி கூட்டம் போடும் திமுக, மழைநீர் வடிகால் பிரச்னையை சரிசெய்வதற்கு கூட்டம் போட்டதுண்டா என்றும் கேள்வி எழுப்பினார்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் இந்த 3 தாவரங்களை நடுவது வீட்டிற்கு செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும் எனப்படுகிறது.
*துளசி: வீட்டின் முற்றத்திலோ அல்லது கிழக்கு திசையிலோ துளசி செடியை வைத்திருப்பது சிறந்தது *மணி ப்ளாண்ட்: வீட்டின் தென்கிழக்கு திசையில் வைத்திருப்பது நல்லது *நெல்லிக்காய் மரம்: வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். SHARE IT.

வங்கக்கடலில் உருவான <<18135063>>மொன்தா<<>> புயல், நள்ளிரவு 12:30 மணிக்கு கரையைக் கடந்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI-க்கு மாற்றியதை எதிர்த்து, TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், புதிய இடையீட்டு மனுவை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, SC-ல் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை CBI விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கரூர் துயர வழக்கு போன்று, CBI விசாரணையை கண்காணிக்க Retd நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.