News October 29, 2025

பாஜகவுக்கு ஆதரவாக EC செயல்படுகிறது: ஜோதிமணி

image

பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் SIR நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும், ஆனால் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விஷயத்தில் பாஜகவின் துரோகத்திற்கு அதிமுக துணை போக கூடாது என்றும் வலியுறுத்திள்ளார்.

News October 29, 2025

தகதகவென மின்னும் மாளவிகா

image

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தொடர்ச்சியாக இன்ஸ்டாவில், போட்டோஸை பதிவு செய்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்திய போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில், மாளவிகா, பொன்னொளியில் மலர்ந்த முகத்துடன், உயிர் பெற்ற ஓவியமாக, பிரகாசமாக ஒளிர்கிறார். உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

News October 29, 2025

EPS தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

image

தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில், EPS தலைமையில், பூத் கமிட்டி அமைக்க நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், வரும் நவ.2-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 28, 2025

உணவு வீணடிக்கும் நாடுகளில் இந்தியா எந்த இடம்?

image

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் (UNEP) அமைப்பின்படி, உணவுகள் அதிகளவில் வீணடிக்கப்படும் நாடுகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சராசரியாக ஆண்டுக்கு எந்தெந்த நாடுகளில், எவ்வளவு உணவுகள் வீணாகிறது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உணவு வீணாவதை தவிர்க்க என்ன செய்யலாம்? உங்கள் ஐடியாவை கமெண்ட்ல சொல்லுங்க.

News October 28, 2025

ஜே.பி.நட்டாவுக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம்

image

TN விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய உரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நடப்பு சம்பா பருவத்தில் பயிர் சாகுபடிக்கான யூரியா, டி.ஏ.பி உரங்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6.94 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 28, 2025

திறனாய்வு தேர்வு… பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பங்கள் டவுன்லோடு செய்யப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, நாளை முதல் பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவ.4 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

SIR நடவடிக்கைக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

image

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முழுமனதுடன் வரவேற்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தகுதியுள்ளவர்களுக்கு ஓட்டுரிமை உறுதி செய்யப்படும் என்றும் போலியான வாக்காளர்கள் முற்றிலும் நீக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். SIR நடவடிக்கையானது, நேர்மையான வாக்காளர்களுக்கு நம்பிக்கையையும், புதிதாக சேரும் நபர்களுக்கு ஊக்கத்தையும் அளிக்கும் என்று SM-ல் பதிவிட்டுள்ளார்.

News October 28, 2025

கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரொம்ப ஈஸி

image

LPG சிலிண்டர்களை இனி ஈசியாக வாட்ஸ்அப்பிலும் புக் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து ‘HI’ அல்லது ‘Refill’ என்று மெசேஜ் செய்தாலே போதும். புக் செய்வது, டெலிவரி டிராக் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் 24 மணி நேரமும் வாட்ஸ்அப்பில் பெறலாம். பாரத் – 1800 22 4344, Indane – 75888 88824, HP- 92222 01122 என்ற எண்களில் வாட்ஸ்அப் செய்யலாம். SHARE IT.

News October 28, 2025

உலகை விட்டு மறைந்தார்

image

நடிகரும் பாடலாசிரியருமான கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு(102) நேற்று அதிகாலை காலமானார். தஞ்சை புது காரியாப்பட்டியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள், கிராமத்தினர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, இன்று சிவசங்குவின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்தனர். அதன்பின், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. RIP

News October 28, 2025

Aggressive அபிஷேக்கை எதிர்கொள்ள தயார்: மார்ஷ்

image

IND vs AUS மோதும் முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், Aggressive பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மாவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதாக ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். மிகவும் திறமை வாய்ந்தவர் அபிஷேக் என பாராட்டியுள்ளார். அவர் நிச்சயம் எங்களுக்கு சவாலாக இருப்பார் எனவும், இதுபோன்ற வீரர்களை எதிர்கொண்டுதான், தங்களின் திறனை பரிசோதிக்க முடியும் என்றும் மார்ஷ் கூறியுள்ளார்.

error: Content is protected !!