India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடிகரும் பாடலாசிரியருமான கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு(102) நேற்று அதிகாலை காலமானார். தஞ்சை புது காரியாப்பட்டியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள், கிராமத்தினர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, இன்று சிவசங்குவின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்தனர். அதன்பின், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. RIP

IND vs AUS மோதும் முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், Aggressive பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மாவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதாக ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். மிகவும் திறமை வாய்ந்தவர் அபிஷேக் என பாராட்டியுள்ளார். அவர் நிச்சயம் எங்களுக்கு சவாலாக இருப்பார் எனவும், இதுபோன்ற வீரர்களை எதிர்கொண்டுதான், தங்களின் திறனை பரிசோதிக்க முடியும் என்றும் மார்ஷ் கூறியுள்ளார்.

தவெக நிர்வாகக் குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் N.ஆனந்த் அறிவித்துள்ளார். இதில் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம், 2026 தேர்தல் வியூகம், கட்சியை வலுப்படுத்துதல், தொண்டர் படை உருவாக்கம் குறித்து
ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. விஜய் அறிவித்த புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குழந்தைகள் அடம்பிடிக்கும்போது நீங்கள் அவர்களை அடித்திருப்பீர்கள். இது தவறு என தெரிந்தும் மன்னிப்பு கேட்காமல் அப்படியே கடந்தும் சென்றிருப்பீர்கள். இதை கவனிக்கும் உங்கள் குழந்தையும், தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மறுக்கின்றனர். எனவே, உங்கள் குழந்தையிடம் நீங்கள் முதலில் மன்னிப்பு கேட்டு பழகுங்கள். இதன்மூலம் மரியாதையையும், மன்னிப்பு கேட்கும் குணத்தையும் அவர்கள் எளிதில் கற்றுக்கொள்வர். SHARE.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு வரும் 31-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றி விழாவில், அபிஷன் ஜீவிந்த் தனது காதலியை அறிமுகப்படுத்தி திருமணத்திற்கு தயாரா என்று அவரிடம் கேட்டிருந்தார். காதலியும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனிடையே, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ தயாரிப்பாளர் அபிஷன் ஜீவிந்திற்கு கல்யாண பரிசாக BMW கார் வழங்கியுள்ளார்.

மொன்தா புயல் கரையை கடந்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கை, ராணிப்பேட்டை, வேலூர், கோவை, திருப்பூர், தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!

நமது தினசரி பழக்கவழக்கங்கள் மூலம் மனதை தெளிவுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். கவனச் சிதறல்களை கட்டுப்படுத்தி, மன தெளிவை அதிகரிப்பது, அன்றாடம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு என்னென்ன பழக்கங்களை கடைப்பிடிக்கலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த டிப்ஸை, கமெண்ட்ல சொல்லுங்க.

பிஹாரில் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு மாதம் ₹2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பழைய ஓய்வூதிய திட்டம், வீட்டிற்கு ஒரு அரசு வேலை, ஒவ்வொருவருக்கும் ₹25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகளிர் உரிமை தொகை உயர்த்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். அதன்படி, நவ.1-ம் தேதி அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேவர் ஜெயந்தியையொட்டி அக்.30-ல் சிவகங்கை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ‘ஜன் சுராஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, வரவிருக்கும் தேர்தலை சந்திக்க உள்ளார். இச்சூழலில், பிஹார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 2 மாநிலங்களில் அவர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த 3 நாள்களுக்குள் அவர் விளக்கம் அளிக்க ECI உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.