News October 28, 2025

தீவிர புயல்.. 13 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

மொன்தா புயல் கரையை கடந்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கை, ராணிப்பேட்டை, வேலூர், கோவை, திருப்பூர், தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!

News October 28, 2025

மன ஆரோக்கியம் பெற சில டிப்ஸ்

image

நமது தினசரி பழக்கவழக்கங்கள் மூலம் மனதை தெளிவுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். கவனச் சிதறல்களை கட்டுப்படுத்தி, மன தெளிவை அதிகரிப்பது, அன்றாடம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு என்னென்ன பழக்கங்களை கடைப்பிடிக்கலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த டிப்ஸை, கமெண்ட்ல சொல்லுங்க.

News October 28, 2025

மகளிருக்கு ₹2,500 உரிமை தொகை.. குட் நியூஸ்

image

பிஹாரில் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு மாதம் ₹2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பழைய ஓய்வூதிய திட்டம், வீட்டிற்கு ஒரு அரசு வேலை, ஒவ்வொருவருக்கும் ₹25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகளிர் உரிமை தொகை உயர்த்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

News October 28, 2025

சற்றுமுன்: பள்ளிகளுக்கு இங்கெல்லாம் விடுமுறை

image

ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். அதன்படி, நவ.1-ம் தேதி அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேவர் ஜெயந்தியையொட்டி அக்.30-ல் சிவகங்கை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

2 மாநிலங்களில் வாக்குரிமை: PK-வை சுற்றும் சர்ச்சை

image

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ‘ஜன் சுராஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, வரவிருக்கும் தேர்தலை சந்திக்க உள்ளார். இச்சூழலில், பிஹார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 2 மாநிலங்களில் அவர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த 3 நாள்களுக்குள் அவர் விளக்கம் அளிக்க ECI உத்தரவிட்டுள்ளது.

News October 28, 2025

தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகள்

image

தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், சரியான உணவுகளைத் தேர்வு செய்வதும் அவசியம். எளிதாக கரையக்கூடிய நார்ச்சத்து, குறைந்த கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்டால் எளிதாக குறைக்கலாம். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த உணவை, கமெண்ட்ல சொல்லுங்க.

News October 28, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு புதிய அப்டேட்

image

5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலம் வரை வைத்திருப்பவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள். ஆனால், விண்ணப்பிக்கும்போது நில ஆவண விவரங்கள் கேட்கப்பட்டிருக்காது. இதனால், தங்களுக்கு ₹1,000 கிடைக்குமா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் அச்சப்பட தேவையில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களுக்கு நவம்பரில் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளதாம். SHARE IT

News October 28, 2025

BREAKING: கரையை கடக்கத் தொடங்கியது புயல்

image

மொன்தா புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே சற்றுநேரத்திற்கு முன்பு கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையை கடக்க 3 – 4 மணி நேரம் ஆகலாம் என IMD கணித்துள்ளது. புயல் எதிரொலியாக ஆந்திரா, ஒடிசா, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 28, 2025

ஓய்வு பெறுகிறாரா ரஜினி? சோகத்தில் ரசிகர்கள்

image

சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அபூர்வ ராகங்களில் கமலுடன் நடித்து திரையுலக பயணத்தை தொடங்கியது போல, நெல்சன் இயக்கத்தில் அவருடன் நடித்து ஓய்வு பெற ரஜினி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதை விரிவாக்க பணிகளில் நெல்சன் ஈடுபட்டுள்ளதாகவும், படப்பிடிப்பு 2027-ல் தொடங்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

News October 28, 2025

இன்று இரவு இந்த நேரத்தில் வெளியே வராதீங்க

image

தீவிரமடைந்துள்ள மொன்தா புயல் இன்றிரவு ஆந்திராவின் பாலகொல்லு அருகே கரையை கடக்கும் என IMD கணித்துள்ளது. இரவு 9 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கும் என்றும், இரவு 11 மணிக்குள் முழுவதுமாக கரையை கடந்துவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள்!

error: Content is protected !!